search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery try"

    கீழ்வேளூர் அருகே கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நீலப்பாடி மெயின் சாலையில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 3 பேர் விநாயகர் சிலையை திருட முயன்றுள்ளனர். கிராம மக்கள் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை, கிராம மக்கள் விரட்டி பிடித்து கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகையை அடுத்த மேலக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 24), தமிழ்தாசன் (27), முருகதாஸ் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயன்ற போது அலாரம் அடித்ததால் நகை, பணம் தப்பியது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் மங்களப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக ராமசாமி என்பவரும் செயலாளராக சிலம்பன் என்பவரும் உள்ளனர்.

    நேற்று முன் தினம் மாலை அலுவலர்கள் அனைவரும் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும். இதனை நோட்டமிட்டு நள்ளிரவில் கொள்ளையர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.

    அலுவலக வாசல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்து விட்டு பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த யு.பி.எஸ். வயரை துண்டித்து விட்டு கொள்ளையடிக்க முயன்ற போது அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. இதனால் பயந்து போன கொள்ளையர்கள் பொதுமக்கள் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ஆனால் இந்த கூட்டுறவு சங்கம் ஊருக்கு வெளியே இருப்பதால் அலாரம் ஒலி யாருக்கும் கேட்கவில்லை. இன்று காலை அப்பகுதியில் வந்த மக்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா, வங்கி தலைவர் ராமசாமி, செயலாளர் சிலம்பன் ஆகியோர் அங்கு வந்து லாக்கரை திறந்து பார்த்தனர். அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நகைகளும், ரூ.21 ஆயிரத்து 165 பணமும் கொள்ளை போகாமல் தப்பியது.

    இதனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த வங்கியில் காவலாளி கிடையாது. சி.சி.டி.வி. கேமராவை மட்டும் பொருத்தி விட்டு சென்றுள்ளனர். தற்போது கொள்ளையர்கள் நூதனமாக கேமராவையே உடைத்து விட்டு கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இது குறித்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து முக்கிய தடயங்களை பதிவு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சுசீந்திரத்தில் தபால் நிலைய லாக்கரை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அதில் பணம் இல்லாததால் தப்பியது.
    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் மெயின் ரோட்டில் தாணுமாலயசுவாமி கோவிலுக்கு செல்லும் அலங்கார நுழைவுவாயில் அருகே சுசீந்திரம் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தை கடந்த சனிக்கிழமை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று காலை தபால் அலுவலகத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர்.

    அப்போது தபால் நிலை யத்தின் முன்புற மற்றும் பின்புற கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சுசீந்திரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தபால் நிலையத் திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த லாக்கரை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து இருந்தது தெரியவந்தது.

    ஆனால் தபால் ஊழியர்கள் அந்த லாக்கரில் பணத்தை வைக்காததால் பணம் தப்பியது. அங்குள்ள மேஜை டிராயரில் அலுவலக உபயோகத்திற்கான 2 செல்போன்களை வைத்திருந்தனர். அவை திருட்டுப் போய் இருந்தது. மோப்ப நாய் ஓரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் தபால் அலுவலகத்தில் இருந்து சுசீந்திரம் தெப்பகுளம் வரை ஓடியது. பிறகு தெப்பகுளத்தின் கரையில் படுத்துக்கொண்டது.

    இதனால் கொள்ளையர்கள் தங்களது தடயம் சிக்கி விடாமல் இருப்பதற்காக தபால் அலுவலகத்தில் கை வரிசை காட்டியபிறகு இந்த தெப்பகுளத்தில் குளித்து விட்டு சென்று இருக்கலாம் என்று கருதுகிறார்கள். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×