search icon
என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சமீபத்திய மாதங்களில் நகர்ப்புற மையங்களில் நடந்த பல பெரிய தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது
    • பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஏன் பாகிஸ்தான் வெற்றி பெற முடியவில்லை

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    சென்ற மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 12 பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கெதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    "ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால் போதுமான நடவடிக்கைகளை அது எடுக்கவில்லை. இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என பாகிஸ்தான் எச்சரித்தது.

    இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் விமர்சித்துள்ளது.

    தலிபான் அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறியதாவது:

    "எங்கள் மண்ணை ஒரு போதும் நாங்கள் பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தவில்லை; பயன்படுத்த அனுமதிப்பதுமில்லை. பாகிஸ்தானில் மட்டும் ஏன் பயங்கரவாதம் வளர்கிறது? பட்ஜெட்டில் பெரும் பகுதியை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த செலவு செய்தும் ஏன் பாகிஸ்தானால் அதில் வெற்றி பெற முடியவில்லை? எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டு கொள்வது இல்லை.
    • மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டு கொள்வது இல்லை.

    இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது அங்குள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி நடவடிக்கை.
    • நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் எரித்தனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது.

    இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான் தீயிட்டு எரித்தன.

    இதுகுறித்து, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் கூறுகையில், "இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்" என்று கூறினார்.

    இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபார் அதிகாரிகள் எதிர்த்தனர்.

    இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் ஆகியவை இருந்தது.

    • ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார்.
    • செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் காபூல் பிரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஷாஹின் ஹண்டர்ஸ், அபாசின் டிஃபண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அபாசின் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து இருந்தது. அப்போது, கேப்டன் செதிகுல்லா அடல் 77 ரன்களையும், செய்த் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 19வது ஓவரை, அபாசின் அணியின் அமிர் சாஜாய் வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீச செதிகுல்லா அந்த பாலில் சிக்சர் அடித்தார். இதையடுத்து வீசிய பந்து வைடுடன், பைஸ் முறையில் பவுண்டரி ஆகவும் மாறியது. தொடர்ந்து, ஃபிரீ ஹிட் பந்தில் சிக்சர் அடித்த செதிகுல்லா, அதன்பின்னர் வீசப்பட்ட அந்த ஓவருக்கான 6 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி அரங்கை அதிரவைத்தார். என்ன நடக்கிறது என புரியாமல் பந்துவீச்சாளர் கதிகலங்கி நின்றார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள் கிடைத்தது.

    இதன் மூலம் ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார். அதேசமயம், ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சஜாய் படைத்தார்.

    செதிகுல்லாவின் அதிரடி ஆட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ஷாட்களை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப்போய் உள்ளனர்.

    இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா, 56 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 118 ரன்களை விளாசினார். இதனல் ஷாஹின் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்தது. இதையடுத்து ஆடிய அபாசின் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

    செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிதான் அது. அந்த போட்டியில் 11 ரன்கள் மட்டுமே அடித்த அவர், உள்ளூர் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதால், ஆப்கானிஸ்தான் டி20 அணியில் தனது இடத்தை நிச்சயம் உறுதி செய்வார்.

    • திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளது.
    • கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி கூறுகையில், " கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளது.

    மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரிடர் மண்டலத்திற்கு அவசர உதவிகளுக்காக மீட்புக் குழு விரைந்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜல்ரெஸில் 604 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஹிமி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    நாடு முழுவதும், "கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்று ரஹிமி குறிப்பிட்டார்.

    • சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் போராட்டம்
    • ஐ.நா. சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டன தீர்மானம் கொண்டு வந்தது

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் இதுகுறித்த முழு விவரம் சரியாக தெரியவரவில்லை. இதுகுறித்து சுவீடன் தூதுரக அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.

    இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் கல்லூரி செல்ல தடைவிதித்துள்ளது
    • சினிமா, பார்க் போன்ற இடங்களிலும் வேலை செய்யவும் தடை

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதித்தது. அதன்பின் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடைவித்தது. பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடைவித்தது.

    அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்கள் உரிமை பறிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுவும் ஒன்றாகிறது.

    ஏற்கனவே ஆண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். ஆண்கள் வீட்டு சுமையை ஏற்கமுடியாத நிலையில், பெண்கள் அதனை ஏற்க அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தற்போது அழகு நிலையத்திற்கு தடைவிதித்தால், நாம் என்ன செய்ய முடியும்'' என மேக்கப் கலைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

    மேலும், ''ஆண்களுக்கு வேலை இருந்தால், நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வரமாட்டோம். நாங்கள் தற்போது என்ன செய்யும்?. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?. நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா?'' என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

    காபூலில் வசித்து வரும் நபர் ஒருவர் ''தலிபான் அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது இஸ்லாம் மற்றும் நாடு ஆகியற்றை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.

    ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

    • உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.
    • ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

    அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.

    இந்த நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட் ரிக் டன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன.

    இந்த தானியங்கள் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படுகிறது. இதில் 2,500 மெட்ரிக் டன் கோதுமையின் முதல் தவணை இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஹெ ராத் நகருக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது.

    • ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு.
    • குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்

    இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×