search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி பட்டியல்"

    • தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன
    • அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இந்நிலையில், 1,085 வேட்பு மனுக்களில் 135 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர். அதில், 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்கள் அடங்கும்.

    அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி போடுகின்றனர்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-35

    3. தென்சென்னை-41

    4. மத்தியசென்னை-31

    5. ஸ்ரீபெரும்புதூர்-31

    6. காஞ்சிபுரம் (தனி)-11

    7. அரக்கோணம்-26

    8. வேலூர்-31

    9. கிருஷ்ணகிரி-27

    10. தர்மபுரி-24

    11. திருவண்ணாமலை-31

    12. ஆரணி-29

    13. விழுப்புரம் (தனி)-17

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-25

    16. நாமக்கல்-40

    17. ஈரோடு-31

    18. திருப்பூர்-13

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-37

    21. பொள்ளாச்சி-15

    22. திண்டுக்கல்-15

    23. கரூர்-54

    24. திருச்சி-35

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-14

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-12

    31. சிவகங்கை-20

    32. மதுரை-21

    33. தேனி-25

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-25

    36. தூத்துக்குடி-28

    37. தென்காசி (தனி)-15

    38. திருநெல்வேலி-23

    39. கன்னியாகுமரி-22

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    ஆண்களை விட பெண்களே அதிகம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் தி.மு.க.சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த்,அதிமுக சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் மணிகண்டன் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்களும், 142 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 46ஆயிரத்து581 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 389 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,215 பேரும் இதர வாக்காளர்கள் 67 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பத்மநாப புரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 05வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,766 ஆண்வாக்காளர்களும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 214 பெண் வாக்காளர்களும் 25 இதர வாக்காளர்கள் என இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 05 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 540 பெண் வாக்காளர்கள் 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 443பேர் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 728ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 921பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து697 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 24,994 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்களின் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 694 பேர் உள்ளனர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 354 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 21,473 பெண் வாக்காளர்களும் 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,45,847 பேர்உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகரி சிவப்பி ரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோரிடம் இருந்தனர்.

    ×