என் மலர்tooltip icon

    இந்தியா

    • தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
    • வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.

    பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் நேற்று 06.12.2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.

    எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது. 

    • த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
    • விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.

    கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்அரங்கத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதன்பின் எந்தவொரு சந்திப்பும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

    இதனிடையே, வருகிற 16-ந்தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு ஆட்சியரை சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்தார்.

    ஈரோட்டில் வருகிற 16-ந்தேதி விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,

    * த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

    * விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.

    * தனியார் இடம் தேர்வு செய்திருக்கிறோம், ரோடு ஷோ தவிர்த்திருக்கிறோம் என்றார்.

    • வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
    • தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    தங்கம்..!

    தங்கத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களை கேட்கவே வேண்டாம். புதுப்புது டிசைன்களில் தங்கம் வாங்கி அணியனும்னு என்று ஆர்வம் கொள்வார்கள். இளம்வயது பெண்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து நகை எடுப்பார்கள். திருமணம் ஆன பெண்களோ தனக்கோ அல்லது தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு என நகை வாங்குவார்கள்.

    இப்படி சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை, திருமணம் போன்றவற்றிற்கு தங்கம் பயன்படும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு 20 சவரன், 50 சவரன் என வசதிக்கேற்ப பெற்றோர்கள் நகை அணிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.



    இப்படிப்பட்ட தங்கம் இரு விதமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 22 கிராட், 24 கிராட் என்று... (இதனை சாதாரண நகை என்றும் 916 நகை என்றும் சொல்வர்). அரசாங்கம் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதியில் இனி சாதாரண நகை என்று சொல்லப்படும் 22 கிராட் நகை விற்கக்கூடாது. 24 கிராட் முத்திரையிடப்பட்ட நகை தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று. இதனால் ஏழை மக்கள் சிரமம் அடைந்தனர்.



    சரி அதுபோகட்டும் என்று பார்த்தால், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையானது. ஆண்டின் தொடக்கத்தில் சற்று தான் உயர்ந்தது என்று பரவாயில்லை என்று தோன்றியது அன்று...



    ஆனால் இன்று அதன் தொடக்கமாக தங்கம் விலை உச்சத்தில் விற்பனையாகிறது. அதாவது வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாத இறுதியில் விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:-


    மாதம் கிராம் சவரன் கிராம் பார் வெள்ளி
    ஜனவரி ரூ.7,730 ரூ.61,840 ரூ.107 ரூ.1,07,000
    பிப்ரவரி ரூ.7,960 ரூ.63,680 ரூ.105 ரூ.1,05,000
    மார்ச் ரூ.8,425 ரூ.67,600 ரூ.113 ரூ.1,13,000
    ஏப்ரல் ரூ.8,980 ரூ.71,840 ரூ.111 ரூ.1,11,000
    மே ரூ.8,920 ரூ.71,360 ரூ.111 ரூ.1,11,000
    ஜூன் ரூ.8,915 ரூ.71,320 ரூ.119 ரூ.1,19,000
    ஜூலை ரூ.9,170 ரூ.73,360 ரூ.125 ரூ.1,25,000
    ஆகஸ்ட் ரூ.9,620 ரூ.76,960 ரூ.134 ரூ.1,34,000
    செப்டம்பர் ரூ.10,860 ரூ.86,880 ரூ.161 ரூ.1,61,000
    அக்டோபர் ரூ.11,300 ரூ.90,400 ரூ.165 ரூ.1,65,000
    நவம்பர் ரூ.11,800 ரூ.94,400 ரூ.192 ரூ.1,92,000

    2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு ஏற்ற, இறக்கங்கள் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து இன்று (06-12-2025) முறையே ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும் ஒரு கிராம் ரூ.12,040-க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனி விலை குறையுமா? என்றால் அது சாத்தியமே இல்லை தான் என்கிறார்கள். மேலும் இனி பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்ற தகவலை சொல்லும் போது இடி இறங்கியது போல் இருந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்தே செயல்படுவதே நல்லது. 

    • இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு.
    • சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    இந்தியாவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்து அளித்தார்.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு. இந்த மெனுவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீர் உணவான 'குச்சி தூன் செடின்' இருந்தது.

    இது மிகவும் விலையுயர்ந்த 'Gucci ' காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது.

    குச்சி காளான்கள் மிகவும் அரிதானவை என்பதால் இந்த விலை. அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.

    பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளரும். சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் அவை முளைக்கின்றன.

    இந்த காளான்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றை சேகரிப்பர். சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளைத் தயாரிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.   

    • SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்குவங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் SIR படிவங்களில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தரபிரதேச காவல்துறை நூர்ஜகான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

    ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் உடைய இரண்டு மகன்கள் ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான் ஆகியோர் நீண்ட காலமாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர்.

    ஆனால் SIR படிவத்தில் நூர்ஜஹான் தனது மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களை பூத்-லெவல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது.

    SIR படிவத்தை டிஜிட்டல் முறைக்கு பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர் தனது மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த சூழலில், ராம்பூர் தேர்தல் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் நூர்ஜஹான் மீது போலீசார் BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அவசரநிலையின் போது ஜனநாயக விரோத முறையில் சேர்க்கப்பட்டன.
    • அவசரநிலையின்போது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரசியலமைப்பின் முன்னுரை 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் பீகார் பாஜக எம்.பி. பீமா சிங் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.      

    இந்த வார்த்தைகள் முகவுரையில் தேவையில்லை, அவசரநிலையின் போது ஜனநாயக விரோத முறையில் சேர்க்கப்பட்டன. இந்த வார்த்தைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அசல் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    அவசரநிலையின்போது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஜனநாயகத்தின் படுகொலை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் இந்திரா காந்தி இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்தார்.

    எனவே, பின்னர் சேர்க்கப்பட்ட இந்த இரண்டு வார்த்தைகளையும் நீக்கிவிட்டு, அரசியலமைப்பு அதன் அசல் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பீமா சிங் வாதிட்டார். 

    • ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
    • இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரை போன்ற போலியான உருவத்தை உருவாக்குவதே deep fake. இவற்றின் மூலம் ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக நடிகைகள், பிரபலங்கள் இதற்கு இரையாகி உள்ளனர். மேலும் பெண்களை தவறாக சித்தரித்து பிளாக் மெயில் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே Deep fake ஒழுங்குமுறை  மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியாவில் deep fake களை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை நிறுவ இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது என்று அவர் கூறினார்.

    இந்த மசோதா, தேசிய பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், deep fake தனியுரிமை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தேர்தல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கும் ஒரு deep fake பணிக்குழுவை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஷிண்டே கூறினார். 

    • ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
    • தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.

    அவரை தொடர்ந்து, அவரது மனைவி டாக்டர் சவுமியா அன்புமணி, 'தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைக்காமல் இருக்கும் 10 முக்கிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ்நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்திடுவதற்கும் விழிப்புணர்வு பிரசார பயணமாக சவுமியா அன்புமணியின் சுற்றுப்பயணம் இருக்கும் என பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், சவுமியா அன்புமணி தலைமை தாங்கி காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

    அங்கு மேடையில்சவுமியா அன்புமணி பேசியதாவது:-

    அழகு பெண்களே.. சிங்கப் பெண்களே.. உங்கள் அனைவருக்கும் வணக்கம். காஞ்சிபுரம் மண்ணில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி இருக்கிறோம்.

    காஞ்சிபுரத்திற்கு நான் எத்தனை முறை வந்திருப்பேன் என்கிற கணக்கே இல்லை. காஞ்சி காமாச்சி அம்மனை எத்தனை முறை தரிசித்திருக்கிறேன். அத்திவரதர் வைபவம்.

    இப்படிப்பட்ட பெருமைகளையும், அருமைகளையும் கொண்ட காஞ்சி மாநகரத்தில் "சிங்கப்பெண்ணே.. எழுந்து வா.." என்று மகளிர் உரிமை மட்டு பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.

    நிம்மதியான, கடன் சுமையின்றி வாழும் வாழ்க்கை தான் நம்முடைய உரிமை. அது கொடுப்பது அரசின் கடமை.

    பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இலவசம், மருத்துவம் இலவசம், விவசாயிகளுக்கு அனைத்தும் இலவசமாக தருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.

    பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும்.

    இங்கு மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சிறைச் சென்றவர்கள்.

    உங்களுக்கு ஒரு பிச்சனை என்றால் இவர்கள் தான் கொடி பிடித்து நிற்பார்கள். இவர்கள் தான் உங்களுடைய ரியல் ஹீரோ. திரையில் தேடாதீர்கள். அவர்கள் உங்களுக்காக ஓடோடி வரமாட்டார்கள். அவர்களுக்குதான் உங்களுடைய ஆதரவுகளை மனதார தரவேண்டும்.

    பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் சரியாகிவிடுமா? யாருடைய பணம் அது. டாஸ்மாக்கில் கொடுத்த பணம் தான் பெண்களுக்கு வந்து சேருகிறது. அது மீண்டும் எங்கு செல்லும் டாஸ்மாகிற்கு தான் செல்லும். 1000 ரூ கொடுத்தவுடன் மனசுமாறி ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.

    பெண்களாகிய நீங்கள் ஒரு நாளுக்கு 1000 ரூ சம்பாதிக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கி கொடுக்க வேண்டும்.

    யாராவது ரூ.500, ரூ.1000 என பிச்சைப்போட்டால் வாங்கிக்கொள்வதா ? அது அசிங்கம் இல்லையா? ஓட்டு வாங்க உல்களை ஏமாற்றக் கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
    • இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளரான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 08-12-2025 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    அதுபோது தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்ச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தொகுதி பார்வையாளர்கள்-தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்டக் கழக செயலாளர்கள் ஓரிடத்தில் அமர வைத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி ஆபத்தான நிலையில் உள்ளது.
    • அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது. அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.

    இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது மற்றும் பீகாரில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகியவை இந்தியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்சனையாக இருந்தது.

    பா.ஜ.க.வில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி உறுதியுடன் போட்டியிடுகிறது.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது என்றார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.

    விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.

    ×