search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in car collision"

    • கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
    • பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்கநாயக்கன் பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு, வழங்கையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் அரசு காரில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கல்லூரி மாணவர் பிரஜித் (19), நன்செய்இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனான மெக்கானிக் கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ் (25) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர்.
    • கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி க்கோயில் மூலக்கடை அரியான் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி காற்றினால் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளது.

    இதனால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு சிலர் ஓடிவந்து நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை உயிரை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த எடப்பாடி, சித்தூர் பகுதியை சேர்ந்த காவிரி என்பவரது மனைவி சின்னம்மா (வயது 57) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னம்மா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×