என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர்.
- வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலசொக்கநாதபுரம்:
திருப்பூரை சேர்ந்தவர் முகமதுரியாஸ் (வயது27). இவர் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள மறையூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.
இவர்கள் நட்பு அதிகரித்த நிலையில் தனது குடும்ப சூழ்நிலையை சிறுமி தெரிவித்து ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அப்போது திருப்பூருக்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் சிறுமியை வரவழைத்து கூட்டம் அதிகம் இல்லாத தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் தன்னுடனே அவர் தங்க வைத்துள்ளார். இதனிடையே சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தன்னை வேலைக்கு வரச்சொல்லி முகமது ரியாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் முகமது ரியாசை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை முடிந்த நிலையில் முகமது ரியாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட சேவை வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது.
- கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு ஏலம் போனது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வடக்கிபாளையம், புரவிபாளையம், டி.நல்லிக்கவுண்டன் பாளையம், ஜமீன் காளியா புரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. அதன் விளைச்சல் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிகமாக இருந்ததால் அறுவடைக்கு தயாரானது. இதன் காரணமாக கடந்த 3 வாரத்துக்கும் மேலாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகமாகி குறைந்த விலைக்கு விற்பனையானது.
அதிலும் கடந்த ஒரு வாரமாக மார்க்கெட்டில் தக்காளி விலை இறக்கத்துடன் இருப்பதுடன், அதற்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு ஏலம் போனது.
இதனால் விவசாயிகள் பலர் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள தக்காளிகளை பறிக்காமல் அப்படியே செடியிலேயே விட்டு விட்டனர்.
முத்தூர், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, வடக்கிபாளையம், சூலக்கல் உள்ளிட்ட இடங்களில் செடிகளில் தக்காளி பழுத்த நிலையில் கொத்துக் கொத்தாக தொங்குகின்றன.
விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தக்காளிக்கு உரிய விலை இல்லாமல் போனதால் பல கிராமங்களில் தக்காளியை செடியில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டு விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
- மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை NDA பொதுக்கூட்டம் நடைபெறுகிறது
- NDA பொதுக்கூட்டத்தில் பெரியார், அண்ணா படம் இடம்பெற்றது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பெரியார், அண்ணா படம் இடம்பெற்றது. பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜகவின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பெரியார் படம் இருந்தது இணையத்தில் பேசுபொருளானது
இந்நிலையில், NDA கூட்ட அரங்கின் முகப்பில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அதிமுக அகற்றியுள்ளது. பெரியாரை கொள்கை தலைவர்களில் ஒருவராக கொண்டுள்ள அதிமுகவின் இந்த நடவடிக்கை இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.
- இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்து விடும்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நடிகையும் பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தயாராக தான் உள்ளது. நாளை மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் தமிழ்நாடு வருவது தேர்தலுக்காக மட்டுமில்லை. எத்தனையோ முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்து சென்று உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமருக்கு அன்பு, பாசம் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம் குறித்து ஆரம்ப காலத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை இதனால் அவர் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். அவருக்கு லாபம் கிடைக்கும் இடத்தில் அவர் போய் உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறித்து தெரியவரும்.
விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை அரசியல் ஆக்கக்கூடாது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சனைகளை நாம் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர்களுக்கு அந்த தைரியமும் கிடையாது. அவர்கள் தி.மு.க.விடவுமும் பேரம் பேசுகிறார்கள். விஜய்யிடமும் பேரம் பேசுகிறார்கள். அவர்களுக்கு யாரிடம் இருந்து லாபம் அதிகமாக வருகிறதோ அவர்களிடம் சென்று சேர்ந்து விடுவார்கள்.
இனி மத்தியில் காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் இருக்கிறது. தற்போது தான் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஆட்சியில் பங்கு தர மாட்டோம் எனக் கூறி உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்து விடும். காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் இந்த ஒரு தேர்தலில் தனியாக நின்று பாருங்கள். ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற தகுதி இருக்கிறதா என தெரிந்து விடும்.
பா.ஜ.க.வை தயவுசெய்து காங்கிரசுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். பா.ஜ.க.விற்கு உள்ள தைரியம் இங்கு எவருக்கும் வராது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் குஷ்பு போட்டியிடுகிறாரா? இல்லையா? என்பது முக்கியம் கிடையாது. எங்கள் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி மக்களிடத்தில் சேவை செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம் என்றார்.
- தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் NDA கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊழல் அதிகரித்துள்ளது.
* தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டார் ஓ.பன்னீர்செல்வம் என்றார்.
- சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.
- கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று இரவு வருகிறார். சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதே போன்று பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- திராவிட வெற்றிக்கழக பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது.
- தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.
சென்னை:
திராவிட வெற்றிக்கழக பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவராக மலை சத்யா, பொதுச் செயலாளராக கராத்தே பழனிசாமி, பொருளாளராக வாசுகி பெரியார் தாசன், துணைப் பொதுச் செயலாளராக வக்கீல் ஆனந்தராஜ், ஆரணி அரசு பிரபாகரன், பாண்டியராஜன், கோவை ஆனந்த், மாநில செயலாளர்கள் பார்த்திபன், அரியலூர் மாணிக்கவாசு, சங்கரன்கோவில் ஆறுமுகசாமி, பாலசுப்பிரமணியம், கோடை திரவியம், மதுரை பரமேஸ்வரன், குரோம்பேட்டை முஜிபுர் ரகுமான், ஆட்சி மன்ற குழு உறுப்பினராக செல்வ பாண்டியன், வல்லம் கோபி, காஞ்சி வளையாபதி, கவுரி குமார், வக்கீல் சசிகுமார், பாஸ்கர், மணிகண்டன் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். சட்டமன்ற பொது தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு திராவிட வெற்றி கழகம் ஆதரவை தெரிவித்துக் கொள்வது. மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது.
- தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கும் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை 2-வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.15,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5200 உயர்ந்துள்ளது.
தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-02-2026- ஒரு கிராம் ரூ.295
26-02-2026- ஒரு கிராம் ரூ.295
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
- சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
- விழாவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா தரமணியில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை.
கடந்த 2 மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த வந்த நிலையில் இன்றைய விழாவில் அமைச்சர் துரைமுருகனும் புறக்கணித்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் 38 பேர் ஆராய்ச்சி படிப்புக்கான முனைவர் பட்டம் பெற்றனர். 86 பேருக்கு நேரில் பட்டங்களை ஆளுநர் வழங்கினார். 16,571 பேருக்கு அந்தந்த கல்லூரிகளில் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
விழாவில் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் நீதிபதி பாரதிதாசன், உறுப்பினர்கள் சார்ஜ் அலெக்சாண்டர், ஓம். பிரகாஷ் மற்றும் பதிவாளர் கவுரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க.வின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க.வின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
* கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
* இந்த முறை ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது.
- திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும்.
திண்டிவனம்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் தனித்தனி கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். 28-ந் தேதிக்குள் (இன்று) கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அப்போது தான் எந்த வாகனத்தில் பயணிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றார்.
இதனால் அவர் இன்று கூட்டணி குறித்து அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ராமதாஸ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் எப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளனர்.






