என் மலர்tooltip icon

    இந்தியா

    • செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
    • மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன

    தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன என்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்துள்ளது. 

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

    முன்னதாக இன்று, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அதீல் அகமது ராதர் என்ற டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டாக்டர் அதீல் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் வெடிமருந்துகளை அரியானா மாநிலம் பரீதாபாத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவர் சொன்ன இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 300 கிலோ ஆர்.டி.எஸ். வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான டாக்டர் அதீல் அகமது தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியை சேர்ந்த முசாமில் ஷகீல் என்ற மற்றொரு டாக்டருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் வாடகைக்கு இருந்த வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாக்டர்கள் அதீல் அகமது, முகாமில் ஷகீல் ஆகிய 2 பேரையுமே போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் இந்த திட்டம் தொடங்கியது.
    • 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர்.

    மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "மைசூர் பருப்பு ஒரு கிலோ 68 ரூபாய், சர்க்கரை ஒரு கிலோ 38 ரூபாய், உப்பு ஒரு கிலோ 10 ரூபாய். இது சாத்தியமா? ஆம். அசாமில் இது சாத்தியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "இந்த விலை ஜனவரி மாதத்தில் இருந்து மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தியோதயா என்பது எங்களுடைய இலக்கு. நோக்கம். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக நாங்கள் புதிய அளவு கோலை உருவாக்கியுள்ளோம். 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு கிடைக்கும். இவைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    33 ஆயிரம் நியாய விலைக்கடையில் இந்த திட்டம் தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.

    நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 69-க்கும், சர்க்கரை ரூபாய் 38-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் வாங்கிக் கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 60-க்கும், சர்க்கரை ரூபாய் 30-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜம்மு-காஷ்மீர் டாக்டரின் லாக்கரில் துப்பாக்கி, வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அவர் கொடுத்த தகவலின்பேரல் அரியானாவில் 2500 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து சிக்கியது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அதீல் அகமது ராதர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டாக்டர் ஆவார்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டாக்டர் அதீல் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தீவிரவாதிகளுடன் சதித் திட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இந்த வெடிமருந்துகளை அரியானா மாநிலம் பரீதாபாத்தில் பதுக்கி வைத்திருந்ததாக டாக்டர் அதீல் அகமது ராதர் தெரிவித்தார். இதையடுத்து அவர் சொன்ன இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 300 கிலோ ஆர்.டி.எஸ். வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான டாக்டர் அதீல் அகமது தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    இந்தியாவை தகர்ப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைப்பதிலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் அதீல் அகமது முக்கிய பங்காற்றி உள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியை சேர்ந்த முசாமில் ஷகீல் என்ற மற்றொரு டாக்டருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் வாடகைக்கு இருந்த வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சமீப ஆண்டுகளாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அவ்வப்போது வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடிமருந்துகளை விட தற்போது கைப்பற்றி இருப்பது அதிகம் ஆகும். இந்த நிலையில் டாக்டர்கள் அதீல் அகமது, முகாமில் ஷகீல் ஆகிய 2 பேரையுமே போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த 2 டாக்டர்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைதான டாக்டர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு வெளியே அரியானா பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

    • விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா?
    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்?

    பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய்பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? ஆனால் தடை செய்யப்பட்ட பொதுப்பகுதியில் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கூறி தொழுகை நடத்திய போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்தார்.

    • சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம்.
    • எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது

    இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

    பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ்-ல் பிராமணர், வேறு எந்த சாதியினர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் யாரும் குறிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் RSS-ல் இணையலாம். அவர்கள் தங்களது சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம். எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது என்றும் தேசிய கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்" என்று தெரிவித்தார். 

    • அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.
    • சசிதரூரின் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்து கொண்டு சசிதரூர் எம்.பி. அடிக்கடி பாராட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.

    நேரு, இந்திரா காந்தியை மேற்கோள்காட்டி அத்வானியை புகழ்ந்தார். அத்வானியின் நீண்ட கால சேவையை ஒரு அத்தியாயத்தை கொண்டு தீர்மானிப்பது நியாயமற்றது. அவருக்கும் அதே மரியாதையை நாம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    சசிதரூரின் இந்த கருத்து தொடர்பாக அவர் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் பவன் கேரா கூறும்போது,"இது சசிதரூரின் தனிப்பட்ட கருத்து. அவர் எப்போதும் போலவே தனக்காக பேசுகிறார்.

    அவரது சமீபத்திய அறிக்கையில் இருந்து காங்கிரஸ் விலகி இருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்து கொண்டு அவர் தொடர்ந்து இப்படி செயல்டுவது சரியானதல்ல" என்றார்.

    • அமெரிக்காவை நம்ப முடியாது.
    • சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது.

    மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான மிகவும் பாராட்டப்பட்ட நட்பு எங்கே? என்று பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பினார்.

    சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அஃபேர்ஸ் நடத்திய உரையாடலில் பேசிய ரகுராம் ராஜன், "கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருவதாக நான் நினைக்கிறேன். அது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துவிட்டு, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது. அப்படியெனில் மோடிக்கும் டிரம்பிற்கும் இடையே பாராட்டப்பட்ட நட்பு எங்கே?

    அமெரிக்காவை நம்ப முடியாது. 1970களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கிஸ்ஸிங்கரும் 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் பக்கம் சாய்த்தனர். அவர்கள் போரை நிறுத்தவும், பாகிஸ்தானுக்கு உதவவும் ஏழாவது கடற்படையை அனுப்பினர். அதனால் இந்தியர்கள் மிகவும் கோபமடைந்தனர். அப்போது சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது. அது இந்தியாவை 25 ஆண்டுகளாக சோவியத் முகாமில் வைத்திருந்தது" என்று தெரிவித்தார்.

    • எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு.
    • பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மீது பலரும் குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேவஸ்தான முன்னாள் அதிகாரி உள்பட சிலரை, தங்கம் மாயம் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தேவஸ்தான புதிய தலைவராக மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கூறுகையில், எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு. அரசின் உத்தரவு கிடைக்கப் பெற்றதும் பொறுப்பேற்பேன். வாரியத்தின் செயல்பாட்டை மேலும் தொழில் முறைமயமாக்குவதற்கு பாடுபடுவேன். ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.

    பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் நேர்மையற்ற மக்களை விரட்டியடித்து பக்தர்களின் குறைகளை தீர்ப்போம். சபரிமலை சீசன் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். சர்ச்சைகள் எங்கள் கவனம் அல்ல. அரசாங்கத்தின் நம்பிக்கையை நான் நிலைநிறுத்துவேன் என்றார்.

    • இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.
    • 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியது.

    அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் அளவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து டெல்லியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தியா கேட் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெற்றோர்களும், குழந்தைகளும் இதில் கலந்து கொண்டனர். எங்களுக்கு சுவாசிக்க உதவுங்கள் என்ற வாசகத்துடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாசு நெருக்கடியின் அடையாள நினைவூட்டல்களான நெபுலைசர்கள் மற்றும் மருந்து சீட்டுகளுடன் பெண்கள் பங்கேற்றனர்.

    இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அதையும் மீறி மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 60 முதல் 80 பேர் வரை கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் பங்கேற்ற ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறும்போது, 'காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக காற்றின் தரக் குறியீட்டுத் திரைகளில் தண்ணீரை பா.ஜ.க. அரசு தெளித்தது. தரவுகளை கையாளுகிறது. இது பா.ஜ.க.வின் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் குறைக்கிறது.

    பா.ஜ.க.வினர் கூட எங்களுடன் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் காற்று சுத்திகரிப்பான்களுடன் வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள், காற்றும், நீரும் அரசியலின் விஷயம் அல்ல என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

    • ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்.
    • பா.ஜ.க.வுடன் ஜே.எம்.எம். மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது.

    பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லல்லுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது.

    இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகளை கொண்ட இக்கூட்டணியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பீகார் தேர்தலில் ஜே.எம்.எம். கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கப்படவில்லை.

    இதன் காரணமாக, நவம்பர் 14-ந் தேதி வெளியாகும் பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு ஜார்க்கண்ட் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஜே.எம்.எம். விலகும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.

    இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில அமைச்சரும் ஜே.எம்.எம். மூத்த தலைவருமான சுதிப்யகுமார் கூறுகையில், "ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஆர்.ஜே.டி. காங்கிரசுக்கு நாங்கள் இடமளித்துள்ளோம். பீகார் தேர்தலில் இருந்து நாங்கள் விலக இந்த கட்சிகளே காரணம். இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்" என்றார்.

    இந்நிலையில் ஜார்க்கண்டில் ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் விலக்கப்பட்டால் பா.ஜ.க.வுடன் ஜே.எம்.எம். மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருதப்படுகிறது. ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
    • கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.

    மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.

    இதை பார்த்த சச்சின் ராவ் முகாமின் நடத்தை விதிகளின்படி யார் கூட்டத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களுக்கான தண்டனை உண்டு. அப்போதுதான் கட்சி தொண்டர்களும் ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள் என்று சிரித்தபடி சொன்னார்.

    நேராக தனது சீட்டில் உட்கார சென்ற ராகுல் காந்தி சச்சின் ராவை பார்த்து இதற்கான அர்த்தம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

    கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக 10 முறை தண்டால் போட வேண்டும் என்று சொல்லி சச்சின் ராவ் மீண்டும் சிரித்தார்.

    தலைவர் சொன்னதை கேட்ட ராகுல் காந்தி கூட்டத்தின் நடுவே தண்டால் எடுத்தார். இதை பார்த்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கைதட்டி உற்சாபடுத்தி ஆரவார கோஷம் எழுப்பினர். இது கூட்டத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர் பேசிய ராகுல்காந்தி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த ஆண்டு அரியானா தேர்தலில் நடந்த வாக்கு திருட்டை பற்றி விளக்கினார்.

    மேலும், அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் தேர்தல் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • தேசிய புல​னாய்வு முகமை பி.எப்.ஐ. அமைப்​புக்கு சொந்த​மான இடங்களில் சோதனை நடத்​தி​யது.
    • பி.எப்.ஐ. அமைப்​பைச் சேர்ந்த முக்​கிய உறுப்​பினர்கள் 28 பேரை அமலாக்​கத் துறை கைது செய்​துள்​ளது.

    பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

    மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.

    இந்நிலையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்.டி.பி.ஐ.) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

    இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.

    ×