என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

X
பாக்தாத்தில் சுவீடன் தூதரகம் தாக்கப்பட்டு தீ வைப்பு
By
மாலை மலர்20 July 2023 2:53 AM GMT (Updated: 21 July 2023 1:16 AM GMT)

- சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் போராட்டம்
- ஐ.நா. சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டன தீர்மானம் கொண்டு வந்தது
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் இதுகுறித்த முழு விவரம் சரியாக தெரியவரவில்லை. இதுகுறித்து சுவீடன் தூதுரக அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
