search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது
    • செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இரணியல் :

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரணியல் சுற்று வட்டார கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் செல்வராஜ கணபதி கோவில் முன் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதுபோல் இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர் ஆலயம், கீழத்தெரு சிங்க ரட்சக விநாயகர், பட்டாரியர் தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு மற்றும் சுற்று வட்டார கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வருகிற 24-ந்தேதி குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திங்கள்நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

    • விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

    கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், வடமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூஜைக்கு பிறகு நேற்று துடியலூர் பஸ் நிறுத்தத்திற்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பா.ஜ.கவினர் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்றபோது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக துடியலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜூ, கிருஷ்ணா மற்றும் பலர் மீது அனுமதியின்றி கூடியது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், சிலை எடுத்து செல்லப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சதுப்பேரி ஏரியில் கரைப்பு
    • 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று நடைபெற்றது.

    வேலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டிஐஜி முத்து சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

    நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்பாபு, அரசு ராஜா, அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில், சந்தா சாகிப் மசூதி, கிரு பானந்தவாரியார் சாலை, தெற்கு போலீஸ் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, பைபாஸ் சாலை வழியாக சதுப்பேரிக்கு சென்றது.

    அதேபோல், மற்றொரு ஊர்வலம் கொணவட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் தொடங்கியது.

    சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பிரத்யேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கப்படுகின்றன.

    வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று ஒரே நாளில் கரைக்கப்பட்டன.

    வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா முழுவதையும் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    கேமரா காட்சி பதிவை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து தேவைப்படும் இடத்தில் அறிவிப்பு செய்தனர்.

    • விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    ஆய்வு

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள காத்தாக்கண்டர் கடைவீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, சந்தை பகுதி, பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை, காவிரி சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    600 போலீசார் பாதுகாப்பு

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலை மையில் சுமார் 600- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.

    • உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் .
    • ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் . நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் புதிதாக வெளியாகும் ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மற்றும் வெளிவர உள்ள லால் சலாம் ஆகிய படங்களின் ரஜினி கதாபாத்திரத்தோற்றங்களை களிமண் மூலம் சிலை வடித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளார்.இவரை அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினர்.

    • பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திமிரி:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குட்டை புறம்போக்கு இடத்தில் இரவோடு இரவாக சமன் செய்து கல் விநாயகர் சிலை வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஊர்வலம் வரும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வ லங்கள் ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    37 விநாயகர் சிலைகள்

    கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செங்கோட்டை நகரில் மட்டும் சுமார் 37 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை முறையே பள்ளிமேட்டு பகுதி, காமாட்சி அம்மன் கோவில், வீரகேரள விநாயகர் கோவில், பூதத்தார் கோவில், காளியம்மன் கோவில் திடல், ஓம் காளி திடல், வம்பளந்தான் முக்கு, செல்வவிநாயகர் கோவில், எஸ்.ஆர்.கே. தெரு, மேலூர் அப்பா மாடசாமி, பள்ளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஓம்காளி திடலில் இருந்து புறப்பட்டு வம்பளந்தான் முக்கு, செல்வ விநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலக முக்கு, மேலூர், பெரிய பள்ளிவாசல் வழியாக மேலபஜார், பூதத்தார் கோவில், காசுகடை பஜார், கீழ பஜார், காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு செங்கோட்டை குண்டாறு அணை பகுதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்புடன் விஜர்சனம்

    விநாயகர் சிலைகள் விஜர்சனத்திற்காக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 21 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 65 சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் காமிராக்கள் மூலமாகவும் ஊர்வலம் செல்லும் விநாயகர் சிலைகளை கண்காணிக்க ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து குண்டாற்றில் அவை விஜர்சனம் செய்யபடுகிறது.

    கிராமப்புற சிலைகள்

    செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம், பிரானூர், தேன்பொத்தை ஆகிய 3 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் வழிபாடுகளுக்கு பின் விஜர்சனம் செய்யபடுகிறது. புளியரை, கேசவபுரம், லாலா குடியிருப்பில், தெற்கு தெரு மற்றும் வடக்குதெரு ஆகிய 5 இடங்களிலும், பண்பொழியில் தைக்கா தெரு, தெற்கு தெரு, தெற்கு ரதவீதி, பேட்டை தெரு, தர்மர் கோவில், அரசமர தெரு, திட்டு தெரு உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அரிகரா நதியில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.

    இதேபோன்று தென்காசி யில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    கடையநல்லூரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளது. மேல கடையநல்லூர் கண்ணார் தெரு, கிருஷ்ணா புரத்தில் மகாராஜ கணபதி, மறுகால் தெரு, வடக்குவா செல்வி அம்மன் கோவில், மாவடிக்கால், முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளது. புளியங்குடியில் 35 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ள்ளது.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 222 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 5 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன. மாநகரில் 76 இடங்களில் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகிற 24-ந்தேதி கரைக்கப்படுகிறது.

    இதனையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 போலீசாரும், மாநகரில் 500 போலீசாரும் சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். களக்காட்டில் தோப்புத்தெரு, சாலை புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி பகுதியில் 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரபுரம், மூங்கிலடி உள்ளிட்ட பகுதிகளில் 15 இடங்களிலும், இடையன்குளம், கீழ உப்பூரணி, மஞ்சவிளை, பத்மநேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 இடங்களிலும் என மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உவரி கடல், பாபநாசம் தாமிரபரணி ஆறுகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    உடன்குடி சீர்காட்சி, தைக்கா ஊர், பரமன்குறிச்சி, வட்டன்விளை, விஜய நாராயணபுரம், முத்து கிருஷ்ணாபுரம், அம்மன்புரம், முருகேசபுரம், குலசேக ரன்பட்டினம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, அரசர் பேட்டை கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

    • வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல ஏற்காடு லாங்கில்பேட்டை முத்துமாரியம்மன் கோவில், ஜெரினாகாடு பெரியமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    • 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 503 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சிலைகள் நாளை முதல் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி மாவட்டத்தில் 5 வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சிலை பாதுகாப்புக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் வைத்து பிரதிஷ்டை செய்த சிலைகளை நாளை 20-ந் தேதி, 22.09.23 மற்றும் 24.09.2023 ஆகிய மூன்று நாட்களில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை, கடலூர் குப்பம், தழுதாலி குப்பம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரை என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகளில் 248 சிலைகள் கீழ்க்கண்ட 5 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 255 சிலைகள் சம்மந்தப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள ஏரிகள், குளங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் கடற்கரை கொண்டு செல்லப்படும்.

    மதுராந்தகத்தில் இருந்து முதுகரை சந்திப்பு வழியாக கடலூர் குப்பம் கொண்டு செல்லப்படும். மேல் மருவத்தூரில் இருந்து சித்தாமூர் வழியாக தழுதாலிகுப்பம் கொண்டு செல்லப்படும். அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சூனாம்பேடு வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்லப்படும். தொழப்பேடுல் இருந்து கயப்பாக்கம் வழியாக கடப்பாக்கம் கடற்கரை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அத்தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ள 72001 02104 மற்றும் 044-2954 0888 ஆகிய பிரத்யேக எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தருபவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டம் முழுவதும் வெகு விமர்சையாக கொண் டாடப்பட்டது. இந்து முன் னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள னர். மற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று இரவு பூஜைகள் நடந்தது.

    இன்று 2-வது நாளாக காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அவல், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களில் 2 தன்னார்வலர்கள் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரவு நேரங்களில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது.

    சிலைகள் கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை களை எடுத்துச்செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. அனுமதித்த வழித் தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.

    விநாயகர் சிலை கரைப் பதற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள் ளனர். மின்விளக்கு வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டு வருகிறது.

    • சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
    • போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.

    இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.

    ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.

    பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.

    விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×