search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் பலி"

    • படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.

    அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.

    ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர்.
    • 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர்.
    • விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் (வயது 23). இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மகபுல் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் சையத் முபாரக்.

    புவனேஷ், முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் இ.பி அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனையடுத்து புதுவை ஜிப்மருக்கு செல்லும் வழியிலேயே முபாரக் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
    • அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).

    உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.

    ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது.
    • விபத்தில் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாளான நேற்று காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிக்கள் விடிய, விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், திருவிழாவை காண முத்துப்பேட்டை உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண் (வயது 17), கோபாலசமுத்திரம் கந்தசாமி மகன் பரத்குமார் (17), நாகை மாவட்டம், மேலமருதூர் தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன் (24) ஆகிய 3 வாலிபர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    இரவு முழுவதும் கண் விழித்து திருவிழாவில் கலந்து கொண்டதால் உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் வந்த தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது.

    இதில் அருண் என்பவர் தலை துண்டித்தும், முருகபாண்டியன் உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பரத்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதை தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது விபத்து நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் திருவாரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் திருவாரூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்தனர்.

    அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பரத்குமாரை மீட்டு ஆம்புலன்சு மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின்னர், அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருவிழாவை காண வந்த வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இரணியல்:

    திருவட்டார் அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 23). இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஆல்வின் பெற்றோர் புதிதாக வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இந்த வாரம் நடக்க இருந்தது.

    இதையடுத்து ஆல்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். மேலும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பெங்களூரில் வேலை பார்க்கும் நண்பர்களை அழைத்து இருந்தார். அவரது நண்பர்கள் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு ரெயில் மூலமாக நாகர்கோவில் வந்தனர். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆல்வின், சிதறலில் இருந்து நாகர்கோவிலுக்கு வர புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிளில் ஆல்வின், அவரது இன்னொரு நண்பர் ராகுல் (23) இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற 2 நண்பர்கள் விபின் சேவியர் (26), ஜெனிஸ் (26) இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வில்லிக்குறி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள்கள் லேசாக உரசியது. இதில் ஆல்வின், ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தது.

    அப்போது நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி டெம்போ ஆல்வின், ராகுல் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபின், சேவியர் ஜெனிஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 2 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ஆல்வின், ராகுல் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இருவரும் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பலியான ஆல்வின், ராகுல் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் (வயது21), பார்த்தசாரதி(18). இவர்கள் இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இன்று காலை கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.

    மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது.

    இதில் நிலை தடுமாறிய அவர்கள், மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்கு முன் இருவரின் மீதும் அரசு பஸ் ஏறி இறங்கியது. இதனால் முனீஸ்வரன், பார்த்தசாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பஸ் மோதி பலியான 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வேலைக்கு சென்ற 2 வாலிபர்கள் அரசு பஸ்சில் சிக்கி உடல்நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் படப்படி தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சரவணன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரது மகன் கவுதம் (24). இவர்கள் இருவரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர்.

    நண்பர்களான இவர்கள் நேற்று நள்ளிரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருநகருக்கு சென்றனர். அவர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.

    இதில் சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் தூக்கி வீசப்பட்டு கீழே கிடந்த 2 பேர் மீதும் ஏறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சரவணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சார்லஸ், பிருதிவிராஜ், தாவிது மற்றும் பிளஸ்-2 மாணவரான ஹெர்மஸ், மீனவர்கள் பிரவின், ஈசாக் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிழந்தனர்.
    • சண்முகையா எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் சேவியர் ஆகியோர் முயற்சியால் பலியான 6 பேரின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது தம்பிகள் சார்லஸ் (வயது38), பிருதிவிராஜ் (36), தாவிது (30) உள்ளிட்ட 57 பேர் தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருகாட்டுப்பள்ளி பூண்டிமாதா பேராலயத்திற்கு சென்றனர்.

    நேற்று முன்தினம் அவர்கள் பேராலயம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் மூழ்கினர்.

    அப்போது அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டனர். ஆனால் சார்லஸ், பிருதிவிராஜ், தாவிது மற்றும் பிளஸ்-2 மாணவரான ஹெர்மஸ், மீனவர்கள் பிரவின், ஈசாக் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து சண்முகையா எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் சேவியர் ஆகியோர் முயற்சியால் பலியான 6 பேரின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

    நேற்று மாலை பலியானவர்கள் உடலுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது சொந்த நிதியில் இருந்து 6 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 1 லட்சம் நிதிஉதவி வழங்கினார்.

    தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சொந்த ஊரில் உள்ள மயானத்தில் 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

    பள்ளி மாணவன் உள்ளிட்ட ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவத்தால் சிலுவைபட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    • புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக வாலிபர்கள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சீனிவாசன் என்கின்ற ஐயப்பன் (வயது 29). மேல 4-ம் வீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துகருப்பன் என்கின்ற ராஜா (27). இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று புதுக்கோட்டை திலகர் திடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த சிலைகள் புதுக்குளத்தில் கரைக்கப்பட்டன.

    இந்த சிலைகள் கரைப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் திரண்டனர். சிலை கரைப்பு முடிந்ததும் இவர்கள் இருவரும் நள்ளிரவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த நகர காவல் துறையினர் விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் வழக்கமான வழியில் செல்லாமல் தவறான வழித்தடமான நகர காவல் நிலையம் வழியாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் அடிக்கடி நடைபெறுகிறது.

    எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய பாதையில் செல்லாமல் தவறான மாற்றுபாதையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

    • வானூர் அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம்குப்பம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ராஜமாணிக்கம் (வயது 24) லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (வயது 27) இருவரும் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தனர்.  வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜமாணிக்கம் ஓட்டினார். யோகேஷ் பின்னால் அமர்ந்து இருந்தார். தமிழக பகுதியான வானூர் அருகே மஞ்சகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மரக்காணத்திலிருந்து புதுவை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சென்றனர். விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யோகேசை மீட்டு கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யோகேஷ் பறிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தில் இறந்த ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோட்ட குப்பம் போலீஸ் நிலை யத்துக்குவிரைந்து வந்தனர். புதுவையில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவி னர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சாயல்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த ராமர் மகன் வீரமுத்து (வயது 22). இவரும் இரு வேலி கிராமத்தைச் சேர்ந்த மொயின்கான் என்பவரும் மூக்கையூர் கிராமத்தில் இருந்து சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்ேபாது சாயல்குடியில் இருந்து மூக்கையூர் நோக்கி சென்று கொண்டிருந்த தெற்கு மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் உமையராஜ் (18) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரமுத்து கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த உமையராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டார்.

    காயமடைந்த மொயின்கான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சால்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×