search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடை"

    • பெண்களிடையே துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது.
    • இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்'அணிய விரும்புகிறார்கள்.

    இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    தேவையான பொருட்கள்:

    சில்க் காட்டன் துணி - ¼ மீட்டர்

    1.50 அங்குல லேஸ் - 19 அங்குலம்

    1.25 அங்குலம் எலாஸ்டிக் - 9 அங்குலம் (2 துண்டுகள்)

    கொக்கி செட் - 1

    செய்முறை:

    படம் 1: 36 அங்குல இடுப்பளவு உள்ள பெல்ட் தயாரிப்பதற்கு முதலில் துணியை 19 x 4 அங்குல நீள அகலம் கொண்ட 3 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எலாஸ்டிக்கை 9 அங்குல நீளம் கொண்ட 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    படம் 2: மூன்று துண்டு துணிகளையும் ஒன்றோடு ஒன்று (நீளவாக்கில்) இணைத்து தையல் போடவும். இரண்டு தையல்கள் போட்டால் பிரியாமல் இருக்கும். (இதில் 1 மற்றும் 3-வது துண்டுகளின் உள்ளே எலாஸ்டிக்கை நுழைக்க வேண்டும். நடு துண்டின் மேலே 'லேஸ்' வைத்து தைக்க வேண்டும்).

    படம் 3: படத்தில் காட்டி இருப்பதுபோல துணிகளை இரண்டாக மடித்து தையல் போட வேண்டும். இரண்டாவது துண்டை இணைத்து இருக்கும் ஜாயிண்ட் வரை தையல் போட்டால் போதும்.

    படம் 4: அந்த துண்டை படத்தில் காட்டி இருப்பதுபோல லூப் டர்னர் அல்லது சேப்டி பின் கொண்டு வெளிப்புறமாக திருப்பவும்.

    படம் 5: ஒரு துண்டு எலாஸ்டிக்கின் ஒரு முனையில் சேப்டி பின்னை இணைத்து இதற்குள் நுழைத்து உள்ளே தள்ளவும்.

    படம் 6: இரண்டு துணி துண்டுகளை இணைப்பதற்காக போடப்பட்ட தையலின் மீது எலாஸ்டிக்கை வைத்து தையல் போடவும். இதே போல மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.

    படம் 7: நடுதுண்டு துணியின் ஓரத்தை உள்புறமாக மடித்து மேலே தையல் போடவும்.

    படம் 8: லேஸ் துணியை நடு துண்டின் மீது வைத்து, நீளவாக்கிலும், அகல வாக்கிலும் தையல் போடவும். அகலவாக்கில் தைக்கும்போது, லேஸ் முனைகளை உட்புறமாக மடித்து அதன் மேலே தையல் போடவும்.

    படம் 9 & 10: இரண்டு முனைகளிலும் எலாஸ்டிக்கை துணியின் விளிம்பு வரை கொண்டு வந்து சேப்டி பின்னை அகற்றிவிட்டு, துணியோடு சேர்த்து சதுர வடிவில் தையல் போடவும்.

    படம் 11: இரண்டு பக்கங்களிலும் உள்பக்கம், கொக்கி செட்டை பொருத்தவும். இதன்மூலம் இடுப்பு அளவுக்கு ஏற்றபடி ஹிப் பெல்ட்டை அணிந்துகொள்ள முடியும்.

    படம் 12: இப்போது அழகான 'ஹிப் பெல்ட்' தயார்.

    • 'குர்த்தி' எனப்படும் சல்வார் பெண்கள் விரும்பி அணியும் உடையாகும்.
    • எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

    'குர்த்தி' எனப்படும் சல்வார், கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் இளம் பெண்கள் மட்டுமில்லாமல், நடுத்தர வயதினரும் விரும்பி அணியும் உடையாகும். இதற்கு பொருத்தமான வகையில் பேண்ட் அணிவது தோற்றத்தை மேம்படுத்தி காட்டுவதோடு, சவுகரியமாகவும் உணர வைக்கும். எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

    1 சிகரெட் பேண்ட்: தற்போதைய லேட்டஸ்ட் ஸ்டைல் சிகரெட் பேண்ட்தான் மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர வயதினர் என அனைவருக்கும் பொருத்தமானது. தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். எடை குறைவானது மற்றும் சவுகரியமானது. எல்லாவகை குர்த்திகளுடனும் அணிவதற்கு ஏற்றது.

    2 ஸ்கர்ட்ஸ்: குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    3 பளாசோ: இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் இருக்கும் பளாசோ, 'ஸ்ரெய்ட் கட்' குர்த்தியுடன் அணிவதற்கு பொருத்தமாக இருக்கும். குறிப்பாக முழங்காலுக்கு கீழ் நீளும் குர்த்தி அணிந்தால் 'ஸ்டைலிஷ் லுக்' அளிக்கும். உயரமாக இருப்பவர்கள், சிறிய அளவு கிராப் டாப்புடன் இதை அணியலாம். உயரம் குறைவாக இருப்பவர்கள் வெவ்வேறு நிறங்களில் குர்த்தியும், பளாசோவும் அணிந்தால் சற்று உயரமாகத் தெரிவீர்கள்.

    4 லெக்கின்ஸ்: இறுக்கமாக காலுடன் ஒட்டி இருந்தாலும், பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பேண்ட் வகை லெக்கின்ஸ். முழு நீள குர்த்தி, அனார்கலி வகை குர்த்தி போன்றவற்றுக்கு லெக்கின்ஸ் பொருந்தும். பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். ஷார்ட் குர்த்தியுடன் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

    5 ஜீன்ஸ்: ஜீன்ஸ் உடன் குர்த்தி அணிவது மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடையே வரவேற்பைப் பெற்ற ஸ்டைலாகும். எல்லாவகையான நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏற்ற காம்பினேஷன் இது. ஸ்லிட் கட், ஷார்ட், முழங்கால் நீளம் கொண்டது என எந்த வகை குர்த்திக்கும் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் அல்லது முழு கை கொண்ட குர்த்தியுடன் அணியும்போது, உங்களை உயரமாகக் காண்பிக்கும். ஷார்ட் ஸ்லீவ்லெஸ் குர்த்தியுடன் இது பொருந்தாது.

    6 சுடிதார் பேண்ட்: பாரம்பரிய வகையான இது 'கிளாஸிக் லுக்' கொடுக்கக்கூடியது. தினசரி பயன்பாட்டுக்கும், விசேஷங்களுக்கு அணிவதற்கும் பொருத்தமாக இருக்கும். அனார்கலி, முழு கை, காலர் குர்த்தி போன்றவற்றுக்கும் இதை அணியலாம். ஷார்ட் குர்த்தியுடன் அணியக்கூடாது.

    7 பட்டியாலா பேண்ட்: ஷார்ட் குர்த்தியுடன் அணியும்போது பாரம்பரியமான தோற்றம் கொடுக்கக்கூடியது பட்டியாலா பேண்ட். சாதாரண உடைக்கும் பொருத்தமாக இருக்கும். எல்லாவகை சீசனுக்கும் அணிவதற்கு சவுகரியமானது பட்டியாலா பேண்ட்.

    8 தோதி பேண்ட்: இது ஷார்ட் குர்தியுடன் மட்டும் அணிவதற்கு ஏற்றது. தொடைப் பகுதியில் அதிக பிரில்கள் இருக்கும் என்பதால் சற்று பருமனாக காண்பிக்கும். நீங்கள் அணியும் குர்த்தி எளிமையாக இருந்தால் பேண்ட் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருப்பது தோற்றத்தை அழகாக்கும்.

    • கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது.
    • பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகிறது.

    கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது. தற்போது ஆரெம்கேவி இயற்கை வண்ண சாயங்களை கொண்டு, கைவினை நெசவாளர்களால், கோர்வை மற்றும் பெட்னி போன்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகளை தயாரித்து வழங்குகின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வண்ணம் நம்முடைய கட்டிடக்கலை அதிசயங்கள் கோவில் சுவர்கள் இயற்கை மற்றும் அக்கால அரச தோற்றங்கள் போன்றவை இந்த மறுமலர்ச்சி புடவையில் காண முடியும். இத்தகைய அற்புத புடவைகளின் தொகுப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என ஆரெம்கேவி இயக்குனர் சங்கர் குமாரசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

    நம் கலை வடிவங்கள் இயற்கை அழகு போன்றவற்றை இயற்கை வண்ணத்தில் கைவினைகளின் புத்துருவாக்க சிந்தனையுடன் இந்த மறுமலர்ச்சி புடவைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவைகள் முறையே:-

    கோடாலி கருப்பூர் புடவை

    18-ம் நூற்றாண்டில் தஞ்சை அரச பரம்பைர மட்டுமே பயன்படுத்திய டிசைன்கள், மல்பரி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை வண்ணம் ஏற்றப்பட்ட அற்புதமான புடவை இயற்கையின் "மறுமலர்ச்சி" படைப்பு.

    பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்காரி புடவை

    18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பரம்பரை பெண்கள் விழாக்காலத்தில் அணிந்த, பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையும், மீனாக்காரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ புடவை.

    உப்படா கிளி சித்திர புடவை

    மரப்பிசினிலிருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா நெசவு றையில் நெய்யப்பட்டது.

    இயற்கை வண்ண 2000 புட்டா புடவை

    தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை.

    உடல்பேட்டு பேல்தார் புடவை

    செவ்வல்லி கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும் பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகில் மிளிரும் அற்புத புடவை.

    பவுன் புட்டா புடவை

    பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையில் மீனாக்காரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் உடலெங்கும் தூய ஜரிகை புட்டாக்கள் கொண்ட புடவை. 18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    கந்தபெருண்டா புடவை

    மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட கருஞ்சிவப்பு கந்தபெருண்டா புடவை, சிக்கலான தங்க ஜரி வேலைப்பாடுகளுடன் கர்நாடகாவின் மாநில அடையாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் இயற்கையாகவே லாக்சாயம் பூசப்பட்டது.

    கமலம் புடவை

    கமலம் பட்டுப் புடவை இயற்கையாகவே சப்பான் மரத்தால் சாயமிடப்பட்டு, தாஜ்மஹாலில் இருந்து உத்வேகம் பெறுகிறது, பீச் மற்றும் கோல்டன் ஜாரி வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தலைசிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டது.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், ‘புடவை’ என்று பெயர்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    * நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

    பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

    * கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

    இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

    * எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

    ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

    * பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

    புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

    * புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

    'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    * புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

    உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

    * சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

    நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

    2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

    ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

    • சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
    • சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது.

    ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் பெண்களுக்கு பொறுமை அதிகம். துணியின் தரம், நிறம், விலை, தங்களுக்கு அந்த உடை பொருத்தமாக இருக்கிறதா? என்றெல்லாம் கவனமாக பார்த்து வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும் ஆடைகளின் விஷயத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று சாயம் போவது. இதற்கு முக்கிய காரணம் தரமற்ற சாயங்களை ஆடைகளுக்கு பயன்படுத்துவது தான்.

    மேலும் ரசாயனம், வெப்பநிலை, சுற்றுச்சூழல் மாசு போன்ற இதர காரணங்களாலும் துணிகள் வெளுத்து போக நேரிடும். சாயம் போகும் ஆடைகளை சரியாக பராமரிப்பதன் மூலம் பொலிவு குறையாமல் வைத்திருக்க முடியும். அதற்கான சில பராமரிப்பு முறைகளை இங்கே காண்போம்.

    புதியதாக வாங்கிய துணிகளை முதன்முதலில் துவைக்கும்போது தனியாக ஊற வைப்பதன் மூலம்,அந்த துணிகள் சாயம் போகுமா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அந்த சாயம் பிற துணிகள் மீது பற்றிக்கொள்வதையும் தவிர்க்கலாம். சாயம் போகும் ஆடைகளை சில நாட்களுக்கு தனியாக துவைப்பதே சிறந்தது. உப்பு மற்றும் வினிகர் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் துவைத்து அலசுவதன் மூலம் துணிகள் சாயம் போவதை சீக்கிரமே தடுக்க முடியும்.

    சில துணிகள் இரண்டு அல்லது மூன்று சலவைகளிலே முழுவதும் சாயம் போய் வெளிர் நிறமாக மாறிவிடும். இயற்கையான சோப்பு அல்லது மென்மையான ஷாம்பு பயன்படுத்தி இந்த துணிகளை துவைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சாயம் போகும் ஆடைகளை சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் துணிகள் விரைவாகவே வெளிறிவிடும்.

    இதனைத் தவிர்க்க நிழலில் உலர்த்தலாம். சில நேரங்களில் சாயம் போகும் துணியுடன் வெள்ளை நிற உடைகளை தெரியாமல் ஊறவைத்திருப்போம். அப்போது அந்த சாயம் வெள்ளை உடைகளில் பற்றிக்கொள்ளும். அதைப் போக்க இவ்வாறு செய்ய வேண்டும். சாயம் பிடித்த உடையை உலர வைக்கும் முன்பே, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

    அதில் பாதி எலுமிச்சம்பழத்தின் சாற்றினை ஊற்றி, அந்த நீரில் வெள்ளைத் துணிகளை ஐந்து நிமிடம் ஊற வைத்து துவைப்பதன் மூலம் சாயக்கறையை நீக்கிவிடலாம். சாயம் போகும் ஆடைகளை உள்பக்கமாக மடித்து வைப்பது நல்லது. மடித்து வைத்த பின்பும் சில துணிகளில் சாயம் போகலாம். எனவே நிறங்களின் அடிப்படையில் துணிகளை தனித்தனியே பிரித்து அடுக்கி வைப்பது சிறந்தது.

    • புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன.
    • இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின

    பாரம்பரிய ஆடைகளில் புடவைக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பட்டு, காட்டன், ஷிபான் என பல ரகங்கள் உள்ளன. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது

    பண்டைய காலத்தில் உடல் முழுவதும் சுற்ற அணியப்படும் ஓர் ஆடையாகத்தான் புடவை இருந்தது.

    புடவை அணிவதற்குகென்று எந்தவிதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்பு சங்ககால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர்.

    அந்த காலத்தில் பெண்கள் தொப்புள் தெரியும் படிதான் புடவையை அணிந்தார்கள். பிறகு அவ்வாறு அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னரே தற்போது உடுத்தும் முறை தோன்றியது,. அந்த காலத்தில் தைக்கப்படாத ஆடைகள் அணிபவர்கள் சிறந்தவர்கள் எனும் நியதி இருந்தது. அதன் காரணமாகவே விழா, கோவில் திருவிழக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் புடவை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.

    முகலாயர்களின் வருகைக்கு பிறகே புடவையில் கற்கள், ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இடுப்பை மறைத்தபடி நீண்ட ரவிக்கை அணிந்து அதன்மேல் புடவை உடுத்த ஆரம்பித்தார்கள். இந்த முறைக்கு நிவி ஸ்டைல் என்று பெயர்.

    ஆரம்ப காலத்தில் பட்டுப்புடவைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர்.

    நாம் வீர மங்கைகளாக கருதும் ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் பாரம்பரிய உடைகளாக புடவையை அணிந்துதான் போரிட்டனர்.

    தென்னிந்தியாவில் புடவைகள் பெண்களின் பிரதான ஆடையாக இருந்தாலும் இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின.

    ஆரம்பத்தில் புடவை ஒரு நிறத்திலும், ரவிக்கை வேறு நிறத்திலும் அணிந்தனர். காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி இப்போது பல டிசைன்களில் அணிந்து வருவதை பார்க்கிறோம்.

    புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல ரகங்கள் உண்டு.

    • நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.
    • அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும்.

    'ஆள் பாதி ஆடை பாதி' என்பதற்கு ஏற்ப, நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டும். ஆனால், பல பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதை அறிந்து மாற்றிக்கொண்டால், மேலும் தன்னம்பிக்கையோடும், அழகோடும் திகழலாம். அதற்கான குறிப்புகள் இதோ…

    கண்களை உறுத்தாத ஆடைகள்: நாம் அணியும் ஆடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக, சுடிதார் டாப்ஸ்சுக்கு தேர்வு செய்யும் லெக்கின்ஸ்சில் இந்தத் தேர்வு முக்கியம். உயரம் குறைவான டாப்ஸ் அணியும் போது, அதற்கு லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பக்கவாட்டில் திறந்திருக்கும் வகையிலான ஆடை உடுத்தினால், லெக்கின்ஸ் அணியாமல், பளாசோ, சாதாரண சுடிதார் பேண்ட், ஜீன்ஸ் போன்றவற்றை தேர்வு செய்து அணியலாம். லெக்கின்ஸ், உடலுடன் ஒட்டிக் கொள்ளும் என்பதால், பிறரின் கவனத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அனார்கலி, உயரம் அதிகமான டாப்ஸ்சுக்கு லெக்கின்ஸ் அணியலாம். அதேபோல், தரமான துணிகள் வாங்குவதும் முக்கியம். பளாசோ அணியும் போது, டாப்ஸ் கணுக்கால் வரையில்லாமல், முழங்கால் வரை இருக்கும்படி அணியலாம். சரும நிற லெக்கின்ஸை தவிர்த்து, அடர் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.

    உள்ளாடையில் கவனம்: உள்ளாடையில், எலாஸ்டிக் தளர்வாகவோ, ஒருபுறம் ஏற்ற, இறக்கத்துடனோ இருப்பவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது, அணியும் உள்ளாடை சரியாகவும், அடர் நிறத்திலும் இருக்க வேண்டும். மேலே அணியும் ஆடை மெல்லியதாக இருந்தால், உள்புறம் 'சிலிப்' போன்ற உள்ளாடையைத் தேர்வு செய்து அணியலாம்.

    நிறத்தேர்வில் தெளிவு: அடர் நிற மேலாடையைத் தேர்வு செய்யும்போது, அதற்கேற்ப இணை உடை, லேசான நிறத்திலோ அல்லது அதற்கு ஒத்துப் போகும் நிறத்திலோ இருக்க வேண்டும். மேலே அணியும் டாப்ஸில் அதிக டிசைன் இருந்தால், அதற்கு அணியும் பேண்ட், டிசைன் இல்லாமல் இருக்கலாம். இது போன்று அணிந்தால், நம் அழகை மேலும் மெருகேற்றிக்காட்டும்.

    நகைகளில் அழகு: அணிந்திருக்கும் ஆடை ஆடம்பரமாக இருந்தால், நகை சாதாரணமாக இருக்கலாம். கழுத்தில் ஆடம்பரமான பெரிய நகைகள் அணிந்தால், காதுக்கு சிறிய காதணியை தேர்ந்தெடுக்கலாம். மார்டன் உடைகள் உடுத்தும் போது, ஆடம்பரமான பெரிய நகையை அணியாமல், சாதாரண வகையிலான சிறிய நகைகள் போடலாம்.

    சரியான அளவு: அதிக இறுக்கமான உடையோ அல்லது தளர்வான உடைகளோ அணிந்தால் அது நம் அழகைக் கெடுக்கும். எனவே, தேர்வு செய்யும் ஆடை, நமக்கு சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கைப்பை: பெண்களுக்குத் தேவைப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று, ஹேண்ட் பேக். அலுவலகத்திற்கு பெரிய கைப்பைகள் எடுத்துச் சென்றாலும், விசேஷங்களுக்குச் செல்லும்போது சிறிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யலாம். ஒல்லியாக இருப்பவர்கள் பெரிய அளவிலான கைப்பைகளைத் தேர்வு செய்யாமல், நடுத்தர அளவிலான கைப்பைகளை வாங்குவது சிறந்தது.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    புடவை கட்டும்போது 'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    • பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது பட்டு புடவைக்கு தான்.
    • பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

    நம் பாரம்பரிய உடையான புடவையிலே பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இந்த பட்டு புடவைக்கு தான். பெண்கள் நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதிகமாகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கொடுப்பார்கள். அதிலும் கல்யாண பட்டு என்றால் அவர்கள் ஆயிசுக்கும் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பட்டுப் புடவையில் கறை படிந்து விட்டால், அதை சுத்தம் செய்வது பெரும் வேலை.நம் வீட்டிலேயே சுலபமாக அந்த கறைகளை நீக்கிவிடலாம்.

    பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

    ஒரு பவுலில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மையில்டான ஷாம்பு கலந்து பட்டுப் புடவையில் கறைகள் இருக்கும் இடத்தை மட்டும், இந்த பவுலில் இருக்கும் தண்ணீரில் முக்கி எடுத்து லேசாக கசக்கினாலே போதும் கறை நீங்கி விடும். இதனால் ஓரிடத்தில் இருக்கும் சாயம் மற்ற இடத்திற்கு மாறாது அதே நேரத்தில் துணியில் உள்ள கறையும் மாறாமல் இருக்கும்.

    பட்டுப் புடவையை பராமரிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சனை புடவையில் பட்டு விடும் எண்ணெய் கறை தான். அந்த கறைகளை போக்க கறை இருக்கும் இடத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை கொட்டி, ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். எண்ணெய் கறையை மொத்தமும் அந்த பவுடர் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு புடவையில் அந்த பவுடரின் கறை தெரியும். அதற்கு குகுளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து பவுடர் கறை இருக்கும் இடத்தில் லேசாக துடைத்து விடுங்கள். காய்ந்த பிறகு புடவையில் எண்ணெய் கறையும் இருக்காது, பவுடர் கறையும் மறைந்து விடும்.

    பட்டுப் புடவையில் விடாப்பிடியான கறைகள் இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கிளிசரின். பட்டுப்புடவையில் கறை இருக்கும் பகுதியின் அடியில் ஒரு வெள்ளை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறை இருக்கும் இடத்தில் மட்டும் இந்த கிளிசரனை பட்ஸ் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். கறை இருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கிளிசரினை தடவ வேண்டும். துடைக்கும் போதே கறைகள் வந்து விடும் மிகவும் அழுத்தி துடைக்க கூடாது. கறை மொத்தமும் வந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து கிளிசரின் வைத்து துடைத்து இடத்தில் துடைத்து விட வேண்டும். இதுவும் கண்டிப்பாக செய்ய வேண்டும். கிளிசரணை மட்டும் வைத்து துடைத்து விட்டு விட்டால் கிளிசரின் கம் போல இருக்கும் அது புடவையில் பிடித்துக் கொண்டு புடவை பார்க்க நன்றாக இருக்காது. இந்த கிளிசரின் வைத்து துடைக்கும் முறையை மட்டும் கவனமாக செய்ய வேண்டும். இது அதிகமாகவும் சேர்த்து விடக் கூடாது அதே நேரத்தில் அதிகமாக சாயம் போக கூட புடவையில் இதை தேய்க்கும் முன்பு ஒரு முறை லேசாக தொட்டு பரிசோதித்து விட்டு அதன் பிறகு செய்து கொள்ளுங்கள்.

    பட்டுப்புடவையில் எதிர்பாராமல் காபி, டீ, வேறு ஏதாவது கறை பட்டால் கவலைப்படவேண்டாம். பொராக்ஸ்பவுடரை தண்ணீரில் கரைத்து பட்டுப்புடவையை கொஞ்சநேரம் ஊறவைத்துவிட வேண்டும். பின்னர் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரில் துணியை அலசி பிழியாமல் புடவையிலுள்ள தண்ணீரை வடியவிட்டு காயவிட்டால் புடவையில் இருந்த கறை காணாமல் போய்விடும்.

    • ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது.
    • சேலையின் விலை ரூ.5 ஆயிரம், ஜாக்கெட் தையல் கூலி ரூ.15,000.

    அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகை விரும்புவார்கள், ரசிப்பார்கள். இது அவர்களின் இயல்பான குணம்.

    அதனால் தான் ஆடை அலங்காரங்களை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடை வடிவமைப்புகளை டிசைனர்கள் உருவாக்கி கொண்டே வருவார்கள்.

    புதிதாய் கலை நயத்துடன் என்ன வந்தாலும் அதை வாங்கி அணிந்து பயன்படுத்துவதில் பெண்கள் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இதை ஜவுளி கடைகளுக்கு செல்லும்போது எல்லோரும் பார்க்கவும் முடியும், உணரவும் முடியும்.

    எத்தனை சேலைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.கல்லிலே கலை வண்ணம் கண்டான்.... என்று தான் முன்பெல்லாம் சொல்ல கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் இப்போது பெண்களின் சேலை- ஜாக்கெட்டுகளில் தங்கள் கற்பனை களையும், கைவண்ணத்தையும் காட்டி கவருகிறார்கள்.

    இப்போது பெண்களை கவருவதில் பிரபலமாக இருப்பது ஆரி ஒர்க் என்ற கலைநயம் மிக்க தையல்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த இந்த வேலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் பரவத் தொடங்கியது.

    இப்போது தமிழகம் முழுவதும் இந்த ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது. ஒரு பட்டு புடவை குறைந்த பட்சம் ரூ. 5000- க்கு எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கான ஜாக்கெட்டை இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு மூலம் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கிறது. கேட்டால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்பட தோன்றும்.

    ஆனால் இதுதான் இன்று பெண்களிடையே மிகப்பெரிய மோகத்தை உருவாக்கி இருக்கிறது. மணப்பெண்ணுக்கு பட்டு சேலையின் மதிப்பு சராசரியாக ரூ.25 ஆயிரம் என்றால் அவர்களுக்கு ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகிறது. குடும்பச் சூழ்நிலையை கருதி ரூ.2000 முதல் 5000 அல்லது 10 ஆயிரத்திற்குள் முடித்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த வேலைப்பாடு ஜாக்கெட்டில் தங்க நிறத்திலான முத்துக்களை தங்கம் மற்றும் வெள்ளை நிறத்திலான மிகச்சிறிய அளவிலான முத்துக்களை வடிவத்திற்கு ஏற்ப கோர்ப்பது தான். என்ன வடிவத்தை என்ன வேலை பாட்டை விரும்புகிறோமோ அதை அந்த ஜாக்கெட்டில் கொண்டு வர முடியும். விதவிதமான பறவைகள் பூக்கள் செடி கொடிகள் இலைகள் போன்று பல்வேறு விதமான வடிவமைப்பு-களை இந்த ஜாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

    இப்போது அதையும் தாண்டி ஜாக்கெட்டில் இதே வேலைப்பாட்டில் பெயர்களையும் பொறித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதிலும் ஒரு படி மேலே போய் விட்டார்கள். காதலித்து திருமணம் செய்பவர்கள் காதலித்த காலத்தில் சில சுவாரஸ்யமான அனுபவங்களை சந்தித்து இருப்பார்கள். அதைக் கூட கற்பனையில் காட்சியாக்கி தங்கள் பட்டுக்களில் பார்டரில் இந்த ஆரி ஒர்க் மூலம் செதுக்கி விடுகிறார்கள்.

    இந்த தொழிலில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுகிறார்கள். நம்மூர் தையல்காரர்களும் இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு செய்வதற்காக வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிழைக்க தெரிந்தவன் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இது கலைஞர்களின் கற்பனை திறனை வெளிப்படுத்தி சம்பாதிக்கும் அற்புதமான கலை வேலைப்பாடு.

    • ஸ்வெட்ஷர்ட் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது
    • ஸ்வெட்ஷர்ட் நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள்...

    ஸ்வெட்ஷர்ட்களை உடற்பயிற்சி செய்யும்பொழுது அணியக்கூடிய வசதியான ஆடை என்று குறிப்பிடுவது கடந்த காலத்தின் ஒரு விஷயம் எனலாம். இப்போது, அவை சாதாரண உடைகள் மற்றும் வீதிகளில் நடந்து செல்பவர்களில் பலர் அணியக்கூடிய ஆடை வகையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அன்றாடும் உடுத்தக் கூடியஸ்வெட்ஷர்ட்களை எப்படி அணிவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?அவற்றை நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள் !

    1.வெளியில் தோழிகளுடன் ஹோட்டலுக்குச் செல்லும் பொழுது சிறிய ஸ்கேட்டர் ஸ்கர்ட் மற்றும் மாறுபட்ட ஸ்வெட்ஷர்ட் மற்றும் ஒரு ஜோடி கணுக்கால் பூட்ஸை அணிந்து செல்லலாம். அங்கிருக்கும் அனைவரின் கவனமும் உங்களின் மீது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    2.ஸ்லிம்-ஃபிட் ஜீன்ஸ் மற்றும் உங்கள் சிறந்த ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஆண்கள் ஸ்வெட்ஷர்ட்களை இணைத்து அணியும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என்று சொல்லத் தோன்றும்.

    3.ஒரு சட்டையின் மேல் புறம் ஸ்வெட்ஷர்ட்டை அணியும் பொழுது அவை பல அடுக்குகளாகத் தோன்றினாலும் குளிர்காலத்தில் வெளியே செல்லும்போது அணிவதற்கு ஏற்ற ஆடையாக இவை இருக்கும்.

    4.ஸ்வெட்ஷர்ட்டுக்கு மேல் டி-ஷர்ட்டு அணிவதும் இப்பொழுது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது. இதனால் மந்தமாக இருக்கும் டி-ஷர்ட்டும் பளிச்சென்ற தோற்றத்தை தருவதாக இருக்கும்.இவ்வாறு அணியும் பொழுது அனைவராலும் நம்முடைய ஆடை அணியும் பாணி பாராட்டப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

    5.சரியான ஜோடி ஷார்ட்ஸ் அல்லது அழகான சிறிய பாவாடையுடன், நீங்கள் ஒரு ஸ்வெட்ஷர்ட்டை உடுத்தும்போது ஒரு புதிய ஃபேஷனை நீங்கள் அறிமுகப்படுத்துபவராக இருப்பீர்கள்.

    6.ஒரு நல்ல ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்வெட்ஷர்ட் அணியும் பொழுது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மிகவும் அழகானதாக மாற்றிவிடும். லோஃபர்கள் அல்லது ஃபிளிப் ஃப்ளாப்புகளும் ஸ்வெட்ஷர்ட்களுடன் அணிவதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா?

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா அல்லது வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் வசதியைப் பொறுத்ததாகும்.ஸ்வெட்ஷர்ட்கள் வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை நம் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகின்றன.எதுவாக இருந்தாலும், ஸ்வெட்ஷர்ட் அணிவதை விட கோடையில் ஸ்வெட்டர்களை அணிவது நடைமுறைக்கு பொருந்தாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்பொழுது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து ஈரமான ஆடைகளை அணிவதிலிருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவையாக இந்த ஸ்வெட்ஷர்ட்டுகள் செயல்படும் என்று உறுதியாக நம்பலாம்.

    ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

    ஒரு ஸ்வெட் டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள மிக அடிப்படையான வேறுபாடு, அவை தயாரிக்கப்படும் விதம்.ஸ்வெட்டர் முற்றிலும் பின்னப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.ஆனால் ஸ்வெட்ஷர்ட் அப்படி தயாரிக்கப்படுவதில்லை. ஸ்வெட்ஷர்ட் கனமான பருத்தியால் தயாராகின்றது. ஸ்வெட்டர்கள் குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகின்றன. ஸ்வெட்ஷர்ட்டுகள் நம் உடலை கதகதப்பாக வைத்திருப்பதோடு நம் உடலில் ஏற்படும் வியர்வையையும் உறிஞ்சுகின்றது. இதன் காரணமாகவே உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்வெட்ஷர்ட்களை அதிகம் விரும்பி அணிவதைப் பார்க்க முடிகின்றது. ஒரு ஸ்வெட்ஷர்ட்டில் முன்புறம் திறந்து அணிந்துகொள்வது போன்ற வசதி இருக்காது. ஆனால் ஒரு ஸ்வெட்டரின் வடிவமைப்பு அல்லது பாணியைப் பொறுத்து திறந்து மூடக்கூடிய வசதியானது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

    • ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது.
    • ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது.

    சில காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்டும்,அணியப்பட்டும் மிகவும் பிரபலமடைந்திருப்பதை நாம் அறிந்திருப்போம்.ஷார்ட்ஸ், முக்கால் பேண்ட், கார்கோ பேண்ட் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இப்போது இதுபோன்ற ஆடைகளின் வரிசையில் அனைவராலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஸ்வெட்ஷர்ட் என்பதாகும்.

    ஸ்வெட்ஷர்ட் என்றால் என்ன?

    ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது. சிலர் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற புது பாணிகளில் நமக்கு அணிவதற்கு வசதியான ஆடைகளையும், இன்னும் சிலர் உடற்பயிற்சிகளின் போது அணிவதற்கு ஏற்றார் போன்ற ஆடைகளையும் தேர்ந்தெடுத்து அணிவதைப் பார்க்க முடியும். இந்த ஃபேஷன் ஆடையானது நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது.

    ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது. அதேநேரம் அந்த கம்பளியை பிரஷ் செய்து மிகவும் மென்மையாக கொடுக்கிறார்கள். இதில் இருக்கும் ஃபிளீஸ் லைனிங் போன்று கொடுக்கப்பட்டு ஒரு மென்மையான, சூடான உணர்வைத் தந்து அணிபவருக்கு கம்பளியை அணிந்தது போன்ற உணர்வைத் தருகின்றது.இவை ஸ்வெட்டர் போன்று பெரிதாக அல்லது தளர்வாக வந்தாலும் இவை ஸ்வெட்டர் அல்ல ஸ்வெட்ஷர்ட்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    உண்மையில் ஸ்வெட்டர் வகைகளின் கீழ் வந்தாலும் இவை ஸ்வெட்டரிலிருந்து மாறுபட்டவை.அதேபோல் ஸ்வெட்ஷர்ட் அணிந்து வேலை செய்யலாம் ஆனால் குளிர்காலம் தவிர மற்ற காலங்களில் ஸ்வெட்டர் அணிய முடியாது.ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்.கோடைக்காலத்தில் அணியக்கூடிய பல ஆடைகளில் ஸ்வெட்ஷர்ட்டும் கட்டாயம் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலர் ஸ்வெட்ஷர்ட்களை ஹூடிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லா ஸ்வெட்ஷர்ட்களும் ஹூடி அமைப்புடன் வருவதில்லை.தடிமனான பருத்தித் துணியில் உட்புறம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு லைனிங் கொடுக்கப்பட்டு வருவது ஸ்வெட்ஷர்ட்டாகும்.

    அவை உங்கள் உடற்பகுதி மற்றும் கைகளை மறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன, இதனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது இடையூறு செய்யும் அதிகப்படியான வியர்வைக்கு விடை கொடுக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ×