என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்த போது எடுத்த படம்.
ஏற்காடு டவுன் பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
- வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
- முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல ஏற்காடு லாங்கில்பேட்டை முத்துமாரியம்மன் கோவில், ஜெரினாகாடு பெரியமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
Next Story






