search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் கோர விபத்து- அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    மதுரையில் கோர விபத்து- அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

    • மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் (வயது21), பார்த்தசாரதி(18). இவர்கள் இருவரும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இன்று காலை கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தனர்.

    மதுரை-தூத்துக்குடி சுற்றுச்சாலையில் மண்டேலா நகர் ஈச்சனேரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது.

    இதில் நிலை தடுமாறிய அவர்கள், மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்கு முன் இருவரின் மீதும் அரசு பஸ் ஏறி இறங்கியது. இதனால் முனீஸ்வரன், பார்த்தசாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பஸ் மோதி பலியான 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான ராஜசேகர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வேலைக்கு சென்ற 2 வாலிபர்கள் அரசு பஸ்சில் சிக்கி உடல்நசுங்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×