search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"

    • முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
    • புதிய வாக்காளர்களுக்கு காமராஜ் எம்.எல்.ஏ. வாழ்த்துகளை தெரிவித்தார்.

    திருவாரூர்:

    நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம் தொடர்பாக அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சியின் மாவட்டச்செயலாளரான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது 1.1.2024 இல் 18 வயது நிரம்புகின்ற இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கட்சியினரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    மேலும் வாக்காளர் சேர்க்கை முகாமில் புதிதாக விண்ணப்பிக்க வந்த இளம் வாக்காளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இந்நிகழ்வின் போது நன்னிலம் ஒன்றியச் செயலாளர் இராம. குணசேகரன், நன்னிலம் நகரச் செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெற்றது.
    • ராஜா எம்.எல்.ஏ., சீனிவாசன், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முகாமினை பார்வையிட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இரட்டை பதிவுகள் நீக்குதல், பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது முனியாண்டி, கார்த்திக், நல்லசிவம், 24 பூத் முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 2 ஆயிரத்து 308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
    • வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காதவர்கள் படிவத்தை நிறைவு செய்து வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்துதல் தொடா்பான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.

    இந்த முகாம் நாளை வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதி நாளில் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1) தொடா்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடைந்து வாக்காளா் பட்டியலில் இடம் பெறாமல் உள்ள வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, படிவம் எண் 6-ஐ அருகிலுள்ள வாக்குச் சாவடியில் பெற்று நிறைவு செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ நிறைவு செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயா், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ நிறைவு செய்தும், இதுவரை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காத வாக்காளா்கள் படிவம் 6 பி-ஐ நிறைவு செய்தும் இச்சிறப்பு முகாமில் வழங்கலாம் என்று தெரிவிககப்பட்டு உள்ளது.

    • மாவட்டத்தில் 10,25,988 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிக ளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலானது இன்று காலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார். அக்டோபர் 2023 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ள ப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்ப ட்டுள்ளது.

    தற்போது வெளியிடப்ப ட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 974896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவரிகள் உட்பட மொத்த வாக்காளர்கள் 2001040 உள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு :-

    திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,433 ஆண் வாக்காள ர்களும், 1,30011 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,57,456 வாக்காளர்கள் உள்ளனர். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,382 ஆண் வாக்காளர்களும், 1,34,913 பெண் வாக்காளர்கள் மற்றும் 14 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,309 வாக்காளர்கள் உள்ளனர். (3) பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1,25,520 ஆண் வாக்காளர்களும், 1,31,058 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,56,596 வாக்காளர்கள் உள்ளனர். திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1,28,764 ஆண் வாக்காளர்களும், 1,34,869 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,653 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,254 ஆண் வாக்காளர்களும், 1,40,860 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70:171 வாக்காளர்கள் உள்ளனர். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 1,17,411 ஆண் வாக்காளர்களும், 1,24,146 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,41.560 வாக்காளர்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,14,504 ஆண் வாக்காளர்களும், 1,24,053 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,38,581 வாக்காளர்கள் உள்ளனர். பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 1,03,628 ஆண் வாக்காளர்களும், 1,06,078 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,09,714 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த 05.01.2023 முதல் 26.10.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 14.313 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளது. 56,389 நபர்களின் பெயர்களை விசாரணை அடிப்படையில்

    வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டா ட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2023 வரை வைக்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சா வடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை , தஞ்சை மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஆற்காடு புண்ணியமூர்த்தி, அ.தி.மு.க சார்பில் மாநகர செயலாளர் சரவணன், காங்கிரஸ் சார்பில் பழனிவேல், தே.மு.தி.க. சார்பில் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
    • மேட்டுப்பாளையம் தொகுதியில் மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவை,

    கடந்த ஜனவரி 1- ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ண்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.

    வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 14,96,770 ஆண் வாக்காளர்கள், 15,51,665 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 என மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் உள்ளனர்.

    சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,44,937 ஆண் வாக்காளர்கள், 1,55,569 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,54,788 ஆண் வாக்காளர்கள், 1,63,157 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 73 பேர் என மொத்தம் 3,18,018 வாக்காளர்கள் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,26,790 ஆண் வாக்காளர்கள், 2,28,583 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 114 பேர் என மொத்தம் 4,55,492 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,65,671 ஆண் வாக்கா ளர்கள், 1,64,827 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேர் என மொத்தம் 3,30,537 வாக்காளர்கள் உள்ளனர்.

    தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,61,736 ஆண் வாக்காளர்கள், 1,66,097 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 131 பேர் என மொத்தம் 3,27,964 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,20,480 ஆண் வாக்காளர்கள், 121641 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 32 பேர் என மொத்தம் 242153 வாக்காளர்கள் உள்ளனர்.

    சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,60,653 ஆண் வாக்காளர்கள், 1,64,126 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என மொத்தம் 3,24,803 வாக்காளர்கள் உள்ளனர்.

    கிணத்துக்கடவு சட்டம ன்ற தொகுதியில்1,61,826 ஆண் வாக்காளர்கள், 1,68,853 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3,30,720 வாக்காளர்கள் உள்ளனர்.

    பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,07,016 ஆண் வாக்காளர்கள், 1,16,772 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என மொத்தம் 2,23,829 வாக்காளர்கள் உள்ளனர்.

    வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 92873 ஆண் வாக்காளர்கள் 102040 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 1,94,935 வாக்காளர்கள் உள்ளனர்.

    • பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
    • குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
    • 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறி வுரைப்படி வாக்குச்சாவடி சீரமைப்புக்கான ஆலோ சனைக்கூட்டம் அங்கீ கரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில், ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 68 மற்றவர்களும், 1696 வாக்காளர்கள் (ராணுவத்தில் பணிபுரிப வர்கள்) என மொத்தம் 11,58,578 வாக்காளர்கள் உள்ளனர்.

    கிராமப் பகுதிகளில் 293 வாக்குச்சாவடி மையங் களும், நகர் பகுதியில் 1078 வாக்குப்பதிவு மையங்கள் என மொத்தம் 1371 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன.

    பொதுவாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் என்பது 1500 வாக்குகளுக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அங்கு 2 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது என்பது ஆணை. அதன் அடிப்படையில் தற்போது 3 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் 17 வாக்குச்சாவடி மையங்களில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகள் வரப்பெற்றது. 3 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் குறித்து மனு அளித்துள்ளார்கள்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடி மையங்களின் நிலை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுடன் களஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் தேவையான கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 4 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட வாக்குச்சா வடிகளின் இறுதி பட்டியலை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுக ர்களுக்கு வழங்கி னார்.

    இந்த கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா, தேர்தல் வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.

    ஈரோடு:

    தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ந் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
    • சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து மதுரையில் 4 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்ப ட்டன. அப்போது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனை த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட கலெக் டர் அனீஷ்சேகர் வெளி யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆகும். இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள், 226 பேர் 3-ம் பாலினத்தவர் ஆவர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,35,238 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆக உள்ளது. இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள். 226 பேர் 3-ம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் இன்று வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 38,509 பேர், புதிதாக சேர்க்கப்பட் டுள்ளனர். அடுத்தபடியாக 23,954 பேர் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவுகள் ஆகியவற்றின்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் 3,28,270 பேர் உள்ளனர். சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ள னர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆண்களை விட பெண்களே அதிகம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் தி.மு.க.சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த்,அதிமுக சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் மணிகண்டன் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்களும், 142 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 46ஆயிரத்து581 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 389 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,215 பேரும் இதர வாக்காளர்கள் 67 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பத்மநாப புரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 05வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,766 ஆண்வாக்காளர்களும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 214 பெண் வாக்காளர்களும் 25 இதர வாக்காளர்கள் என இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 05 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 540 பெண் வாக்காளர்கள் 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 443பேர் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 728ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 921பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து697 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 24,994 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்களின் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 694 பேர் உள்ளனர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 354 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 21,473 பெண் வாக்காளர்களும் 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,45,847 பேர்உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகரி சிவப்பி ரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோரிடம் இருந்தனர்.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
    • வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.

    1-1-2023 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி இன்று (புதன்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறு சீரமைக்கப்பட்டு வாக்கு சாவடி பட்டியலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

    அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 298, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 313, 3-ம் பாலினத்தவர் 10 என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545, காங்கேயம் தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 295, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551, 3-ம் பாலினத்தவர் 21 என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125, அவினாசி (தனி) மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 313, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394, 3-ம் பாலினத்தவர் 4 என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698, திருப்பூர் வடக்கு மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 374, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540, 3-ம் பாலினத்தவர் 140 என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298, திருப்பூர் தெற்கு மறு சீரமைகப்பட்ட வாக்கு சாவடி 242, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 874, 3-ம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783, பல்லடம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 410, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 38, 3-ம் பாலினத்தவர் 69 என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486, உடுமலை மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 294, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 633, 3-ம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290, மடத்துக்குளம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 287, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120, 3-ம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். ஒட்டு மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2513, ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463, 3-ம் பாலினத்தவர் 324, என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்களில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5633 ஆண் வாக்காளர்களும் 6484 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12117 வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர்.
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2498 ஆண் வாக்காளர்களும் 3233 பெண் வாக்காளர்கள் 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 736 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் இன்று வாக்காளர் விரைவு பட்டியல் வெளி யிடப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 169 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2498 ஆண் வாக்காளர்களும் 3233 பெண் வாக்காளர்கள் 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 736 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5633 ஆண் வாக்காளர்களும் 6484 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12117 வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 3,726 ஆண் வாக்காளர்களும் 4,529 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8255 வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    பத்மநாபபுரம் தொகு தியில் 3,389 ஆண் வாக்காளர்களும் 3,867 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் ஒருவர் என மொத்தம் 7257 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 2884 ஆண் வாக்காளர்களும் 4,166 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 7056 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 4591 ஆண் வாக்காளர்களும் 6154 பெண் வாக்காளர்களும் 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 748 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    6 சட்டமன்ற தொகுதிகளி லும் 22,721 ஆண் வாக்கா ளர்களும் 28,433 பெண் வாக்காளர்களும் 15 இதர வாக்காளர்கள் என மொத்தம் 51,169 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3864ஆண் வாக்காளர்களும் 5520 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9390 பேர், சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 1763 வாக்காளர்களும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,391 வாக்கா ளர்களும் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 1471 வாக்காளர்களும் பத்நாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 1363 வாக்கா ளர்களும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1256 வாக்காளர்களும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 1146 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ×