search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
    X

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

    • வீட்டில் மயங்கி கிடந்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் ( வயது 50 ) . இவர் ஆரணியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி (48) இவர்களது மகள்கள் சரோ ஜினி ( 30 ) , லட்சுமி (28 ) , ஜெயந்தி ( 25) மூத்த மகள் சரோஜினியை ஆரணியை அடுத்ததுந்திரீகம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினகரன் ( 32 ) என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணத்துக்கு பின்னர் கணவர் தினகரனுடன் சரோ ஜினி சென்னையில் குடியேறினார். தினகரன் தனியார் நிறுவனத்தில் செல்போன் ' டவர் மெக்கானிக்காக பணி யாற்றினார். 5 ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல் லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அக்ராபாளையத்தில் சரோஜினியின் பெற்றோர் புதிய வீடு கட்டிகிரகப்பிரவேசம் நடத்தினர்.

    அதில் பங்கேற்க வந்த சரோஜினி தாய் வீட்டிலேயே இருந்தார். தினகரனும் சொந்த ஊரான துந்தரீகம்பட்டுக்கு வந்து அவரும் தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினகரன் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினர். கணவர் இறந்ததை அறிந்த சரோஜினி கதறினார்.

    சரோஜினியின் நிலை இவ் வாறாகி விட்டதே என தந்தை அர்ஜூனன், தாயார் ஜெயலட்சுமி, தங்கைகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோர் தற்ெகாலை செய்ய முடிவு செய்து சரோஜினியுடன் அனைவரும் விஷத்தை குடித்து விட்டனர். இதனி டையே கணவரின் இறுதிச் சடங்கிற்கு வராததால் உறவினர்கள் அவரை தேடிவந்தனர்.

    அப்போது சரோஜினி, அவ ரது தாய், தந்தை, தங்கைகள் என 5 பேரும் விஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் ஆரணி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×