search icon
என் மலர்tooltip icon

    கரூர்

    புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டத்தினை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் அருகில் பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் ரூபா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள்,தி.மு.க. பொறுப்பாளர்கள்,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

     

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து சேலத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார். கரூர் - கோவை நெடுஞ்சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.
    • புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .

    வேலாயுதம்பாளை யம்,

    கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, எழுத்தா ளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்கு றிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன் ,நக ராட்சி கவுன்சிலர்கள் மற்று ம் தி.மு.க. ஒன்றிய செய லாளர், தி.மு.க.வின் மாவ ட்ட, ஒன்றிய, கிளை , நகர, நிர்வாகிகள், தொண்ட ர்கள், பொதும க்கள் மற்றும் புன்னம் சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகள், மற்றும் புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வந்த போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. தலைமையில் கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் கட்சி பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் ,வரவேற்ற னர்.கட்சி பொ றுப்பாளர்கள் அதேபோல் தளவாபாளையம் பகுதிக்கு வந்த கருணாநிதி நூற்றா ண்டு விழா எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை தனி துணை ஆட்சியர் சைபுதீன் ,புகழூர் தாசில்தார் முருகன், மண்மங்கலம் தாசில்தார் குமரேசன் , புகலூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால்,புஞ்சை தோட்ட க்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ரூபா, பேரூர் செயலாளர் முரளிராஜா தலைமையில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் ,அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர்கள், வருவாய்த் துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வை யிட்டனர். அதனைத் தொ டர்ந்து கலைஞர் நூற்றாண்டு தமிழ் தேர் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது. பாது காப்பு பணியில் வேலா யுதம்பா ளையம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • . அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கரூர்,நவ

    கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வெங்கமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 42), அவரது மனைவி செல்வி (45) ஆகியோர் பெரம்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணி (71), திருச்சியை சேர்ந்த சந்திரசேகரன் (68) ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 900-ஐ பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தம்மாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவுதமன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூர் ஜவகர் பஜாரில் காரில் வந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3 போலி தங்க காயின், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணி, சந்திரசேகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

    கைதான 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    • வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையலாம்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு என்ற தலைப்பில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் அமுதா ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    கரூர்

    கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும்,

    ஜவகர்லால் நேரு பேச்சுப்போட்டிக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை ஆகிய தலைப்புகளிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணைஇயக்குனர் வழியாக இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசுகள் வழங்கப்படும்.

    • சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காலை 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோ சன நிலை மாறி குளிர்ச்சி யான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .

    வேலாயு தம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், மூர்த்திபாளையம் ,நன்னியூர், வாங்கல், கடம்பங்குறிச்சி ,நொய்யல், மரவாபாளையம், நன்செய் புகளூர், கந்தம்பாளையம், ஓலப்பா ளையம் ,ஒரம்புப்பா ளையம், ,புகழிமலை, காகி தபுரம், மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காலை 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை வேகமாக கனமழை பெய்தது. பின்னர் மதியம், இரவு தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் ந னைந்து கொண்டு அவதி ப்பட்டு சென்றனர். அதே போல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோ சன நிலை மாறி குளிர்ச்சி யான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது.சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    • மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
    • அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). விவசாயி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வருவதற்காக ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அதே சாலையில் அவருக்கு பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் நொச்சிபா ளையம்

    சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்( 25 ) என்பவர் மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இதில் நிலை தடுமாறி பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது . அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் விபத்து ஏற்படுத்திய தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்ற முதியவர் மீது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

    இது குறித்து வேட்ட மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகே சன் வேலாயு தம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோட்டார் சைக்கிளை அதிகமாக ஓட்டி சென்று முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கோம்புப்பாளையம் பகுதி யை சேர்ந்த குருசாமி (வயது 70) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டி ற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.900- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80- க்கும்,

    அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது. தற்போது நடைபெற்ற குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்க்குதுக்கும், சம்பங்கி கிலோ ரூ.160- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1600-க்கும் விற்பனையானது.

    தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • புகளூரில் மோட்டார் சைக்கிள் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், நவ.23-

    கரூர் மாவட்டம் புகளூர் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கொடியரசு (வயது70). இவர் கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தெய்வானை (66).இருவரும் புகளூர் அன்னை நகரிலிருந்து தளவாபாளையம் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தனர். அன்னை தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, செம்படாபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.இதில் தம்பதிக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாலைபுதூர் வேளாண் கூடத்தில் நிலக்கடலை ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது
    • ஏலத்தில் 25.50 குவிண்டால் நிலக்கடலை விற்பனையானது

    கரூர், நவ. 23-

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.50 குவிண்டால் எடை கொண்ட 77-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.30-க்கும், சராசரி விலையாக ரூ.86.70-க்கும் என ரூ 2லட்சத்து 16ஆயிரத்து 541-க்கு ஏலம் போனது.

    ×