என் மலர்tooltip icon

    இந்தியா

    • நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை.
    • பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் எடுத்துவிட்டது.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

    இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:

    நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை பட்டியலிடுவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் நாங்கள் பல தவறுகளை செய்தோம்.

    நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் அணியை அடிக்க விட்டுவிட்டோம்.

    குஜராத் தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். குஜராத் அணி தங்களுக்கு தேவையான இலக்கை நிர்ணயித்து எங்களை கடும் நெருக்கடியில் ஆழ்த்தினர்.

    தற்போது ஐ.பி.எல். தொடர் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றது. அதே சமயம், எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க வேண்டும். அவர்கள் விரைவில் அதை செய்வார்கள் என நான் நம்புகிறேன்.

    நான் அதிக அளவு பந்து வீசினேன். அப்போது பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறது என்பதை குஜராத் வீரர்கள் கவனித்திருப்பர். அந்த வகை பந்துகளை அடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஆடுகளத்தில் நிலையான பவுன்ஸ் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது என தெரிவித்தார்.

    • குஜராத் அணிக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.
    • சிஎஸ்கே அணியின் ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றவர் விக்னேஷ் புத்தூர்.

    இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விக்னேஷ் புத்தூர் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புத்தூர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, விக்னேஷ் புத்தூர் நீக்கப்பட்டதற்கு எதிராக இணைய தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

    இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் முடிவு. ரோகித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியை மிஸ் செய்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

    விக்னேஷ் புத்தூரை நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தவறு செய்ததால், குஜராத் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளனர்.

    • தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
    • இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

    புதுடெல்லி:

    மியான்மர்-தாய்லாந்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.

    இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ல மியான்மர் நாட்டுக்கு ஆபரேஷன் பிரம்மா திட்டம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன் தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆபரேஷன் பிரம்மா திட்டம் தொடர்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் மற்றும் 60 டன் நிவாரணப் பொருட்கள் உள்பட 118 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவ கள மருத்துவமனை பிரிவுடன் இரண்டு C-17 விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன. இவற்றுடன், இந்தியாவில் இருந்து 5 நிவாரண விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன்னும், சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.

    குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
    • நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பீகாரில் பிரசாரம் செய்வேன் என்றார்.

    பாட்னா:

    இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பீகார் மாநிலத்தின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முதல் மந்திரி நிதிஷ்குமாரைச் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர் சந்திப்பில் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நிதிஷ்ஜி ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுஜியை விட நிச்சயமாக ஆரோக்கியமானவர். நான் இருவருடனும் நண்பர்களாக இருந்திருக்கிறேன்.

    நிதிஷ்ஜி இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இருப்பார் என நினைக்கிறேன். பீகாரில் எனது கட்சி வலுவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன்.

    பிரதமர் நரேந்திர மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார்.

    ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

    அவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியதன் மூலம் மோடி ஏற்கனவே நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் நேருவின் சாதனையை முறியடித்து நான்காவது முறையாக ஆட்சியை அனுபவிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது.
    • இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.

    பெருநிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து மோடி அரசின் மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் உடனான தனது சந்திப்பு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " பாஜக அரசாங்கம் அதன் பில்லியனர் நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

    நண்பர்களுக்கு சலுகை, ஒழுங்குமுறை தவறிய நிர்வாகத்துடன் இணைந்து, இந்தியாவின் வங்கித் துறை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தச் சுமை இறுதியில் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கும் இளம் பணியாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது.

    ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது. பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிட மாற்றம், என்ஏபி விதிகளை மீறியவர்களுக்கு நெறிமுறையற்று வழங்கப்பட்ட கடன்களை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கல் நடவடிக்கை, பணிநீக்கம் என பல பிரச்சனைகளை அவர்கள் தெரிவித்தனர். இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.

    இந்தப் பிரச்சினை ஐசிஐசிஐ வங்கியைத் தாண்டி நாடு முழுவதும் உள்ள பல வங்கி  ஊழியர்களை பாதிக்கிறது. பாஜக அரசின்  தவறான பொருளாதாரத் நிர்வாகம், மனித உயிரைப் பறிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயம்.

    இந்த தொழிலாள வர்க்கதினருக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை முழு தீவிரத்துடன் கையாளும்" என்று தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள 'அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்ள அனைவருக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

    • எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.
    • பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது.

    தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு" எனச் சொல்கிறது ஒரு பொன்மொழி.

    ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.

    100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு.

    வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது.

    ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

    100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.

    பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!

    தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?

    கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது.

    உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
    • அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.

    • ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர்.
    • உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர்.

    கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்று பேசினார். அப்போது நமது முதல்வர் ஒருநாள் குல்லா அணிந்துவிட்டு ஓடுபவர் அல்ல எனப் பேசினார்.

    தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் விஜய், ஒருநாள் முழுவதும் நோன்பு மேற்கொண்டு கலந்து கொண்டார். அப்போது தலையில் குல்லா அணிந்திருந்தார். அதனை மனதில் வைத்து சேகர் பாபு மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

    அமைச்சர் சேகர் பாபு பேசும்போது "இஸ்லாமியர் குடும்பங்களில் ஒளியேற்றி வைத்த இயக்கும் திமுக. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். ஆனால் இன்று ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர். தொப்புல்கொடி உறவாம் இஸ்லாமிய நண்பர்களின் பாதுகாவலர்தான் நம் முதல்வர். ஒருநாள் கஞ்சி குடித்து ஓடுபவர்கள் மத்தியில், இஸ்லாமியர்களில் நெஞ்சில் குடியிருப்பவர் முதல்வர்.

    உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர். உங்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதார உரிமையையும், வழிபாட்டு உரிமையை மீட்டுத்தரும் தலைவர்கள்தான் மு.க. ஸ்டாலின்.

    2026 தேர்தலில் உங்களுடைய 200 இடங்கள் என்பது நிச்சயம். 234 என்பது லட்சியமாக கொண்டு செயல்படுவோம்.

    இவ்வாறு சேகர் பாபு பேசினார்.

    • மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
    • பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.

    டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!

    பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
    • ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரப் பிரதேசம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கொய்ராவ்னா பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி. இவரது 22 வயது மகளுக்கு யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தனது மகளையும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளையும் காணவில்லை என கீதா தேவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    யோகேஷின் இளைய சகோதரன் ராஜா தனது மகளை கடத்திச் சென்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
    • அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.

    இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

    இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

     

    நிர்மல் யாதவ்

    அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×