search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
    X

    ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகள் விளக்குவதற்கு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் நடைப்பெற்றது. #VinayagarChathurthi

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகள் விளக்குவதற்கு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் நடைப்பெற்றது.

    “விநாயகர் சிலை வைக்கும் இடங்களுக்கு அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்களின் பதாகைகள் வைக்கக்கூடாது, சிலை களி மண்ணில் செய்திருக்க வேண்டும் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களில் சிலை வைத்தால் உள்ளாட்சி அமைப்பு அல்லது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

    தீயணைப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும் முதலுதவி பொருட்கள் வைக்க வேண்டும். மின்சாரம் எங்கிருந்து எடுப்பது என மின்சார வாரியத்திடம் கடிதம் பெற வேண்டும். சிலை பாதுகாப்பு பணியில் தலா 2 பேர் 24 மணி நேரங்களும் ஈடுபட வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயண்படுத்தக்கூடாது.”

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் ஏற்காடு உதவி காவல் ஆய்வாளர் ஜெகத் ராஜ்மோகன் மற்றும் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×