search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
    X

    வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

    • பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இரணியல்:

    திருவட்டார் அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 23). இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஆல்வின் பெற்றோர் புதிதாக வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இந்த வாரம் நடக்க இருந்தது.

    இதையடுத்து ஆல்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். மேலும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பெங்களூரில் வேலை பார்க்கும் நண்பர்களை அழைத்து இருந்தார். அவரது நண்பர்கள் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு ரெயில் மூலமாக நாகர்கோவில் வந்தனர். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆல்வின், சிதறலில் இருந்து நாகர்கோவிலுக்கு வர புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிளில் ஆல்வின், அவரது இன்னொரு நண்பர் ராகுல் (23) இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற 2 நண்பர்கள் விபின் சேவியர் (26), ஜெனிஸ் (26) இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வில்லிக்குறி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள்கள் லேசாக உரசியது. இதில் ஆல்வின், ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தது.

    அப்போது நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி டெம்போ ஆல்வின், ராகுல் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபின், சேவியர் ஜெனிஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 2 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ஆல்வின், ராகுல் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இருவரும் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பலியான ஆல்வின், ராகுல் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    Next Story
    ×