என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
- அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
- ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இந்த ஆய்வை வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்நிலையில், செல்போன் திரைகளை (screens) அதிக நேரம் பார்ப்பதால் குழந்தைகளுக்கு இதய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (Journal of the American Heart Association) இந்த ஆய்வை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக நேரம் செல்போன் மற்றும் தொலைக்காட்சி திரைகளைப் பார்ப்பதால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற இதய வளர்சிதை மாற்ற ஆபத்துக்கள் அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.
அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.
- மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள்.
- 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கடலூர் வழியாக பயணத்தை மேற்கொண்டனர். இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர்.
கடலூர் சொத்திகுப்பம் பகுதி அருகே இவர்கள் சென்றபோது காரில் இருந்தவர்கள் மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள். 4 வீல் டிரைவ் கார் என்பதால் இந்த கார் மணலில் செல்லும் என்று இவர்கள் மணல் பரப்பு வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது.
அந்தப் போட்டியில் போர் வீல் டிரைவ் கார் மணலில் மட்டுமல்ல கடலிலும் செல்லும் என அதில் ஒருவர் கூற காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் திடீரென கடலுக்குள் காரை இறக்கினார். சிறிது தூரம் சென்ற கார் திடீரென கடலில் நின்று விட்டது. கடலில் தத்தளித்த இவர்களை அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக படகில் இருந்து இறங்கி 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காரை காவல்துறை உதவியுடன் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது. காரில் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர்.
- அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஆறு, ஏழு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக எதுவும் நடக்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏன்? என்றால் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய், ஆட்சியில் பங்கு என்று கூறியதால் அவருடன் யார் இணைவார்கள் என்று பலராலும் உற்று நோக்கப்பட்டது.
ஆனால் நாம் நினைப்பதற்கு மாறாக தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாக நிகழும் சம்பவங்களால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என்றால் மிகையாகாது. அது குறித்து பார்ப்போம்...
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகல்
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்தது. அன்றில் இருந்து அமைதியாக இருந்த டி.டி.வி. தினகரன் கடந்த வாரம் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. அதற்கேற்ப பா.ஜ.க. செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றாக இணைய முயற்சி எடுத்த மத்திய மந்திரி அமித்ஷாவின் திட்டம் தோல்வியடைந்தது. அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம். கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு நயினார் நாகேந்திரனும் பதில் அளித்து இருந்தார்.
* அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பயணித்து வரும் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து செப்.5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்த செங்கோட்டையன் அன்று செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் கூறுகையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். ஆனால், அதற்கு அடுத்தநாளே அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் வகித்து வந்த பொறுப்புகளில் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர். மேலும், அ.தி.மு.க.வில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சியே என்று தெரிவித்த செங்கோட்டையன் கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை என்றார்.
ஆனால் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் ஆதரவாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசிவருகிறார்.
* மல்லை சத்யா ம.தி.மு.க.-வில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
சில காலமாகவே ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன். 32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.
* பா.ம.க.-வில் இருந்து அன்புமணி நீக்கம்
பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இதனால் இருதரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படவில்லை. இதையடுத்து இருதரப்பினரும் மாறிமாறி பா.ம.க.வில் இருந்து ஆதரவாளர்களை உத்தரவிட்டனர். இதனிடையே, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியுள்ளார் ராமதாஸ். இதனால் பா.ம.க. யாருடைய தலைமையின் கீழ் செயல்படுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கொண்ட அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகளில் நிலவும் உட்கட்சி பூசலால் அக்கட்சி தொண்டர்களிடையே சலிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக- பாஜக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசியல் நிலவரத்தால் 4 முனை என்பது இன்னும் எத்தனை முனையாகும் என்பதே அனைவர் மனதிலும் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு ஏற்ப வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
- ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான்.
- நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான்.
மதுரை:
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அவரிடம் நிருபர்கள் எழுப் பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே: இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து?
ப: சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார்களா? அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவரை தவிர இவர் தெரிந்தவராக இருக்கிறார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.
மரபுப்படி அந்த இடத்திற்கு வருவதற்காக அவருக்கு வாழ்த்துகள். பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க. தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.
குஜராத் கலவரத்தை தி.மு.க. கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்.
இல.கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன.? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை. எல்.முருகன் மற்றும் ஆளுநர் ரவியை கூட அனுப்பி இருக்கலாம். இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.
கே: சனிக்கிழமைகளை மட்டும் தேர்ந்தெடுத்து விஜய் பிரசாரம் மேற்கொள்வது குறித்து?
ப: அது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது.
கே: திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து?
ப: படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.
கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன?
ப: கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான். ஊழல் லஞ்சமா, உண்மை நேர்மையா, பிள்ளைகள் வாழ்வதற்கு வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளை அடித்தால் இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.
கே: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து?
ப: 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அப்போது நமக்கு தெரியவில்லை. அதைப் போராடி தான் தடுப்போம், தரையில் எடுத்து முடித்துவிட்டு தற்போது கடலுக்குள் செல்கிறார்கள்.
இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.
கே: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து?
ப: எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
கே: திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து?
ப: அது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக அமையும்.
கே: ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன?
ப: ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல், எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.
- இந்திய இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்தன. இதனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்தது.
அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது ரஷியா. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், ரஷிய ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்கவேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
- வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார்.
- சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர். கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
அண்மையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருந்தார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. உட்கட்சி பூசல்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.
- நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரம் எனக் கூறப்பட்ட ஓசூர் விருப்பமான நகரமாக உருவெடுத்தது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன.
* ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
* 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடியில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது.
* ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.
* தொழிற்சாலைகள் ஓசூரை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன.
* ஓசூர் அறிவுசார் முனையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
* வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது.
* நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
- நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான்.
பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ராமதாஸ் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது.
* அன்புமணி தரப்பு கூட்டிய பா.ம.க. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
* அன்புமணி பதவிகாலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
* கட்சி விதிகளின் அடிப்படையில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார்.
* கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
* நிர்வாக பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவரான அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம்.
* பா.ம.க. என்ற ஜனநாயக அமைப்பில் விதிகளின் அடிப்படையில் தான் கட்சியை நடத்த முடியும்.
* பா.ம.க. தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.
* பா.ம.க.வின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும்.
* உளவு பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை.
* அன்புமணி உளவு பார்த்திருந்தால் கட்சியில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது.
* வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.
* கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துகளை உங்களிடம் கூற வந்துள்ளேன்.
* நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான் என்றார்.
- தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
- 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
* தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக ஓசூர் திகழ்கிறது.
* தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
* அடுத்து வரக்கூடிய மாதங்களுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு டார்கெட்.
* 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொழில் வளர்ச்சியை ஓசூர் கண்டு வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூலி படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் ஷோபின் ஷாஹிர் தனது குழந்தைகளுடன் மோனிகா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை ஷோபின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
- இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களில் ADAS ஆப்ஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 17.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
இந்த கார் தற்போது எம்பவர்டு +A 45, எம்பவர்டு +A 45 டார்க், மற்றும் எம்பவர்டு +A 45 ரெட் டார்க் உள்ளிட்ட மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ. 17.29 லட்சம், ரூ. 17.49 லட்சம் மற்றும் ரூ. 17.49 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ADAS உடன் கூடிய நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் சென்டரிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
நெக்சான் எலெக்ட்ரிக் மாடலின் டார்க் மற்றும் ரெட் டார்க் மாடல்களைப் பொறுத்தவரை, இந்த வேரியண்ட்களில் பிளாக் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் ஃபுல் பிளாக் தீம் (டார்க் எடிஷன்) அல்லது பிளாக் மற்றும் ரெட் தீம் (ரெட் டார்க் எடிஷன்) ஆகியவை அடங்கும்.

இத்துடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புறம் சன் ப்ளைண்டுகள், சரவுண்ட் லைட்கள், V2V மற்றும் V2L தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
ADAS கொண்ட புதிய டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 45kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 143bhp பவர் மற்றும் 215Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.






