search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண முகூர்த்தங்களையொட்டி - குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
    X

    திருமண முகூர்த்தங்களையொட்டி - குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

    • பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை ப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டி ற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.900- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80- க்கும்,

    அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.800- க்கும், செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் விற்பனையானது. தற்போது நடைபெற்ற குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்க்குதுக்கும், சம்பங்கி கிலோ ரூ.160- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.290- க்கும், கனகாம்பரம் ரூ.1600-க்கும் விற்பனையானது.

    தற்போது அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×