என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆர்.பி.உதயகுமாரின் தாய் குறித்த கருத்து - மன்னிப்பு கோரினார் செங்கோட்டையன்
    X

    ஆர்.பி.உதயகுமாரின் தாய் குறித்த கருத்து - மன்னிப்பு கோரினார் செங்கோட்டையன்

    • மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
    • அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறைமுகமாக தாக்கி விமர்சித்து இருந்தார். ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில்,

    பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள்; அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும். மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?

    எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றி விடுவார்கள்.ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

    ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனம் குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என்றார்.

    இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமாரின் தாய் காலமானது குறித்து பேசியதற்கு மன்னிக்க வேண்டும். தன்னால் நேரில் செல்ல இயலவில்லை. அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் அனைவரின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.

    Next Story
    ×