search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl injured"

    • ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(29). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி-மதுரை மெயின்ரோடு கொண்டமநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த மேக்கிலார்பட்டியை சேர்ந்த குபேந்திரன் மகள் மித்ராதேவி(12) என்பவர் படுகாயமடைந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரான விக்னேஷ் என்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

    சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார்

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை வசிப்பவர் வேலுச்சாமி, இவரது மகள் சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சீர்காழி - புறவழிச்சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாதனா மீது மோதிவிட்டார். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிவிட்டார்.

    அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சாதனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
    • சிறுமியை போலீஸ்காரர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு பலர் திரண்டனர். ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மாறாக, அந்த சிறுமியை செல்போனில் வீடியோ எடுப்பதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பிசியாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    சிறுமி தனது ரத்தக்கறை படிந்த கைகளை நீட்டி, உதவிக்காக அழைப்பதும், சுற்றி நிற்கும் ஆண்கள் அவளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது. போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சா? என ஒரு குரல் கேட்கிறது. இன்னொருவர் காவல்துறை தலைவரின் போன் நம்பரை கேட்கிறார். ஆனால் அந்த சிறுமிக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் வரும் வரை அந்த சிறுமி வலியால் துடித்தபடி காத்திருந்தார். இதேபோல் அந்த சிறுமியை போலீஸ்காரர் தூக்கிக்கொண்டு ஓடி, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.

    விசாரணையில் அந்த சிறுமி, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தும், ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ஒரு வாலிபரும் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. எனவே, அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது உறுதி செய்யப்படும்.

    சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    • கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர்.
    • கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி க்கோயில் மூலக்கடை அரியான் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி காற்றினால் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளது.

    இதனால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு சிலர் ஓடிவந்து நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை உயிரை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த எடப்பாடி, சித்தூர் பகுதியை சேர்ந்த காவிரி என்பவரது மனைவி சின்னம்மா (வயது 57) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னம்மா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×