search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையம் பகுதிகளில் - தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
    X

    வேலாயுதம்பாளையம் பகுதிகளில் - தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதி

    • மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காலை 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோ சன நிலை மாறி குளிர்ச்சி யான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .

    வேலாயு தம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், மூர்த்திபாளையம் ,நன்னியூர், வாங்கல், கடம்பங்குறிச்சி ,நொய்யல், மரவாபாளையம், நன்செய் புகளூர், கந்தம்பாளையம், ஓலப்பா ளையம் ,ஒரம்புப்பா ளையம், ,புகழிமலை, காகி தபுரம், மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காலை 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை வேகமாக கனமழை பெய்தது. பின்னர் மதியம், இரவு தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் ந னைந்து கொண்டு அவதி ப்பட்டு சென்றனர். அதே போல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோ சன நிலை மாறி குளிர்ச்சி யான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது.சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×