search icon
என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    6 வயதுக்குள் குந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கும் அடித்தளம், அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். இதை பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தை வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்தலாம்.
    குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கி தருவது பெற்றோரின் கடமையாகும். அதை செயல்படுத்தும் விதமாக இன்றைய பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களை கையாளவும் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்தவும் உரிய பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

    மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தரும் மனப்போராட்டத்துக்கான தீர்வாக அமைந்தது எமோஷனல் இன்டெலிஜன்ஸ் எனும் உணர்வுசார் நுண்ணறிவு

    இம்முறையை பயன்படுத்தி குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் நுணுக்கங்களை இன்றைய பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்தால் நாளைய உலகம் சிறப்பாக அமையும்.

    மனிதனின் 90 சதவீத மூளை வளர்ச்சி பிறந்த முதல் 6 ஆண்டுகளில் நடைபெறுகிறது. எனவே 6 வயதுக்குள் குந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கும் அடித்தளம், அவர்களை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். இதை பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தை வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்தலாம்.

    குழந்தைகளின் தனித்துவத்தை புரிந்து கொணடு தன்னம்பிக்கையோடு அவர்களை வளர வழிகாட்ட வேண்டும்.

    பெற்றோருக்கு சொல்லவிரும்புவது-

    பத்தில் ஒன்பது இந்திய குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இம்மாதிரி சூழ்நிலையில் பெற்றோர் தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்குமட்டும் தங்களுடைய குழந்தைகளை தயார் செய்யும் மனப்பாங்கு தவறானது. இக்கட்டான சூழ்நிலையில் சரியான முறையில் அவர்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய அறிவையும், அனுபவத்தையும் குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியமானது. உணர்வுசார் நுண்ணறிவுடன் வளரும் குழந்தைகள் தேர்விலும் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் போதும். அவர்களது குழந்தைகளின் வாழ்வு வளம் பெறும்.
    யோகா செய்வது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.
    அக்குபிரசர் - உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

    மாதுளை - இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது

    யோகா - இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

    அன்னாசி பழம் - மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

    இஞ்சி டீ - இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.

    கற்றாழை - இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

    பெருஞ்சீரகம் - ஆண்டிஸ்பாஸ்மோடிக் பணபுகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.

    லவங்கப்பட்டை - இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது.

    வெந்தயம் - இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.

    பேரீச்சை - இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.

    விளக்கெண்ணெய் - இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.

    பின்பற்ற வேண்டியவை

    * தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.

    * தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்குங்கள்

    * காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்

    * வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்

    * அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்.
    தங்கள் குடும்ப வருமானம் மற்றும் வேலை குறித்து நேர்மறையாக பதிலளித்த விஷயத்தில் இந்தியாதான் உலக அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.
    கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்க்கும் கலாசாரம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பதாலும் வீட்டில் இருந்து வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் அலுவலக பணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

    இருப்பினும் சிலர் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பணி அனுபவம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியர்களில் 3 பேரில் ஒருவருக்கு (32 சதவீதம்) அலுவலகத்திற்கு திரும்பும் எண்ணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 12 சதவீதம் பேர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்வதை நிறுத்திவிட்டு பணியிடத்திற்குத் திரும்புவதற்கு ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 39 சதவீதம் பேர் பணியிடத்திற்குத் திரும்புவதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று பணி புரிந்தால் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

    இந்த கணக்கெடுப்பை ‘டிங்க் குளோபல் பிரிப்பெய்டு இன்டெக்ஸ்’ நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. உலக அளவில் 6,250 பேர் கணக்கெடுப்பின்போது பதில் அளித்திருக்கிறார்கள். 52 சதவீத இந்தியர்கள் பொருளாதாரம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது உலகளவிலான சராசரியை விட அதிகமாகும்.

    தங்கள் குடும்ப வருமானம் மற்றும் வேலை குறித்து நேர்மறையாக பதிலளித்த விஷயத்தில் இந்தியாதான் உலக அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி முயற்சி மகத்தான நன்மைகளை கொண்டிருப்பதும் கணக்கெடுப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    பச்சை பட்டாணி சீசன் தொடங்கி விட்டது. இந்த பச்சை பட்டாணியில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பி போன்ற தாதுக்கள் அவற்றில் உள்ளன.
    தேவையான பொருட்கள்

    பச்சை பட்டாணி - 1 கப்
    கேரட் - 1
    இனிப்பு சோளம் - அரை கப்
    வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு
    எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு

    செய்முறை

    கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது இனிப்பு சோளம், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

    பட்டாணி வெந்தவுடன் தண்ணீரை வடித்து வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் வேக வைத்த பட்டாணி, இனிப்பு சோளம், கேரட் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியான வறுத்த வேர்க்கடலையை மேலே தூவி பரிமாறவும்.

    சூப்பரான கேரட் பச்சை பட்டாணி சாலட் ரெடி.

    தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, இங்கு பார்ப்போம்.
    எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும். நீரின்றி அமையாதது உலகு மட்டுமல்ல, உடலும்தான். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, இங்கு பார்ப்போம்.

    நமது உடல் 70 சதவீதம் நீரானானது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

    சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகி அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும்கூட, மீண்டும் சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படியென்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். இது உடல்நலனை பாதிக்கும்.

    கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது. இப்படிப்பட்டவர்களின் உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும்.

    மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. 3 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது.

    அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். ரத்த அழுத்தம் குறையும்.
    உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அணியும் ஆடைகளில் ஜீன்ஸும் ஒன்றாகும். எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சியிலும் மிகவும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய உடைகளின் வரிசையில் ஜீன்ஸ்க்கு முதலிடமே கொடுக்கலாம்.
    ஒவ்வொருவருடைய துணி அலமாரியிலும் குறைந்த பட்சம் ஒரு ஜீன்ஸாவது இல்லையென்றால் அது சிறிது வருத்தத்தை அளிக்கக் கூடிய விஷயம் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சியிலும் மிகவும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய உடைகளின் வரிசையில் ஜீன்ஸ்க்கு முதலிடமே கொடுக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அணியும் ஆடைகளில் ஜீன்ஸும் ஒன்றாகும். எந்தவித மேலாடைக்கும் பொருந்துவதால் அனைவராலும் விரும்பி அணியப்படும் பாட்டம் என்ற பெருமையுடன் ஜுன்ஸைச் சாரும்.

    ஜுன்ஸைப் பொருத்தவரை பல்வேறு வகைகள் உள்ளன.

    பெல் பாட்டம் ஜுன்ஸ்:- இவ்வகை ஜுன்ஸ்கள் முதல் கால்கள் வரை குறுகலாகவும் முழங்காலில் இருந்து கனுக்கால் வரை சில நேரங்களில் தரையைத் தொடும் அளவிற்கு மணி போன்ற வடிவத்தில் அகன்று பரவியிருக்கும். எழுபதுகளிலிருந்து இன்று வரையும் பேஷன் உலகில் கர்ஜிக்கும் வகையாக இந்த பெல் பாட்டம் ஜீன்ஸ்கள் இருக்கின்றன. ஆண், பெண் என இருபாலரும் அணிந்து கொள்ள ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்வெட்டர்ஸ், க்ராப் டாப், டீ ஷர்ட்டுகளுக்கு சிறந்த பாட்டமாக இவை செயல்படுகின்றன.

    லோ வெயிஸ்ட் ஜீன்ஸ்:- இவை குறைந்த இடுப்பு இறக்கத்துடன் கணுக்கால் வரை சிக்கெனப் பிடித்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டவையாகும். இவ்வகை ஜுன்ஸ்கள் இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளன. தட்டையாக உள்ள செருப்புகள், ஸ்னீக்கர்கள் மற்றும் குதிகால் செருப்புகளுடன் அணியும் பொழுது இவை மேலும் அழகு சேர்க்கின்றன. ஆண், பெண் என இருபாலரும் அணியக்கூடியவை இவை.

    3டி எஃபெக்ட் பேனல் ஜுன்ஸ்:- இளவயதினர் சாதரணமாக அணிந்து கொள்ளக்கூடிய சரியான தேர்வு என்று சொல்லலாம். 3டி வெட்டுகளுடன் உங்கள் கால்களுக்கு வசதியாகப் பொருந்தும் இவற்றை ஆண், பெண் என இரு பாலரும் அணியும் பொழுது அவர்களது வயது சிறிது குறைத்துக் காட்டப்படுவதாக பரவலாகக் கூறப்படுகின்றது. ஸ்லோகன் பிரிண்ட் டீ-ஷர்ட்டுகளுடன் இவை கச்சிதமாகப் பொருந்தக் கூடியவை.

    டேப்பர்டு ஜுன்ஸ்:- இவை தொடைப்பகுதியில் அகன்றும் கணுக்காலில் குறுகலாகவும் இருப்பவையாகும். நீளமான கால்களை உடையவர்கள் அணிய ஏற்றவை இவை. ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    க்ராப்டு ஜுன்ஸ்:- சரியான நவீன தொடுதலுடன் கணுக்கால் வரை நீண்டிருக்கும் இவை கச்சிதமான உடல்வாகுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்று சொல்லலாம்.

    ஹை வெயிஸ் ஜுன்ஸ்:- மேல் இடுப்பிலிருந்து தொடங்கும் இவ்வகை ஜுன்ஸ்கள் ஒல்லியான தோற்றத்தைத் தரக் கூடியவையாகும். சாதாரணமான பயணத்திற்கு ஏற்றவையாக இருப்பதால் இருபாலரும் அணியக்கூடிய ஆடையாக இது உள்ளது.

    ட்ராப் க்ராட்ச் ஜுன்ஸ்:- இடுப்பு இருக்கை மற்றும் பின்புறத்தில் தொய்வாக இருக்கும் இவை மெல்லிய தளர்வாக ஃபிட்பேன்ட் ஆகும். இவ்வகை டெனிப்கள் குளிர்ச்சியான புதுப்பானியுடன் கூடிய தோற்றத்தைத் தருபவை என்று சொல்லலாம். அனைவராலும் விரும்பி அணியப்பட்டாலும் தடகள உடல் தோற்றமுடையவர்களுக்கு கச்சிதமான தோற்றத்தை தரக்கூடியவையாக இவை உள்ளன.

    செய்லர் ஜுன்ஸ்:- பெண்கள் மட்டுமே அணியக்கூடிய இவ்வகை ஜுன்ஸ்களானது மேல் இடுப்பிலிருந்து துவங்கி முன்புறம் பட்டன்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அணிவதற்கு வசதியானவையாக இருப்பதோடு நாகரீகத் தோற்றத்தையும் தரக்கூடிய இந்த ஜுன்ஸ்கள் எழுபதுகளிலிருந்து இன்று வரையிலும் பிரபலமாக உள்ளது.

    புஸ் பேன்ட் ஜுன்ஸ்:- அடிப்படையில் நேராகப் பொருந்தும் வகையான இவ்வகை டெனிம்கள் ஆண்களுக்கே வடிவமைக்கப்பட்டது போல் இருக்கின்றது. முன்புறமும், பின்புறமும் இரண்டு இரண்டு பாக்கெட்டுகளுடன் வரும் இவ்வகை ஜுன்ஸ்களுடன் லெதர் ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணியும் பொழுது அணிபவரின் தோற்றம் நவ நாகரீகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    ஸ்லிம் ஃபிட்:- தொடை பின்னங்கால் மற்றும் கணுக்கால் வரையிலும் உடலுடன் ஒட்டிப் பிடிக்கும்படி இறுக்கமாக வரும் இவ்வகை ஜுன்ஸ்கள் இள வயது ஆண், பெண்களால் மிகவும் விரும்பி அணியக்கூடியதாகவும், நாகரீக தோற்றத்தைத் தருவதாகவும் உள்ளது.

    ஜாகர்:- குறிப்பாக ஜாகிங் செய்யும் பொழுது வசதியாக இருப்பதற்காக இடுப்பு மற்றும் கணுக்காலில் எலாஸ்டிக்கானது கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவை இவை. நகர்புறத் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் இவற்றை வேலைக்கு விடுப்பு இருக்கும் நாட்களில் அணிந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் இயல்பாகச் செல்லலாம்.

    ஸ்ட்ரெயிட் ஃபிட் ஜுன்ஸ்:- இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அளவாக நேராக வெட்டப்பட்டு தைக்கப்பட்டிருக்கும் இவை அனைத்து மேலாடைகளுடனும் அணிய ஏற்றவை. அணிவதற்கு வசதியான ஜுன்ஸ்களாக இவை இருப்பதால் அனைத்து வயதினாராலும் விரும்பி அணியப்படுபவை என்ற பெருமைக்குரியது இவை என்று சொல்லலாம்.

    ஸ்கின்னி ஜுன்ஸ்:- இடுப்பு தொடை பின்னங்கால் மற்றும் கனுக்கால் வரை உடலுடன் சிக்கென ஒட்டிப் பிடித்திருக்கும் இவற்றில் கணுக்காலில் கட்டுடன் வருபவையும் பெண்களால் விரும்பி அணியப் படுபவையாக உள்ளன.

    பூட்கட் ஜுன்ஸ், பாய் ஃப்ரண்டு ஜுன்ஸ், ஃப்னேர்டு ஜுன்ஸ், பெக்குடு ஜீன்ஸ், வைட் லெக் ஜீன்ஸ், ஸ்டிர்அப் ஜீன்ஸ், பேச்சுடு ஜீன்ஸ், ரிப்டு ஜீன்ஸ் என ஜீன்ஸ்களில் இன்னும் எத்தனையோ வகைகள் உள்ளன. நம்முடைய உடல் தோற்றத்திற்கு ஏற்றாற் போலவும், அணிவதற்கு வசதியாகவும் இருப்பவற்றைக் தேர்ந்தெடுத்து அணியும் பொழுது நம் தோற்றத்தை மேலும் இவை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
    பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...
    பூசணியில் உள்ள என்சைம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் போன்றவை, இறந்த செல்களை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சுருக்கங்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.

    பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...

    சரும நிறத்தை அதிகப்படுத்துவதற்கு…

    தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும். பின்னர் சிறிதளவு பூசணிக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து, பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து பூசணிக் கலவையைத் துடைத்து எடுக்கவும். சில வினாடிகள் கழித்து, மீண்டும் மீதம் உள்ள பூசணிக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் மூலம் முகம் மற்றும் கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிளிரும்.

    மிருதுவான சருமத்திற்கு...

    தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, தயிர் - 1 தேக்கரண்டி, ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்த பாதாம் - 2 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு, ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் தயிர், அரைத்த பாதாம், தேன் ஆகிய மூன்றையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

    பொலிவான சருமத்திற்கு...

    தோல் நீக்கி மசித்தப் பூசணி - 2 தேக்கரண்டி, ஜாதிக்காய் தூள் - ½  தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, பசுவின் பால் (காய்ச்சாதது) - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் மசித்த பூசணி, ஜாதிக்காய் தூள், பாதாம் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அதில் தேவையான அளவு பால் சேர்த்து, பசை பதத்திற்கு வரும் வரை கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.
    ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர்.
    நாம் பிறக்கையில் இந்த உலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. அதுபோல் போகும்போது எதையும் கொண்டு செல்வதில்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழவேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டுபவர் ஆசிரியர்களே. அவர்கள் உறவு முக்கியமானது, முதன்மையானது. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும், சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடத்திலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.

    இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.

    மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.

    நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

    மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
    கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.
    பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும் எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயத்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

    குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

    கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்

    நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது, உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

    மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

    கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

    கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

    முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

    கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

    மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம்  ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளில் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

    பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சி, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

    காலை வேளையில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், பசலைக்கீரை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    பசலைக்கீரை - 1 கப்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!

    காலையில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இந்த பசலைக்கீரை ஆம்லெட்போட்டு சாப்பிட்டால், வயிறு நிறையும்.

    சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது.
    குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல.

    குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவதும் கூடாது. உணவு பட்டியலில் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி மற்றும் பீச் போன்ற திரவ சத்து நிறைந்த பழங்கள், பிரோக்கோலி போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். இது தினசரி உணவில் அதிக திரவத்தை சேர்ப்பதற்கான வழிமுறையாகும். பருவ கால காய்கறிகள் மற்றும் மூலிகைகளை கொண்டு சூப் தயாரித்து பருகலாம். வீட்டில் தயாரிக்கும் சூப்பை உட்கொள்வது நீர்ச்சத்தை மேம்படுத்த உதவும்.

    குளிர் காலத்தில் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாட உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ப நீர் உட்கொள்ளும் அளவை தீர்மானிப்பதும் முக்கியமானது. உதாரணமாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீரிழப்பின் அளவு அதிகரிக்கும்போதுதான் தாகம் எடுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

    நம் உடலுக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்:

    சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் உட்கொள்ளும் அளவு நபருக்கு நபர் மாறுபடும். அது அவரது உடல் செயல்பாடு, வசிக்கும் சூழல் உள்ளிட்ட சில காரணிகளைப் பொறுத்தது.

    தண்ணீர் தரும் பலன்கள்

    சரியான நேரத்தில் தண்ணீர் பருகுவது உடலின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

    காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

    அது உள் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு உதவும்.

    சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

    அது செரிமானம் சுமுகமாக நடைபெற வழிவகை செய்யும்.

    குளிப்பதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

    அது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

    தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகலாம்.

    அது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.
    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
    குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

    பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    நாட்டின் முன்னேற்றம், தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.
    ×