என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 5 வரை மின் தடை செய்யப்படும்.
- தாதன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் மின் வினியோகம் இருக்காது
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை (12-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டி புதூர், முனியபிள்ளைப்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கோட்டூர்ஆவாரம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, தாதன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
- விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் வருகிற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இதற்கு த.வெ.க. நிர்வாகிகளின் அலட்சியமே காரணம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட காமராஜர் வளைவுப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காமராஜர் வளைவுப் பகுதிக்கும் பதில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
- கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலை கோட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. விவசாயியான இவர் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்ற வாலிபருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால் லட்சுமியும், தங்கராசுவும் நெருங்கி பழகினார்கள். கணவர் கொளஞ்சிக்கு தெரியாமல் லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து மனைவி லட்சுமியை கண்டித்த கொளஞ்சி நீ செய்யும் செயலால் என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. பெரிய அவமானமாக உள்ளது. தங்கராசுவுடன் பேசி பழகுவதை நிறுத்திக்கொள் என்று கூறியுள்ளார்.
ஆனால் கணவரின் பேச்சை கேட்காத லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுடன் ஊர் உறங்கிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் உல்லாசமாக இருப்பதை தொடர்ந்துள்ளார். கணவருடன் வீட்டில் ஒன்றாக தூங்கினாலும் லட்சுமியால் தங்கராசுவுடனான தொடர்பை துண்டிக்க முடியவில்லை. பக்கத்து வீடு என்பதால் கணவர் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலன் தங்கராசுவுடன் லட்சுமி தனிமையில் சந்தித்து மறைவான இடங்களில் வைத்து செக்ஸ் இன்பத்தை அனுபவித்து வந்துள்ளார். இதன்படி நேற்று இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்காக சென்ற லட்சுமி கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து நள்ளிரவில் வீட்டுக்கு வா என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து லட்சுமியின் வீட்டுக்கு சென்ற தங்கராசு மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மெய் மறந்த நிலையில் ஆசை தீர உல்லாசம் அனுபவித்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து பார்த்த கொளஞ்சி லட்சுமி வீட்டில் இல்லாததை பார்த்து சந்தேகம் அடைந்தார். இதையடுத்து மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. மனைவி லட்சுமியும், கள்ளக்காதலன் தங்கராசுவும் அரைகுறை ஆடையுடன் கட்டிப்பிடித்து உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த கொளஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவி லட்சுமியையும், கள்ளக்காதலன் தங்கராசுவையும் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்தபடியே உயிருக்கு போராடினார்கள். அப்போது கொளஞ்சியின் வெறி அடங்கவில்லை. 2 பேரின் தலையையும் துண்டித்து எடுத்து கொளஞ்சி அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு மாடியில் இருந்து இறங்கியுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்ற கொளஞ்சி அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற பஸ்சில் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால் கொளஞ்சியின் பையில் இருப்பது என்ன? என்பதை டிரைவரும், கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம் துண்டித்த தலைகளுடன் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி பயணம் செய்து வேலூரில் போய் இறங்கிய கொளஞ்சி நேராக வேலூர் சிறைக்கு சென்றார்.
அங்கு சிறைவாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சென்று பையில் வைத்திருந்த 2 தலைகளையும் காட்டி நடந்த சம்பவத்தை கூலாக கூறியுள்ளார். பையில் இருந்த தலைகளை பார்த்து பதறிய சிறைக் காவலர்கள் பதட்டம் அடைந்தனர். இது பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று கொளஞ்சியை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று லட்சுமி, தங்கராசு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலூருக்கு விரைந்து சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளை மீட்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- முசிறியில் ரத யாத்திரை மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்.
- மணப்பாறை பஸ் நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
திருச்சி:
தே.மு.தி க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கேப்டன் ரத யாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள்( சனிக்கிழமை)திருச்சி வருகிறார்.
பின்னர் அன்றைய தினம் காலை அரிஸ்டோ கார்னர் பகுதியில் உள்ள எல் கே எஸ் மஹாலில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். அதன் பின்னர் மாலையில் முசிறியில் ரத யாத்திரை மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். அதன் பின்னர் இரவு திருச்சியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை (14 ம் தேதி) திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மணப்பாறை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 73 அடி உயர கட்சி கொடி கம்பத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். இந்த கொடிக்கம்பம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மணப்பாறை பஸ் நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டிவி கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர். பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- கடந்த மாதம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை யானை சந்தோஷ் கொண்டாடியது.
- தெப்பக்காடு முகாமின் அடையாள திகழ்ந்த யானை சந்தோசின் மரணம் வனத்துறையினர், பாகன்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு யானையை பராமரிக்க தலா ஒரு பாகன், உதவியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் சிறு, சிறு பணிகள் செய்வதோடு தங்களுக்கு தேவையான பசுந்தீவனத்தை வனப்பகுதியில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.
இந்த முகாமின் அடையாளமாகவும், வனத்துறையினர் மற்றும் அனைத்து பாகன்களின் செல்லப்பிள்ளையாகவும் சந்தோஷ் என்ற 55 வயது யானை திகழ்ந்து வந்தது. இந்த யானை 5 வயதில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த மாதம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை யானை சந்தோஷ் கொண்டாடியது. அப்போது ராகி மற்றும் கொள்ளு கலந்து தயாரிக்கப்பட்ட கேக்கை வனத்துறையினர் வெட்டி யானை சந்தோசுக்கு வழங்கினர். இந்தநிலையில் வயது மூப்பால் உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வந்த யானை சந்தோஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள் உடல் கூறாய்வு செய்த பின் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தெப்பக்காடு முகாமின் அடையாள திகழ்ந்த யானை சந்தோசின் மரணம் வனத்துறையினர், பாகன்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே நீண்ட தந்தம் கொண்ட யானையாக சந்தோஷ் திகழ்ந்தது. சுமார் 1.5 மீட்டர் நீளம் கொண்ட தந்தங்களோடு யானைகள் முகாமில் கம்பீரமாக இந்த யானை வலம் வந்தது. தந்தங்கள் தரையை தொடும் அளவுக்கு நீளமாக இருந்ததால் யானை சந்தோசுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து தந்தங்களை அறுத்து நீளத்தை வனத்துறையினர் குறைத்திருந்தனர்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 13-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14-ந்தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஓசூர், திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது.
- திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டை பற்றி, தெரிந்து கொண்டு முதலீட்டாளர்கள், ஆர்வமாக வருகிறார்கள்.
ஓசூர்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, 1210 கோடி ரூபாய் முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஜெர்மனி, லண்டன் போன்ற ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீட்டோடு தமிழ்நாட்டுக்கு திரும்பிய 3 நாளில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் போய் விட்டு வந்த பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள். இன்றைக்கு இங்கு ரூ.26 ஆயிரம் கோடி முதலீடுகள் கையெழுத்தாகி உள்ளது. நம்மோட சாதனையை நாம்தான் முறியடித்து வருகிறோம். அது மட்டுமல்ல 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 1,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறோம்.
ஓசூர், திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வரைபடத்தில், தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர். வளர்ச்சியின் முகம்.
இந்தியாவை கடந்து உலகத்தை ஈர்க்கும் நகரகமாக ஓசூர் ஒளி வீசுகிறது. அப்படிப்பட்ட ஓசூரில் தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்.
தமிழ்நாடு தொழில்துறையில், இவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்றால், அதுக்கு முக்கிய காரணம் துடிப்பான, இளமையான அமைச்சராக இருக்கக்கூடிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, போன மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன்.
இன்றைக்கு ஓசூரில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, மாலை டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நியூ டெல்டா ஸ்பாட் உற்பத்தி மையத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறேன். அடுத்து வர இருக்கக்கூடிய மாதங்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்திருக்கிறேன்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நாங்கள் 2030-க்குள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிவு செய்தோம். அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்கு தொழில் வளர்ச்சி தான் அடிப்படை.
அதனால்தான் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மிகவும் சிறப்பான வகையில் உருவாக்கி, அவற்றை மேலும் மேலும் மேம்படுத்தி அது மூலமாக தொழில் செய்யக்கூடிய சூழலை வலுப்படுத்துகிறோம்.
அதனால்தான் தமிழ்நாட் டில் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எங்கேயும் இல்லாத வகையில் 11.19 சதவீதத்தை தொட்டுள்ளது. இந்த வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான் முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்களிடம் சந்திப்புகளையும் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டை பற்றி, தெரிந்து கொண்டு முதலீட்டாளர்கள், ஆர்வமாக வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் தொழில் துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்திக்கும்போது நான் சொல்வது ஒன்றுதான்.
அது என்னவென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதுதான். மகிழ்ச்சியாக சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட வகையில் 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. எங்களுடைய குறிக்கோள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும. அதைத்தான் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் தொழில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஓசூர் பார்த்துக் கொண்டு வருகிறது.
ஓசூர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகளை இந்த 4 ஆண்டு காலத்தில் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு காலத்தில், சிறிய தொழில் நகரம் என சொல்லப்பட்ட ஓசூர் இன்று வளர்ச்சி அடைந்து பல தொழிற்சாலைகள் வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதாவது நாட்டின் தொழில் வளர்ச்சி முகமாக ஓசூர் மாறி உள்ளது.
இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் ஓசூருக்கும் தமிழ்நாடு அரசு என்னென்ன செய்துள்ளது என்றால், முதலில் இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்ததில் முக்கியமானது சிப்காட் தொழிற்பூங்கா. 2092 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஓசூர் சிப்காட்டில் 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
2-வது சிறப்பான உள்கட்டமைப்போடு அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பூங்காவில் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க டி.டி.ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3-வதாக சொல்ல வேண்டும் என்றால் சிப்காட் நிறுவனம் 'போர்ட் இங்குபேட்டர்' அமைத்து உள்ளது.
4-வது சூளகிரி பகுதியில் 689 ஏக்கரில் ஒரு தொழிற்பூங்கா. 5-வது பர்கூரில் 1379 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூடிய தொழிற்பூங்கா.
6-வது குருவரப்பள்ளியில் 150 ஏக்கரில் தொழில் பூங்கா ஆகிய தொழிற்பூங்காக்களை சிப்காட் நிறுவனம் நிறுவி இருக்கிறது.
இன்றைக்கு திறந்திருக்கிற ரூ.210 கோடி மதிப்பில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய தொழிற்பூங்காவில் இதுவரை 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
7-வதாக 2728 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு பெறப்பட்டுள்ளது. 6,682 பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. 8-வது தேன்கனிகோட்டை வட்டம் நாகமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிட்கோவுடன் இணைந்து விடியல் ரெசிடென்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக பணியாளர்கள் தங்குவதற்கு 64 ஏக்கரில் தொழிலாளர் குடியிருப்பு கட்டி வருகிறார்கள்.
முதல் கட்டமாக 6 ஆயிரம் பேர் தங்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் மகளிர் பாதுகாப்பு, வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 9-வதாக ஐ.டி. நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்தர ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுக்கான மையமாக ஓசூரை உருவாக்க போகிறோம். மேலும் அறிவுசார் வழித்தட திட்டத்தையும் செயல்படுத்த போகிறோம்.
இதன்மூலம் அறிவுசார் பொருளாதாரம் பெருமளவு அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி நன்கு மேம்படும். 10-வது ஓசூரில் 5 லட்சம் சதுரடியில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல்பார்க் நிறுவப்படுகிறது. இதில் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 11-வது இது எல்லாவற்றுக்காக ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம் தருவோம்.
ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.
இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க ஓசூர் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய பொருத்தமான நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை டிட்டோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பன்னாட்டு விமான நிலையம் மற்றுமொரு புதிய வளர்ச்சிப் பாதையில் ஓசூரை பயணிக்க வைக்கும். இன்னும் பல திட்டங்களை செய்து கொண்டு வருகிறோம். அதனால்தான் மற்ற மாநிலங்களோடு போட்டிபோடும் வகையில் இன்றைக்கு முன்னேறி இருக்கிறது.
அடுத்ததாக அக்டோபர் 9, 10-ந்தேதி கோவையில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
- அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
- மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூகநீதி போராளி தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நாளில் முதலமைச்சரின் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் இங்கு மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர்.
அவருக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ.3 கோடி நிதி ஒதுக்கினோம். அதில் தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் அதனுடைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறந்து வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க., பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்களே அதுபற்றி கூறுங்கள் என்ற நிருபர்கள் கேட்டதற்கு, இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக தான் வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள்.
- 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கடலூர் வழியாக பயணத்தை மேற்கொண்டனர். இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரமுள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர்.
கடலூர் சொத்திகுப்பம் பகுதி அருகே இவர்கள் சென்றபோது காரில் இருந்தவர்கள் மது போதையில் காரை கடற்கரை ஓரமாக மணலில் ஓட்டியுள்ளார்கள். 4 வீல் டிரைவ் கார் என்பதால் இந்த கார் மணலில் செல்லும் என்று இவர்கள் மணல் பரப்பு வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது.
அந்தப் போட்டியில் போர் வீல் டிரைவ் கார் மணலில் மட்டுமல்ல கடலிலும் செல்லும் என அதில் ஒருவர் கூற காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் திடீரென கடலுக்குள் காரை இறக்கினார். சிறிது தூரம் சென்ற கார் திடீரென கடலில் நின்று விட்டது. கடலில் தத்தளித்த இவர்களை அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக படகில் இருந்து இறங்கி 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காரை காவல்துறை உதவியுடன் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது. காரில் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 4 வீல் டிரைவ் காரினை கடலுக்குள் ஓட்டி விஷப்பரிட்சையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர்.
- அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஆறு, ஏழு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக எதுவும் நடக்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏன்? என்றால் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய், ஆட்சியில் பங்கு என்று கூறியதால் அவருடன் யார் இணைவார்கள் என்று பலராலும் உற்று நோக்கப்பட்டது.
ஆனால் நாம் நினைப்பதற்கு மாறாக தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாக நிகழும் சம்பவங்களால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என்றால் மிகையாகாது. அது குறித்து பார்ப்போம்...
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகல்
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்தது. அன்றில் இருந்து அமைதியாக இருந்த டி.டி.வி. தினகரன் கடந்த வாரம் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. அதற்கேற்ப பா.ஜ.க. செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றாக இணைய முயற்சி எடுத்த மத்திய மந்திரி அமித்ஷாவின் திட்டம் தோல்வியடைந்தது. அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம். கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு நயினார் நாகேந்திரனும் பதில் அளித்து இருந்தார்.
* அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பயணித்து வரும் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து செப்.5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்த செங்கோட்டையன் அன்று செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் கூறுகையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். ஆனால், அதற்கு அடுத்தநாளே அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் வகித்து வந்த பொறுப்புகளில் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர். மேலும், அ.தி.மு.க.வில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சியே என்று தெரிவித்த செங்கோட்டையன் கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை என்றார்.
ஆனால் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் ஆதரவாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசிவருகிறார்.
* மல்லை சத்யா ம.தி.மு.க.-வில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
சில காலமாகவே ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன். 32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.
* பா.ம.க.-வில் இருந்து அன்புமணி நீக்கம்
பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இதனால் இருதரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படவில்லை. இதையடுத்து இருதரப்பினரும் மாறிமாறி பா.ம.க.வில் இருந்து ஆதரவாளர்களை உத்தரவிட்டனர். இதனிடையே, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியுள்ளார் ராமதாஸ். இதனால் பா.ம.க. யாருடைய தலைமையின் கீழ் செயல்படுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கொண்ட அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகளில் நிலவும் உட்கட்சி பூசலால் அக்கட்சி தொண்டர்களிடையே சலிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக- பாஜக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசியல் நிலவரத்தால் 4 முனை என்பது இன்னும் எத்தனை முனையாகும் என்பதே அனைவர் மனதிலும் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு ஏற்ப வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
- அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது.
ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தடுப்புகளை தாண்டி கொட்டிய தண்ணீரானது, அடிவார பகுதியில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது. அந்த தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 52 அடி தண்ணீர் உள்ளது.
அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.






