search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenagers killed"

    • வானூர் அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம்குப்பம் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ராஜமாணிக்கம் (வயது 24) லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (வயது 27) இருவரும் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் புதுவை வந்தனர்.  வேலையை முடித்துவிட்டு புதுவையின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று இரவு புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜமாணிக்கம் ஓட்டினார். யோகேஷ் பின்னால் அமர்ந்து இருந்தார். தமிழக பகுதியான வானூர் அருகே மஞ்சகுப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மரக்காணத்திலிருந்து புதுவை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சென்றனர். விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யோகேசை மீட்டு கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யோகேஷ் பறிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தில் இறந்த ராஜமாணிக்கம் மற்றும் யோகேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோட்ட குப்பம் போலீஸ் நிலை யத்துக்குவிரைந்து வந்தனர். புதுவையில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவி னர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×