search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்கொலை"

    • 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.
    • சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 63). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சேகர் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சேகர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குணமடைந்து கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சேகர் மீண்டும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மோட்டார் சைக்கிள் ஒன்றை வா ங்கி தரச்சொல்லி நவீன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
    • அவர் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவீன் விஷம் குடித்து விட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் நவீன் (வயது 19).

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வா ங்கி தரச்சொல்லி நவீன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.ஆனால் அவர் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவீன் விஷம் குடித்து விட்டார்.

    அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தார்.இது குறித்து சதீஷ்குமார் தந்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அலமேலு மங்காபுரம் சமாதான நகரை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 21). இவர் உள்பட 4 பேர் மீது அந்தப் பகுதியில் அடிதடி சம்பந்தமாக புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக அருள் செல்வம் மற்றும் அவரது நண்பர்களை சத்துவாச்சாரி போலீசார் அழைத்தனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோன அருள் செல்வம் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.

    ஆபத்தான நிலையில் அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள் செல்வம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி செம்புளிசாம்பாளையம் நடராஜ் தோட்டத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (30). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.

    சிவகுமாருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தீபா என்கிற தீபலட்சுமி என்ற மனைவியும், கிஷோர் ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பு கள்ளிப்பட்டியில் வசித்துக் கொண்டு பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளார். இதில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் இத்தொழிலை கை விட்டுள்ளார்.

    தற்பொழுது சிவக்குமார் தனது தந்தை வீட்டுக்கு பக்கத்தில் மனைவி குழந்தை–யுடன் இருந்து வசித்து வந்தார். சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு–கிறது.

    இந்நிலையில், சிவகுமாருக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் சிவக்குமார் வெளியில் சென்று வருவதாக மனைவி தீபாவிடம் சொல்லி விட்டு சென்றுள்ளார்.

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் சிவக்குமாரை தேடியுள்ளனர். இந்த நிலையில் சிவக்குமாரின் நண்பர் கள்ளிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் சிவக்குமாரின் உறவினர் சென்னியப்பன் என்பவருக்கு போன் செய்து சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சிவக்குமாரின் குடும்பத்தார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவக்குமார் இறந்து கிடந்ததை கண்டு உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கேடரை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). 4 வருடமாக இடுப்பு வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். எனினும் இடுப்பு வலி குணமாகவில்லை.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்கும் போது வலது கணுக்காலில் மேல் காயம் ஏற்பட்டு வலியால் அவதி அடைந்து வந்தார். ஏற்கனவே இடுப்பு வலியால் மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாப்பாத்தியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பாத்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி வைத்தீஸ்வரி. இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

    கடந்த தீபாவளி பண்டிகை அன்று விஷம் அருந்திய வைத்தீஸ்வரியை அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

    வைத்தீஸ்வரியின் உடலை உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து அரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வைத்தீஸ்வரிக்கும் குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமராஜனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜ் பீர் பாட்டிலில் விஷம் கலந்து, அதை குடித்துவிட்டு தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்,

    பின்பு இருவரும் விஷத்தை அருந்தி உயிரை மாய்த்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். பீர் பாட்டிலில் விஷம் கலந்த மதுவை வைத்தீஸ்வரி மட்டும் அருந்த, ராமராஜ் அதை குடிக்காமல் குடித்ததை போல நாடகமாடியுள்ளார்.

    இதன் காரணத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் அரசு மருத்துவமனை முன்பு இறந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார்.
    • மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு காளியம்மாள், பழனியம்மாள் (60) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் காளியம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பழனியம்மாளுக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். பழனியம்மாள் ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பழனியம்மாள் மகன் முருகேசன் வீட்டுக்கு சென்று வீட்டு முன்பு உள்ள திண்ணையில் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசனின் மனைவி இது குறித்து முருகேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

    முருகேசன் வீட்டிற்கு விரைந்து வந்து உறவினர்கள் மூலம் பழனியம்மாளை கார் மூலம் கவுந்தப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு பழனியம்மாள் அழைத்துச் செல்லப்பட்டார்.

    இதில் மன வேதனையில் இருந்த பழனியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
    • இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சம்பளம் கேட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராகுல் (வயது 24) இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் ராகுல் கடந்த 14-ந் தேதி விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது பெற்றோர் ராகுலிடம் வேலை செய்து வாங்கிய சம்பள பணத்திற்கு கணக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராகுல் எலி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிழே விழுந்து கிடந்தார். அதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ராகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தந்தை லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
    • மதுபான கடை அருகே பிணமாக கிடந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள புளியங்கண்ணு திருவள்ளு வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 40). மோட் டார் சைக்கிள் மெக்கானிக் காகவேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெய் சங்கர் பின்னர் வீடு திரும்ப வில்லை.

    இந்தநிலையில் அவர் புளியந்தாங்கல் பக்கத் தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதபரி சோதனைக்கு அனுப்பிவைத் தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கண் வலியால் அவதிப்பட்டு வந்தார்


    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒகளூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராசு (வயது 73). தனது மனைவியுடன் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே கண் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ராசு களைக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் வாந்தி எடுத்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • வீட்டில் மயங்கி கிடந்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ( வயது 50 ) . இவர் ஆரணியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (48) இவர்களது மகள்கள் சரோ ஜினி ( 30 ) , லட்சுமி (28 ) , ஜெயந்தி ( 25) மூத்த மகள் சரோஜினியை ஆரணியை அடுத்ததுந்திரீகம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் ( 32 ) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணத்துக்கு பின்னர் கணவர் தினகரனுடன் சரோ ஜினி சென்னையில் குடியேறினார். தினகரன் தனியார் நிறுவனத்தில் செல்போன் ' டவர் மெக்கானிக்காக பணி யாற்றினார். 5 ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல் லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அக்ராபாளையத்தில் சரோஜினியின் பெற்றோர் புதிய வீடு கட்டிகிரகப்பிரவேசம் நடத்தினர்.

    அதில் பங்கேற்க வந்த சரோஜினி தாய் வீட்டிலேயே இருந்தார். தினகரனும் சொந்த ஊரான துந்தரீகம்பட்டுக்கு வந்து அவரும் தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினகரன் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். கணவர் இறந்ததை அறிந்த சரோஜினி கதறினார்.

    சரோஜினியின் நிலை இவ் வாறாகி விட்டதே என தந்தை அர்ஜூனன், தாயார் ஜெயலட்சுமி, தங்கைகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் தற்ெகாலை செய்ய முடிவு செய்து சரோஜினியுடன் அனைவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனி டையே கணவரின் இறுதிச் சடங்கிற்கு வராததால் உறவினர்கள் அவரை தேடிவந்தனர்.

    அப்போது சரோஜினி, அவ ரது தாய், தந்தை, தங்கைகள் என 5 பேரும் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் ஆரணி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×