என் மலர்
நீங்கள் தேடியது "2 injured"
கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே முஹமதியர்பேட்டை பல்பல்தக்கா பகுதியை சேர்ந்தவர் ஹாசீம் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்திலுள்ள தனது உறவினரை பார்க்க சென்றார்.அங்கிருந்து ஊர் திரும்பிய ஹாசீம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹாசீம் பலத்த காயமடைந்தார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேந்திரனின் மனைவி ரேவதி (30), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.
- பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 42). கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று குருவிநத்ததிலிருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பவீஷ்குமார், கணபதி 2 பேரும் காயம் அடைந்தனர். மேலும் 2பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- விஜய்(வயது32)ர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார்
- இருவருடைய மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்,
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது32) மற்றும் தாமனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். அப்பொழுது திடீரென்று சாலையின் மறு பக்கத்திற்க்கு செல்ல முயன்ற விஜய், சாலையில் இடது புறம் சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார். இதனால், வேகமாக வந்த சிங்காரவேலு மோட்டார் சைக்கிள், விஜய் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்
. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்த இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இருவரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
- கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
- பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்கநாயக்கன் பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு, வழங்கையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் அரசு காரில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கல்லூரி மாணவர் பிரஜித் (19), நன்செய்இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனான மெக்கானிக் கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ் (25) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி சென்றது.
- நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதாமல் இருக்க கார் டிரைவர் லாவகமாக திருப்பும் போது லாரி ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி சென்றது. அப்போது அந்த லாரி ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் இன்றி நின்றது. நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதாமல் இருக்க கார் டிரைவர் லாவகமாக திருப்பும் போது லாரி ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் பள்ளத்தில் இருந்து காரை மீட்டு படுகாயம் அடைந்த மதுரையைச் சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த நபர் மாவீரன் உள்ளிட்டோரை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் ஹீமோ குளோ பினோபதி திட்ட விரிவாக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த விழாவுக்காக ஈரோட்டில் இருந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அரசு வாகனம் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் மாலை அந்த அரசு வாகனம் ஈரோடு சென்றது.
அந்த அரசு வாகனம் ஆசனூர் தேசிய நெடுஞ் சாலை செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு ஒரு சரக்கு வேன் சென்றது.
அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அரசு வாகனம் மற்றும் சரக்கு வேன் மோதி கொண்டது. இதில் அரசு வாகன டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்போது நிகழ்ச்சி முடித்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த வழியாக வந்தார். விபத்து குறித்து அமைச்சருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து அமைச்சர் சம்பவ இடத்தில் இறங்கி விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-2 பேர் காயம் அடைந்தனர்.
- காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோரனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 29) இவர் சம்பவத்தன்று தனது உறவினர்கள் அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியயோருடன் விவசாய நிலத்துக்கு மின் மோட்டார் வாங்குவதற்கு சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தியாகதுருகம் புறவழிச் சாலையில் பிரிதிவிமங்கலம் காலனி அருகே சென்ற போது காருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி, காரை முந்தி சென்ற போது காரின் பக்கவாட்டில் உரசியதில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த செந்தமிழ்ச்செல்வன், அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செந்தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து எந்த லாரி மோதியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .
- சாயல்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
- விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த ராமர் மகன் வீரமுத்து (வயது 22). இவரும் இரு வேலி கிராமத்தைச் சேர்ந்த மொயின்கான் என்பவரும் மூக்கையூர் கிராமத்தில் இருந்து சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்ேபாது சாயல்குடியில் இருந்து மூக்கையூர் நோக்கி சென்று கொண்டிருந்த தெற்கு மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் உமையராஜ் (18) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரமுத்து கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த உமையராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டார்.
காயமடைந்த மொயின்கான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சால்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகள் கூட்டத்தில் புகுந்த பஸ்-2 பேர் காயம் அடைந்தனர்.
- பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லிமுத்து (60) ,அஞ்சம்மாள் (62) ஆகிய இவர்கள் இருவரும் இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் செல்லமேல் கவரப்பட்டில் பஸ்சுக்காககாத்திருத்தனர். அப்போது பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.இந்த பஸ், சாலை ஓரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த நல்லிமுத்து, அஞ்சம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதனால் இரு பெண்களும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனடியாக அங்கிருந்த கிராம மக்கள் அவர்களை மீட்டுகடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்ஸை சிறை பிடித்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டுள்ளகிராமமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர்.சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.அதிகாரிகள் உறுதி அளித்ததால்போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் தெற்கு மாட வீதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத திருவிழாவையொட்டி நேற்று தீ மிதி விழா நடந்தது.
விழாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு நெருப்பு குண்டத்துக்குள் இறங்கி தீ மிதித்தனர். அப்போது அயனாவரத்தைச் சேர்ந்த கலையரசன் (34) என்பவர் குண்டத்துக்குள் தவறி விழுந்தார்.
அதே போன்று வில்லிவாக்கம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மனோகரனும் (52) கால் தவறி நெருப்பு குண்டத்துக்குள் விழுந்தார். இதனால் இவர்கள் இருவரது உடல் முழுவதும் தீயில் கருகியது.
உடனே மீட்கப்பட்ட இவர்கள் 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ராமச்சந்திர நகரில் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று இரவு ஆந்திராவைச் சேர்ந்த ராமராவ், சிம்காசனம் மற்றும் தொழிலாளர்கள் கட்டிடத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முன்பக்கத்தில் இருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய ராமராவும், சிம்காசனமும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற தொழிலாளர்கள் மீட்டு போரூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிம்காசனம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






