என் மலர்tooltip icon

    இந்தியா

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற நிலையில் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.

    இதற்கிடையே ரேகா குப்தா வெளியிட்ட இரங்கல் எக்ஸ் பதிவில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
    • காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான காவல்துறை விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

    இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    முன்னதாக சம்பவம் நேற்று அரியானாவில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.

    டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார். 

    • காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
    • மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதன் பின் காயமடைந்தர்வகளை நேரில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று அமித் ஷா ஆய்வு செய்து வருகிறார்.

    இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, இன்று மாலை சுமார் 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே ஒரு ஹூண்டாய் ஐ20 காரில் வெடிப்பு ஏற்பட்டது.

    இந்த வெடிப்பின் காரணமாக, 3-4 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மக்கள் காயமடைந்தனர். மருத்துவமனை வட்டாரங்களின்படி, இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாங்கள் அனைத்து கோணங்களிலும், முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளோம். வெடிப்புச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு , தேசிய புலனாய்வு முகமை குழு, சிறப்புப் பாதுகாப்புப் குழு, மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருகின்றனர்.

    எங்கள் முகமைகள் குறுகிய காலத்திற்குள் வெடிப்புக்கான காரணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.

    வெடிப்புச் செய்தி கிடைத்தவுடன் உடனடியாக எனக்கு பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முதற்கட்ட தகவல்களைப் பெற்ற பிறகு, நான் பிரதமருக்கும் விளக்கமளித்தேன்.

    நான் இங்கிருந்து சம்பவ இடத்தைப் பார்வையிடச் செல்கிறேன், மேலும் நாளை காலை, உள்துறை அமைச்சகத்தில் மூத்த அதிகாரிகள் குழுவுடன் ஒரு கூட்டம் நடத்தப்படும். இந்த சம்பவத்தில் மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்" என்று விளக்கம் அளித்தார். 

    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நேரில் பார்வையிட்ட பின் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா பேட்டியளித்தார்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பின் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா,

    மெட்ரோ நிலையத்தின் முதலாம் வாயில் அருகே மாருதி ஈகோ கார் முதலில் வெடித்தது. அதில் பல நபர்கள் பயணித்ததாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. கார் மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது வெடித்துள்ளது. எனவே அருகில் இருந்த மற்ற கார்கள், ஆட்டோக்களிலும் தீ பரவியுள்ளது.

    மாலை 6.52 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகளும் தடயவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விசாரணைக்க்குப் பின் உண்மை தெரியவரும்" என்று தெரிவித்தார்.  

    • உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
    • அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்" என்று தெரிவித்துள்ளார். 

    குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் அமித் ஷா, விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்தை அடுத்ததாகப் பார்வையிடவுள்ளார்.

    மேலும் சம்பவம் தொடர்பாக காவல் துறை ஆணையர் சதீஷ் கோல்சாவிடம் அமித் ஷா கேட்டறிந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது. 

    • NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடிப்புச் செய்தி மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இந்த துயர விபத்தில் பல அப்பாவி உயிர்களை இழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

    இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயருற்ற குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன். மேலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் குறித்து மாநில காவல் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

    டெல்லியில் உளவுத்துறை தலைமை அதிகாரியுடனும் நிலைமை குறித்து அமித்ஷா கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்

    கார் வெடிப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. NIA உள்ளிட்ட ஏஜென்சிகள் ஆய்வு செய்கின்றன என்று டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    • டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது
    • இந்த குண்டு வெடிப்பிற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறதா?

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியின் பாதுகாப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புச் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. சிலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன, இது மிகவும் வருத்தமளிக்கிறது.

    இந்த வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையும் அரசாங்கமும் உடனடியாக விசாரிக்க வேண்டும். டெல்லியின் பாதுகாப்பு குறித்த அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    • செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது
    • மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    ×