என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிகரிக்கும் தொழில் வளர்ச்சி... 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன- மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
- 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
* தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக ஓசூர் திகழ்கிறது.
* தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
* அடுத்து வரக்கூடிய மாதங்களுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு டார்கெட்.
* 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொழில் வளர்ச்சியை ஓசூர் கண்டு வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.






