search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The bus entered the crowd"

    • பயணிகள் கூட்டத்தில் புகுந்த பஸ்-2 பேர் காயம் அடைந்தனர்.
    • பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லிமுத்து (60) ,அஞ்சம்மாள் (62) ஆகிய இவர்கள் இருவரும் இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் செல்லமேல் கவரப்பட்டில் பஸ்சுக்காககாத்திருத்தனர். அப்போது பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.இந்த பஸ், சாலை ஓரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த நல்லிமுத்து, அஞ்சம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதனால் இரு பெண்களும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    உடனடியாக அங்கிருந்த கிராம மக்கள் அவர்களை மீட்டுகடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்ஸை சிறை பிடித்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டுள்ளகிராமமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர்.சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.அதிகாரிகள் உறுதி அளித்ததால்போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×