என் மலர்
இந்தியா
- வருங்கால வைப்புநிதியில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
- இனி கல்வி தேவைக்காக 10 முறையும், திருமண தேவைக்காக 5 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
இதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன.
தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
கல்வி தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
பேரிடர், வேலையின்மை போன்ற சிறப்பு சூழ்நிலை பிரிவில் தேவைக்கான காரணத்தை குறிப்பிடத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
- அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.
தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.
* அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?
* சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
* சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?
* மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.
* மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.
ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.
அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர்.
- ராஜஸ்தானிலும் இருமமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த மருந்துகள் ஏதாவது நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே புகாரளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.
முன்னதாக கலப்பட மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது.
- கூகுள் நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.
விசாகப்பட்டினம்:
உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்த நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் ஏஐ மையம் அமைக்க உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏஐ மையம் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
- அயோத்தியில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகாரிகள் தண்டனை கொடுத்தனர்.
- தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவரில் தலைகீழாக நிற்க வைத்தது சர்ச்சையை கிளப்பியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே சாலையோர வியாபாரிகள் சிலர் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்தனர்.
அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை கோவில் பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் சுவரில் தலைகீழாக நிற்க வைத்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
- ஐக்கிய ஜனதா தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் பேட்டியிடுகிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 101 இடங்களில் 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி தாராபூரில் போட்டியிடுகிறார். அமைசசர் மங்கல் பாண்டே சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதனால் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
மும்பை:
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
- தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்?
தமிழ்நாட்டை முன்மாதிரியாக எடுத்து கொண்டு கர்நாடகாவில் உள்ள அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாட்டில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது போல், கர்நாடகாவிலும் தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்ய தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "தமிழ்நாட்டில் என்ன விதி இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, நாங்கள் சொல்வதெல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை தனியார் இடங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். அவர்கள் அதை தங்கள் வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். ஆனால், வகுப்புவாத விதைகளை விதைத்து மக்களை அச்சுறுத்தும் இந்த நிகழ்ச்சி நல்லதல்ல.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தியாவின் சிறப்பு குடிமக்களா? அவர்கள் எப்படி குச்சிகளுடன் அணிவகுப்பு நடத்த முடியும்? வேறு எந்த சமூகத்தினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஓ.பி.சி.க்கள், தங்கள் சமூக வண்ணச் சட்டைகளை அணிந்துகொண்டு குச்சிகளைப் பிடித்து அணிவகுப்பு நடத்தினால், யாராவது அதை அனுமதிப்பார்களா? அவர்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார்கள், அதற்காக அவர்கள் இதை தொடர வேண்டும் என்று அர்த்தமல்ல, இல்லையா? சட்டப்படி அவர்கள் அனுமதி பெறட்டும். அவர்கள் இந்திய அரசியலமைப்பை விட பெரியவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்
இந்நிலையில், தனக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது தொலைபேசி நிறுத்தாமல் ஒலிக்கிறது. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை நான் கேள்வி கேட்கவும் தடுக்கவும் துணிந்ததால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக மிரட்டல்கள் மற்றும் மோசமான துஷ்பிரயோகங்கள் நிறைந்த அழைப்புகள் வருகிறது.
ஆனால் இதற்காக நான் அதிர்ச்சியடையவில்லை மற்றும் ஆச்சரியப்படவும் இல்லை. மகாத்மா காந்தி அல்லது பாபாசாகேப் அம்பேத்கரையே ஆர்.எஸ்.எஸ். விட்டுவைக்காதபோது, அவர்கள் ஏன் என்னை விட்டுவைக்க வேண்டும்?
அச்சுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட அவதூறுகள் என்னை அமைதிப்படுத்தும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.
புத்தர், பசவண்ணா மற்றும் பாபாசாகேப் அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. சமத்துவம், பகுத்தறிவு மற்றும் இரக்கத்தில் வேரூன்றிய சமூகம் மற்றும் இந்த நாட்டை மிகவும் ஆபத்தான (RSS) வைரஸ்களிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டுள்ளார்.
- சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
- டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.
தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.
* அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?
* சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
* சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?
* மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.
* மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.
ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.
அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
- ஏடிஜிபி பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்
- ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பூரன் குமாரின் மனைவி அம்னீத் குமார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தற்கொலை செய்துகொண்ட ஏடிஜிபி பூரன் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சாதி ரீதியான துன்புறுத்தல் காரணமாக ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சண்டிகரில் உள்ள பூரன் குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் நாட்டிலும் சமூகத்திலும் படிந்துள்ள கறையாகும். மேலும் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்பதற்கு இது சான்றாகும்.
பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு மற்றும் மனுவாத சிந்தனை மனிதநேயம் இறந்துபோகும் அளவுக்கு சமூகத்தை விஷமாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
- கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த பையில் வைர கற்கள் வரிசையாக அடுக்கி மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரபல தொழில் அதிபரும் இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ரா மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தீபாவளி விருந்து வைத்தார். இதில் நீதா அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதா அம்பானி விலை உயர்ந்த வெள்ளி சேலை அணிந்து வந்திருந்தார். அவருடைய காதில் பெரிய மரகத காதணிகள் மற்றும் கையில் விலை உயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஒன்றை வைத்திருந்தார்.
சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்ற இந்த விழாவில் நீதா அம்பானி அணிந்திருந்த சேலை மற்றும் கைப்பை அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்திருந்த சேலையில் இருந்த வெள்ளி ஜரிகை ஜொலித்தது. அவருடைய காதில் அணிந்திருந்த மரகத காதணி அதற்கு ஏற்றார் போல இருந்தது.

இதற்கு மேலாக அவர் வைத்திருந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஆடம்பரமாக ஜொலித்தது. அதன் விலை 2 மில்லியன், தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 17 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 200 ஆகும். இது போன்ற விலை உயர்ந்த பைகள் உலகில் 3 பேரிடம் மட்டுமே உள்ளது. அதில் நீதா அம்பானியும் ஒருவர். இந்த கைப்பையில் 3ஆயிரத்து 25 வைரக் கற்கள் உள்ளன. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த பையில் வைர கற்கள் வரிசையாக அடுக்கி மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் அளவில் வெள்ளி சீக்வின் சேலை மற்றும் வைர கற்களால் ஆன கைப்பையுடன் வலம் வந்த நீதா அம்பானி படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
- தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
- ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.






