search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புன்னம் சத்திரம் பகுதியில் - முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
    X

    புன்னம் சத்திரம் பகுதியில் - முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

    • முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.
    • புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .

    வேலாயுதம்பாளை யம்,

    கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, எழுத்தா ளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அல ங்கார ஊர்தி ஈரோடு மாவட்டத்தில் இருந்து புன்னம் சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தது.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்கு றிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன் ,நக ராட்சி கவுன்சிலர்கள் மற்று ம் தி.மு.க. ஒன்றிய செய லாளர், தி.மு.க.வின் மாவ ட்ட, ஒன்றிய, கிளை , நகர, நிர்வாகிகள், தொண்ட ர்கள், பொதும க்கள் மற்றும் புன்னம் சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகள், மற்றும் புன்னம் சத்திரம் அரசினர் மேல்நிலைபள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பார்வை யிடுவத ற்காக வருகை தந்து பார்வையிட்டனர் .

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வந்த போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. தலைமையில் கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் கட்சி பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் ,வரவேற்ற னர்.கட்சி பொ றுப்பாளர்கள் அதேபோல் தளவாபாளையம் பகுதிக்கு வந்த கருணாநிதி நூற்றா ண்டு விழா எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை தனி துணை ஆட்சியர் சைபுதீன் ,புகழூர் தாசில்தார் முருகன், மண்மங்கலம் தாசில்தார் குமரேசன் , புகலூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால்,புஞ்சை தோட்ட க்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ரூபா, பேரூர் செயலாளர் முரளிராஜா தலைமையில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் ,அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர்கள், வருவாய்த் துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வை யிட்டனர். அதனைத் தொ டர்ந்து கலைஞர் நூற்றாண்டு தமிழ் தேர் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றது. பாது காப்பு பணியில் வேலா யுதம்பா ளையம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×