search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்: ராதாகிருஷ்ணன்
    X

    சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்: ராதாகிருஷ்ணன்

    • எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார்.
    • வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை:

    சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்:

    * சென்னையில் நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்.

    * எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார்.

    * நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

    * நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, மனைவி வரலட்சுமி, மகன் வெங்கேடசன் ஆகிய 3 பேர் மீதும் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    * வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    * சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்த்து வரும் நிலையில் வெறும் 1,200 பேர் மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர்.

    * செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும் என வீடுதோறும் சென்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×