search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபா ராம்தேவ்"

    • பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
    • விளம்பரம் வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்தது.

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதிலளிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆசார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே, ஆசார்யா பாலகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதியளிக்கிறது என தெரிவித்தார். அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    அதன்பின், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து, விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
    • சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கைக்கு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

    நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இந்த தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அலோபதி மருந்துகளைக் குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

    பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளோம். நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். மரண தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

    ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் என கூறப்பட்ட இந்த பூங்காவுக்கு முதல்வர் வசுந்த்ரா ராஜே அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில், ஆலை அமைய உள்ள இடம் ஒரு ஆலையத்தின் டிரஸ்டுக்கு சொந்தமானது என்றும், இந்த நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என பின்னர் தெரிய வந்தது. இதனால், உணவுப்பூங்கா அமைப்பதில் முட்டுக்கட்டை விழுந்தது.

    மாநில அரசும் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. தற்போது, மாற்று இடம் தேடப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் புதிய உணவுப்பூங்கா அமைக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 
    உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியேறப் போவதாக பதாஞ்சலி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், உ.பி அரசு அசுர வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. #Patanjali
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் யமுனை விரைவுச்சலை பகுதியில்  6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பதஞ்சலி நிறுவனம்  திட்டமிட்டிருந்தது. இதற்கு யமுனை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து, உ.பி.யில் உணவுப்பூங்கா அமைப்பதை கைவிடுவதாகவும், இந்த தொழிற்சாலையை மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக பதாஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால கிருஷ்ணா நேற்று தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். “பதாஞ்சலி நிறுவனம் மாநிலத்தை விட்டு வெளியே போக விடமாட்டோம். இதற்கு தேவையான எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என அம்மாநில தொழில்துறை மந்திரி சதிஷ் மஹானா தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த விரைவான முடிவால், தனது முந்தைய முடிவை பதாஞ்சலி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க நீண்ட காலம் எடுத்து கொள்ளும் அரசுகள் இருக்கும் நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஒரே நாளில் உ.பி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-க்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய கிம்போ என்ற பெயரிலான ஆப் சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. #KimbhoApp
    புதுடெல்லி:

    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக கிம்போ என்ற பெயரில் இன்று ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

    ஸ்வதேசி (உள்நாட்டு தயாரிப்பு) ஆப் என்ற பில்டப் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

    குறிப்பாக கிம்போ ஆப் இன்ஸ்டால் செய்ததும் ஒன் டைம் பாஸ்வேர்ட் மெசேஜ் உங்களது மொபைலுக்கு வரும். ஆனால், அந்த மெசேஜ்-ல் கூட போலோ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பலர் கிம்போ செயலியை கலாய்த்து வருகின்றனர்.

    போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதனால் போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே, கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து மாயமானது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன. 
    ×