என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை- வழக்கறிஞர் பாலு
- கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
- நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான்.
பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ராமதாஸ் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது.
* அன்புமணி தரப்பு கூட்டிய பா.ம.க. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
* அன்புமணி பதவிகாலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
* கட்சி விதிகளின் அடிப்படையில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார்.
* கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
* நிர்வாக பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவரான அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம்.
* பா.ம.க. என்ற ஜனநாயக அமைப்பில் விதிகளின் அடிப்படையில் தான் கட்சியை நடத்த முடியும்.
* பா.ம.க. தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.
* பா.ம.க.வின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும்.
* உளவு பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை.
* அன்புமணி உளவு பார்த்திருந்தால் கட்சியில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது.
* வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.
* கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துகளை உங்களிடம் கூற வந்துள்ளேன்.
* நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான் என்றார்.






