search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000 விநாயகர் சிலை பிரதிஷ்டை
    X

    வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000 விநாயகர் சிலை பிரதிஷ்டை

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபடுகிறது.
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.80 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. உள்ளாட்சி, தீயணைப்பு, மின்சார வாரியம், மாசுகட்டுப்பாடு வாரியம் போலீசார் நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி அறிவிக்கபட்ட இடத்துக்கு மாலை 4 மணிக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதையொட்டி மாவட்டம் முழுவதுமு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பஸ் நிலையம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாட வேண்டும். என்று போலீசார் அறிவு றுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தின் 1300 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளன. கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்தவர்களுகுகு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர்.

    புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
    Next Story
    ×