என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது.
    • வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் டெல்லி கடமைப்பாதையில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. தற்போது அங்கு தினமும் ஒத்திகை நடந்து வருகிறது. இதில் முழு ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடமைப்பாதையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது. இது தவிர பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த ஆண்டு விழாவில் இடம்பெறுகின்றன.

    குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் குடியரசு தினவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.

    மேலும் ஒரு சிறப்பு அம்சமாக ரோபோ நாய்கள் (மியூல்) படைப்பிரிவும் இந்த ஆண்டு இடம்பெறுகிறது. இந்திய ராணுவம் சமீபத்தில் 100 ரோபோ நாய்களை ஆயுதப்படையில் சேர்த்துள்ளது. இந்த ரோபோக்களில் துப்பாக்கியும் பொருத்தப்பட்டு உள்ளது.

    படிகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஏறவும், தடைகளை கடக்கவும் இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மைனஸ் 55 டிகிரி குளிரிலும் ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் 15 கிலோ எடையை இது சுமந்து செல்லும்.

    இவை, கடமைப்பாதை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையிலும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
    • பிரதமர் மோடி புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பா.ஜ.க. வரலாறு படைத்தது. அப்போது அந்த வெற்றியை பற்றி கருத்து தெரிவித்த போது, விரைவில் திருவனந்தபுரம் வர உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    அதன்படி பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பிறகு எம்.ஜி. சாலை பாளையம், தியாகிகள் நினைவிட சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் கிழக்கு கோட்டை வரை ரோடு ஷோ நடத்துகிறார்.

    பிறகு புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம்-ஐதராபாத் ஆகிய வழித்தடங்களில் 3 அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர்-திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    • சுமார் 1,500 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்
    • அனல் தா என்கிற பதிராம் மாஜி தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 15 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

    சரண்டா காட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிஆர்பிஎஃப் கோப்ரா படையைச் சேர்ந்த சுமார் 1,500 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் கும்டி என்ற பகுதியில் நேற்று துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது.

    கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவராணா அனல் தா என்கிற பதிராம் மாஜி என்பவரும் அடங்குவார். அனல் தா தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது

    அவருடன் சேர்த்து உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.   

    • வன்முறையைத் தூண்டியதாகச் சஜ்ஜன் குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது

    1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், முன்னாள் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார்.

    வன்முறையைத் தூண்டியதாகச் சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று கூறி, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று அவரை விடுவித்தது.

    1984 நவம்பர் 1-ஆம் தேதி ஜனக்புரியில் சோஹன் சிங் மற்றும் அவரது மருமகன் அவதார் சிங் கொல்லப்பட்டது மற்றும் நவம்பர் 2-ஆம் தேதி விகாஸ்புரியில் குர்சரண் சிங் என்பவர் எரிக்கப்பட்டது தொடர்பான 2 எப்.ஐ.ஆர் அடிப்படையில் இந்த வழக்கு நடைபெற்றது.

    இந்நிலையில் குர்சரண் சிங்கின் சகோதரர் மஞ்சித் கூறுகையில், "பல தசாப்தங்களாக நாங்கள் நடத்திய சட்டப் போராட்டம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

    எனது சகோதரர் தனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகக் கிடந்து 2008-ல் இறந்தார். நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

    நேற்று தீர்ப்பு வெளியானவுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீக்கிய அமைப்பினர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    • பிரேசில் அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என்றார் .

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியை பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டி சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

    அப்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு உறவில் இந்த ஆண்டு புதிய உச்சம் அடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என பதிவிட்டுள்ளார்.

    • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.
    • பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

    நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • MGNREGA இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை.
    • MGNREGA திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ளது.

    மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதொழிலாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "MGNREGA என்பது வெறும் ஒரு திட்டமல்ல, அது இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை.

    மோடி அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் அடித்தளத்தையே தகர்க்க முயல்கிறது.

    கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, அவர்களைப் பசிக்குத் தள்ளுவது இந்த அரசின் கொடூரமான முகம்.

    காங்கிரஸ் கட்சி இதை ஒருபோதும் அனுமதிக்காது; ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம்." என்று தெரிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய கார்கே,"MGNREGA திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதிலும், புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பதிலும் இந்தத் திட்டம் மிக முக்கியப் பங்கு வகித்தது.

    இதை ரத்து செய்வது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது ஏழைகளுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய துரோகம்.

    ஏழைகளுக்குப் பயனளிக்கும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்குவதையே இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

    வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி எழுப்பும். மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

    நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்லாமல், மக்கள் மன்றத்திலும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.

    • கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்தது டுவென்டி20 கட்சி
    • முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி பிரிவும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது

    கேரளாவின் கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சாபு எம். ஜேக்கப் தலைமையிலான 'டுவென்டி 20' கட்சி, அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள நிலையில் இந்த கூட்டணி இறுதியாகி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருடன் ஜேக்கப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, இந்த முடிவை இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர்.

    கேரளாவில் நிலவும் "தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு" மாற்றாகவும், மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைந்து "வளர்ந்த கேரளா" என்ற இலக்கை அடையவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சாபு ஜேக்கப் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்த டுவென்டி20 கட்சி, முதன்முறையாக ஒரு முன்னணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இது குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தேர்தல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டுவென்டி20 கட்சியுடன் இணைந்து, முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி பிரிவும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை, விமான நிறுவனம் 2,507 விமானங்களை ரத்து செய்தது
    • ரூ.50 கோடியை வங்கி உத்தரவாதமாக டெபாசிட் செய்ய டிஜிசிஏ பரிந்துரை

    இண்டிகோவின் துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் விமான நிறுவனத்திற்கு ரூ.20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    எதிர்காலத்திலும் இதே நிலைமை தொடர்ந்தாலோ அல்லது இதே போன்ற மீறல்கள் மீண்டும் நிகழ்ந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை இயக்க அதிகாரி, விமான நடவடிக்கைகளின் துணைத் தலைவர் மற்றும் ஒரு வள ஆய்வாளர் உள்ளிட்ட மூத்த விமான நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விமான நிறுவனத்திடம் ரூ.50 கோடியை வங்கி உத்தரவாதமாக டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், விமான நிறுவனம் அதன் செயல்பாடுகளில் தேவையான திருத்தங்களைச் செய்தவுடன் அதைத் திரும்பப் பெற கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெருமளவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, மற்றும் அதன் இழப்பீடு குறித்து தொடரப்பட்ட பொதுநல மனு விசாரணையில் மத்திய அரசு இந்த தகவல்களை  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் ஏராளமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் தாமதங்கள் போன்ற காரணங்களால் நிறுவனத்திற்கு டிஜிசிஏ மொத்தம் ரூ.22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை, விமான நிறுவனம் 2,507 விமானங்களை ரத்து செய்தது மற்றும் 1,852 விமானங்கள் தாமதமாக வந்தன. இதனால் நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது. 

    • பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம்.
    • பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.

     "பி.சி.சி.ஐ-ஆல் நடத்தப்படும் கிரிக்கெட் அணியை 'டீம் இந்தியா'என்றோ அல்லது 'இந்திய தேசிய கிரிக்கெட் அணி' என்றோ அழைப்பதற்கு பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று விமர்சித்த உச்சநீதிமன்றம், தேவையற்ற வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் சுமையைக் கூட்டுவதாகவும் மனுதாரரை கண்டித்தது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ரீபக் கன்சல் தாக்கல் செய்த பொதுநல மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

    மேலும் டெல்லி உயர் நீதிமன்றமே முன்மாதிரியான அபராதம் விதித்திருக்க வேண்டும் என்றும், "உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காதது நியாயமற்றது. முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படவில்லை என்றால், இது போன்ற தேவையற்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதை எப்படி நிறுத்துவது?" என்று அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க நீதிமன்றம் முற்பட்டது. ஆனால் மனுதாரரின் வழக்கறிஞர் விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று அந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.

    விசாரணையின்போது மனுமீது கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்,

    "இது நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். இது என்ன மாதிரியான வாதம்? அந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று விளையாடும் அந்த அணி, நாட்டைப் பற்றி தவறாகச் சித்தரிக்கிறதா? பி.சி.சி.ஐ-யை விட்டுவிடுங்கள், தூர்தர்ஷனோ அல்லது வேறு ஏதேனும் அதிகார அமைப்போ அதை 'டீம் இந்தியா' என்று காட்டினால், அது இந்திய அணி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது.

    இதனிடையே பி.சி.சி.ஐ-க்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதாக தெரிவித்த நீதிபதி பாக்சி, "மத்திய அரசு இங்கே வந்திருந்தால் ஒரு பிரச்சனை இருந்திருக்கும், ஆனால் பி.சி.சி.ஐ-க்கு மிகச்சிறந்த ஆதரவு உள்ளது. இப்போது பரவலான கட்டுப்பாடு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.

    பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

    பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம். அது ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் ஒரு "பொது அதிகார அமைப்பாகவோ" அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் இந்திய அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாத நிலையில், பி.சி.சி.ஐ அணியை 'டீம் இந்தியா' அல்லது 'இந்திய தேசிய அணி' என்று குறிப்பிடுவது பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது.

    இந்த நடைமுறையானது தவறான சித்தரிப்புக்கு சமமானதாகும். மேலும் இது தேசியப் பெயர், தேசியக் கொடி மற்றும் சின்னங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் 'சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950' மற்றும் 'இந்தியக் கொடி விதிமுறை, 2002' ஆகியவற்றை மீறும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

    "இந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணியை, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? அது 'டீம் இந்தியா' இல்லையா? அது 'டீம் இந்தியா' இல்லை என்றால், ஏன் இல்லை என்பதை எங்களுக்குத் தயவுசெய்து விளக்குங்கள்," என்று நீதிபதி துஷார் ராவ் கெடேலா கேள்வி எழுப்பினார்.

    டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவும் இந்த வழக்கை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டதோடு, "இது நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். ஏதேனும் ஒரு விளையாட்டில் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய அணியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றுக்குச் செல்லும் இந்தியக் குழுவினர் அவர்கள் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையா? ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் என எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி அது அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.  

    • குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
    • உயிருக்கு போராடிய குரங்குகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொடுத்த விஷத்தை குடித்து 15 குரங்குகள் உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 80 குரங்குகள் மயக்கமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

    குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடிய குரங்குகளை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    மர்ம நபர்கள் குரங்குகளை இப்பகுதிக்கு கொண்டு வந்து விஷம் வைத்து கொன்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 

    • தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்
    • போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா-கமல் மௌலா மசூதியில் நாளை, வசந்த பஞ்சமியை முன்னிட்டு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நாளை போஜ்சாலா வளாகத்தில் தொழுகை மற்றும் பூஜைகள் நடத்த இரு சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2003, ஏப்ரல் 7-ம் தேதி இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை செய்த ஏற்பாட்டின்படி, போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.

    இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜ்சாலா நினைவிடத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி தேவி) கோயில் என்று கருதுகின்றனர். அதேவேளையில், முஸ்லிம் சமூகத்தினர் இதனை 'கமல் மௌலா மசூதி' என்று அழைக்கின்றனர். 

    ×