search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar idol"

    • சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.

    உடுமலை:

    சிவசேனா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, கொழுமம்-கொமரலிங்கம் பகுதியில் ஸ்ரீ விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திற்கு யுவசேனா மாநில ஆலோசகரும், சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு யுவசேனா மாநில தலைவர் அட்சயா திருமுருகதினேஷ்கலந்துகொண்டு விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அப்பிபட்டியில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    • ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சின்னமனூர்-அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே அழகாபுரி என்ற அப்பிபட்டியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த விநாயகர் சிலை ஊர்வல த்தினர் சின்னமனூர் - அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சிலையை முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று வருகி றோம்.

    ஆனால் கடந்த ஆண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர்வலத்து க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படுத்து கின்றனர். ஆனால் நாங்கள் வழக்கமாக செல்லும் தெருக்கள் வழியாகவே செல்வோம் என்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே இரு தரப்பின ரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் .
    • ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் . நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் புதிதாக வெளியாகும் ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மற்றும் வெளிவர உள்ள லால் சலாம் ஆகிய படங்களின் ரஜினி கதாபாத்திரத்தோற்றங்களை களிமண் மூலம் சிலை வடித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளார்.இவரை அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினர்.

    கீழ்வேளூர் அருகே கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின் சாலையில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 3 பேர் விநாயகர் சிலையை திருட முயன்றுள்ளனர். கிராம மக்கள் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை, கிராம மக்கள் விரட்டி பிடித்து கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகையை அடுத்த மேலக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 24), தமிழ்தாசன் (27), முருகதாஸ் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    பெரம்பலூர் அருகே விநாயகர் சிலையை எடுத்து சென்ற போலீசார் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் 3 பிரிவினருக்கு இடையே பாதை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள யாரும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என பாடாலூர் போலீசார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் போலீசாரின் தடையை மீறி, அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வைக்க கடந்த 13-ந்தேதி கொண்டு வந்தனர். அப்போது விநாயகர் சிலையை வைக்கக்கூடாது என்று போலீசார் தடுத்தனர். அதையும் மீறி பாடாலூரில் சிலையை வைத்தனர்.

    இதையடுத்து பாடாலூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், விநாயகர் சிலையை வைத்த பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்சினைக்குரிய பாதையில் கொண்டு செல்லாமல், மாற்று வழியில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றனர்.

    இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, வழக்கமான பாதையில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். அப்போது அவர்களிடம், போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் செல்லுமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் சங்குபேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, அன்று இரவு விடுவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று பிரச்சினைக்குரிய விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் எடுத்துச்செல்ல மாட்டோம். வழக்கமான பாதையில் தான் எடுத்துச் செல்வோம் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் 3 பிரிவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார், தாங்களே அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டத்தூர் சாலையின் குறுக்கே கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களையும் வீசினர். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் பெண் போலீசார் தங்க பானு, சூர்யா உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

    கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பாடாலூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    வால்பாறையில் விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

    வால்பாறை, செப்.18-

    வால்பாறையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வால்பாறை நகர் பகுதியில் உள்ள கோவில்கள், எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு 44 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் இந்து முன்னணி கவுரவத்தலைவர் தாமோதரன் தலைமையில் விசர்ஜன விழா நடைபெற்றது. இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் சபரீஸ்வரன், பா.ஜனதா பிரசார அணி மாவட்ட செயலாளர் செல்வக்குமார், ஒன்றிய தலைவர் ஜெயன், ஒன்றிய செயலாளர் அன்பரசு ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பிரபு வரவேற்றார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் விழாவை தொடங்கி வைத்தா. இந்துமுன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் பேசினார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு கொடியை அசைத்து விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

    இதனை தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நடுமலை ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் (விசர்ஜனம்) கரைக்கப்பட்டன.

    சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். #RajendraBalaji #ADMK
    சிவகாசி:

    நாடு முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கலில் தேவர் உறவின் முறை சார்பாக 6-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாதார தனைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிவழியாக ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ஜெயலலிதாபேரவை நகர செயலாளார் ரமணா, கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜவர்மன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன்.

    சிவகாசி இளைஞர் பாசறை சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தங்கல் தேவர் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக 24-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பொறுப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் கலைவாணன், ஆட்டோகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வரவேற்றார்.

    ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜூவா, கேசவ ராமசந்திரன் நிர்வாகிகள் அழகேச பாண்டியன், சுரேஷ், முருகவேல், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

    மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

    காவல் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் அலங்கார யானை முன்னே செல்ல ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், டிராக்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு உருவங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலம் முடிந்ததும். ஐ.என்.டி.யூ.சி.நகர் அருகே உள்ள குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. #RajendraBalaji #ADMK
    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபடுகிறது.
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.80 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. உள்ளாட்சி, தீயணைப்பு, மின்சார வாரியம், மாசுகட்டுப்பாடு வாரியம் போலீசார் நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும். என்று போலீசார் அறிவு றுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தின் 1300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளன. கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்தவர்களுகுகு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர்.

    புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. #VinayagarChathurthi
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 2500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை வைப்பதற்கு இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள்.

    இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

    எந்தெந்த தேதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கலாம் என்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் போலீசாருடன் இணைந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விழாக் கமிட்டியினருக்கு பல்வேறு ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிப்பாக விழா குழுவினர் பின்பற்ற வேண்டும். #VinayagarChathurthi
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகள் விளக்குவதற்கு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் நடைப்பெற்றது. #VinayagarChathurthi

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகள் விளக்குவதற்கு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் நடைப்பெற்றது.

    “விநாயகர் சிலை வைக்கும் இடங்களுக்கு அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்களின் பதாகைகள் வைக்கக்கூடாது, சிலை களி மண்ணில் செய்திருக்க வேண்டும் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களில் சிலை வைத்தால் உள்ளாட்சி அமைப்பு அல்லது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

    தீயணைப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும் முதலுதவி பொருட்கள் வைக்க வேண்டும். மின்சாரம் எங்கிருந்து எடுப்பது என மின்சார வாரியத்திடம் கடிதம் பெற வேண்டும். சிலை பாதுகாப்பு பணியில் தலா 2 பேர் 24 மணி நேரங்களும் ஈடுபட வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயண்படுத்தக்கூடாது.”

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் ஏற்காடு உதவி காவல் ஆய்வாளர் ஜெகத் ராஜ்மோகன் மற்றும் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    விநாயகர் சிலை தயாரிக்கப்படும் குடோனில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.#VinayagarChathurthi

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் , எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் பகுதிகளில் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 80 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

    இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி இடிகரை வடக்கு தோட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படுவதாக கோவை கவுண்டம்பாளையத்திலுள்ள மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அந்த குடோனுக்கு சென்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    தகவல் அறிந்து விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது.

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனைக்காக சில விநாயகர் சிலைகளில் இருந்து சிறு சிறு பகுதிகளை எடுத்து தண்ணீரில் கரைத்து சோதனை செய்தனர். இதில் விநாயகர் சிலை பகுதிகள் தண்ணீரில் கரைந்து விட்டன.

    இதனையடுத்து விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்றும் பேப்பர் போர்டு, பேப்பர் மற்றும் கார்டு போர்டு வைத்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது.

    மேலும் ஆய்வுக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சிறு பகுதிகளை எடுத்து சென்றனர்.

    மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    சேலம்:

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமையில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக மனு கொடுப்பதற்காக இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் அனைவரையும் அலுவலகத்திற்குள் விட மறுத்தனர். 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் 5 பேர் மட்டும் சென்று கலெக்ரிடம் மனு கொடுத்தனர்.

    இந்து முன்னணி சார்பில் சேலம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த வருடம் அரசு ஆணை மூலம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்துக்களின் மத வழிபாட்டு உரிமையை மறுப்பது போல் உள்ளது.

    தற்போது காவல்துறை சில இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்துள்ளனர். அந்த இடங்களில் சிலை வைக்க கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    அந்த இடங்களில் சிலை வைக்க அனுமதியும் புதிய கட்டுப்பாடுகளை அகற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
    ×