என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கூலி படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், நடிகர் ஷோபின் ஷாஹிர் தனது குழந்தைகளுடன் மோனிகா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை ஷோபின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.  

    • இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 17.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

    இந்த கார் தற்போது எம்பவர்டு +A 45, எம்பவர்டு +A 45 டார்க், மற்றும் எம்பவர்டு +A 45 ரெட் டார்க் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ. 17.29 லட்சம், ரூ. 17.49 லட்சம் மற்றும் ரூ. 17.49 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ADAS உடன் கூடிய நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் சென்டரிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

    நெக்சான் எலெக்ட்ரிக் மாடலின் டார்க் மற்றும் ரெட் டார்க் மாடல்களைப் பொறுத்தவரை, இந்த வேரியண்ட்களில் பிளாக் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் ஃபுல் பிளாக் தீம் (டார்க் எடிஷன்) அல்லது பிளாக் மற்றும் ரெட் தீம் (ரெட் டார்க் எடிஷன்) ஆகியவை அடங்கும்.



    இத்துடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புறம் சன் ப்ளைண்டுகள், சரவுண்ட் லைட்கள், V2V மற்றும் V2L தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

    ADAS கொண்ட புதிய டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 45kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    • இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
    • இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.
    • புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கான்செப்ட் மாடல் "எபிக்" காரை அறிமுகம் செய்துள்ளது. எபிக் காரின் உற்பத்தி மாடல் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு வாக்கில் உலகளவில் அறிமுகமாக உள்ளது. மேலும் இது நிறுவனத்தின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

    ஸ்கோடாவின் அதிநவீன வடிவமைப்பு மொழியை முழுமையாக ஏற்றுக்கொண்ட முதல் மாடல் எபிக் ஆகும். இது மினிமலிஸ்ட் ஸ்டைலிங் மற்றும் காம்பேக்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. 4.1 மீட்டர் நீளத்தில், இந்த காம்பாக்ட் எஸ்யூவி ஐந்து பயணிகளை அமர வைக்க முடியும் மற்றும் விசாலமான 475 லிட்டர் பூட் இடவசதியை வழங்குகிறது. ஸ்கோடா நிறுவனம் புதிய எபிக் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் WLTP-தரத்தில் 425 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது.

    விலையை பொறுத்தவரை, புதிய எபிக் அதன் ICE வெர்ஷனான காமிக் அருகில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.

    வெளிப்புறத்தில், புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய T-வடிவ LED DRLகள் மற்றும் லோ-செட் ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரே நிற ஸ்பாய்லருடன் ஒரு வலுவான பம்பர் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புற கேபினில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பல்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் ஹாப்டிக் ஸ்க்ரோல் வீல்களுடன் கூடிய பொத்தான்கள் உள்ளன. ஸ்கோடா எபிக் மாடல் ஃபோக்ஸ்வாகனின் நவர்ரா ஆலையில், குழுவின் எலெக்ட்ரிக் அர்பன் கார் ஃபேமிலி திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படும். ஸ்கோடாவின் உலகளாவிய மின்சார வாகன வரிசையில் எபிக் மாடல் எல்ராக் மற்றும் என்யக் எலெக்ட்ரிக் மாடல்களுடன் இணைந்து, நிறுவனத்தின் உத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்.

    • அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது.
    • மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.

    மதுரை:

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

    தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் இந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழ் சமூகம் ஒற்றுமையாக வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். நாட்டுப்பற்று உள்ள ராணுவ வீரராக இருந்திருக்கிறார். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது.

    சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதால் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர் பதவி ஏற்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. முன்னாள் துணை ஜனாதிபதி தன்கரை வெளியில் கொண்டு வர வேண்டும்.

    தேசம் முன்னேறுவதற்கு நேரு முதல் சோனியா காந்தி வரை கொண்டு வந்த திட்டங்கள் பின்னடைவை நோக்கி செல்கிறது. ராகுல் காந்தி பீகாரில் வாக்குத் திருட்டை பற்றி பேசியதை போல், குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலும் இங்கு எதுவும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா என பிரதமர் தான் சொல்ல வேண்டும்.

    அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது. விஜய்க்கு இருக்கும் அளவுகோல் தான் இ.பி.எஸ்.க்கும் இருக்கும் அது தான் எங்களின் வேண்டுகோள்.

    உறவாடி கெடுப்பது பா.ஜ.க.வின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகு மாநிலம் சிதைந்து போகும். அதன் பின்பு அதில் மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை இ.பி.எஸ். தான் ஆட்சியில் இருந்த போது வைக்காமல் அமைதியாக இருந்தார். அப்போதே அதை செய்திருக்கலாம். அரசியலுக்காக தானே பேசுகிறார். உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் தேர்தல் வரும் போது ஏன் பேச வேண்டும் முன்பே ஏன் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 14-ந் தேதி எதிர்கொள்கிறது.

    ஆசிய கோப்பை தொடர் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வரும் 14-ந் தேதி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக்கோரிய உச்சநீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த மனுவில், நாட்டு நலனை விட கிரிக்கெடை மேலானதாக நினைக்ககூடாது என சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.

    மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எதிர்மறையான கருத்தை பிரதிபலிக்கும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதனை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறட்டம் எனவும் தெரிவித்துள்ளது.

    • நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இன்னும் சில மாதங்களில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ளது.

    பீகாரில் ரூ.7,616 கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    நெடுஞ்சாலை, ரயில் திட்டங்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பீகார் தேர்தலை மனதில் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
    • ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் தர்மர் எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், த.வெ.க. சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், மதுரை மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.தங்க பாண்டியன், கல்லணை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலர்விழி பாலா, மதன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், 24 எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 ஆயிரத்து 400 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை தவிர 45 பறக்கும் படை வாகனங்கள், நவீன கேமராவுடன் 2 டிரோன்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன.

    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
    • ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.

    அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி+ குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!' என உறுதி ஏற்கிறோம்!

    * நான், தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், 'பெண்கள்- விவசாயிகள் - மீனவர்கள்- நெசவாளர்கள்- தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.



    • கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர்.
    • கைது செய்யப்பட்டர்களில் பலர் ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.

    டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆல் ஈர்க்கப்பட்டு ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கைது செய்யப்பட்டர்களில் பலர் ரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தில் போலீசார் தீவிர சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

    • மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
    • அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறைமுகமாக தாக்கி விமர்சித்து இருந்தார். ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில்,

    பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள்; அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும். மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?

    எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றி விடுவார்கள்.ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

    ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனம் குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என்றார்.

    இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமாரின் தாய் காலமானது குறித்து பேசியதற்கு மன்னிக்க வேண்டும். தன்னால் நேரில் செல்ல இயலவில்லை. அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் அனைவரின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார். 

    • சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள்.
    • எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது.

    மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூகம் சார்ந்து ஒவ்வொருவரும் பேசுவார்கள். ஒரு சமூகத்தினர் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றும், ஒரு சமூகத்தினர் இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் என்பார்கள்.

    * எங்கள் நிலைப்பாடு எந்த தாத்தா பெயரும் வேண்டாம். எங்களுக்கு ஒரு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் வைக்க வேண்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

    * சாதாரண குடிமகளான கண்ணகி கால் சிலம்பை உடைத்தபோது, அரசவையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நினைத்தானே அவன் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு பெருமை, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.

    * நீங்கள் வைப்பதாக இருந்தால் நான் போராடி பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை வைக்க வேண்டும் என்று சண்டை போடுவேன். இல்லையென்றால் நான் வந்தால் வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×