என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருட முயற்சி- 3 பேர் கைது
Byமாலை மலர்8 April 2019 4:59 PM GMT (Updated: 8 April 2019 4:59 PM GMT)
கீழ்வேளூர் அருகே கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின் சாலையில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 3 பேர் விநாயகர் சிலையை திருட முயன்றுள்ளனர். கிராம மக்கள் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை, கிராம மக்கள் விரட்டி பிடித்து கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகையை அடுத்த மேலக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 24), தமிழ்தாசன் (27), முருகதாஸ் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X