search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு"

    • விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எஸ்.பி அதிரடி நடவடிக்கை

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலை அடைத்து மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி, அரூர், பென்னா கரம், பாலக்கோடு, உள்ளிட்ட காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.

    அப்போது தருமபுரி சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் அரூர் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 9 கடைகளிலும் பென்னாகரம் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் பாலகோடு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • விருதுநகர் அருகே கணவர், கர்ப்பிணி மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
    • 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சிவகாமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா தேவி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை முனீஸ்வரன் வீட்டில் ஏற்றுக் கொண்ட னர். ஆனால் சுஷ்மிதா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரனின் உறவி னர்கள் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரனின் பெற்றோர் வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் சுஷ்மிதா தேவி கர்ப்ப மடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுஷ்மிதா தேவியின் பெற்றோர் சமாதானம் அடைந்து தலை தீபா வளிக்கு தம்பதிகளை முறைப்படி அழைத்துச் சென்றனர். சுஷ்மிதா தேவி கர்ப்பமாக இருப்பதால் ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். அவரைப் பார்க்க முனீஸ்வ ரன் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று முனீஸ்வரன் தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கல வடியான்-ராதா தம்பதி யின் மகன் மோகன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை கிண்டல் செய்து பேசியுள்ளார். இது குறித்து சுஷ்மிதா தேவியின் பெற்றோரிடம் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முனீஸ்வரன், சுஷ்மிதா தேவி மற்றும் அவரது பெற்றோர் மோகனின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளனர்.

    அப்போது மோகனின் குடும்பத்தாரும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த உறவினர்களும் மோகனுக்கு ஆதரவாக அங்கு திரண்ட னர். இருதரப்புக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரனை மண்வெட்டி கம்பால் அவர்கள் தாக்கி னர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதை தடுப்பதற்காக குறுக்கே புகுந்த சுஷ்மிதா தேவியையும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மோகன், அவரது பெற்றோர், சக்தி வேல், வனிதா, வில்லரசி, கற்பகமணி, மாரியம்மாள், முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரவள்ளூர், கே.சி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்(25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென இமானுவேல் வந்தார். அப்போது அவர் போலீசார் தன் மீது அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறியபடி பிளேடால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.

    இதில் அவர் ரத்தம் சிந்தியபடி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இம்மானுவேலுக்கு 20 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 59). இவரது மகன் தமிழ்ச்செல்வன் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த சரண்ராஜிடம் பணம் கடனாகப் வாங்கியது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று லோக சுந்தர், சரண்ராஜ் உள்பட நான்கு பேர் திடீரென்று தமிழ்ச்செல்வன் வீட்டுக்குள் நுழைந்து தமிழ்ச்செல்வனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த தமிழ்ச்செல்வன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் லோக சுந்தர், சரண்ராஜ் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பாகோடு ஊராளிவிளையை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 48), கட்டிட தொழிலாளி. சம்பத்தன்று வீட்டின் அருகாமையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த வினோலின் (36), அனல் ஜெகலின் றோஸ் (37) ஆகியோர் கிண்டல் செய்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவரது தாயார் கனகம்மாள் (70), தடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் கம்பியால் தாக்கியதால் அவரும் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல மறுதரப்பில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த பிறிகேஸ் வினோலின் (26), அவ்வழியே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாந்தப்பன் (46), ஜான்சன் (55) ஆகியோர் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக இருதரப்பினையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு


    தக்கலை, நவ.21-

    தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து பூக்கடை வரை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்றுமுன்தினம் நடந்தது. ஊர்வல நிறைவில் பூக்கடை அருகே பொதுகூட்டம் நடத்தினர்.

    போலீசார் குறிப்பிட்ட நேரத்தை விட தொடர்ந்து அதிக கூட்டத்தை கூட்டி பொது தொல்லை கொடுத்து வருவதாக பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் விசு மற்றும் மதுரை பகுதியை சேர்ந்த தென்மண்டல தலைவர் வன்னியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சமூக விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி. குழந்தை திருமணம் தொடர் பாக இவருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.அப்போது விருதுநகர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த சிறுமிக்கும், செங்கமலப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவ ருக்கும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உறவினர் முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதற்கு முனியசாமியின் பெற்றோர் கருப்பசாமி, செல்லத்தாய், உறவினர் மற்றொரு கருப்பசாமி ஆகி யோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி முனியசாமி உள்பட 4 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாயமான பெண் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது.
    • பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்கம்மாள் (வயது 80). நோய் பாதிப்பிற்கு ஆளான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் அவரைப்பற்றி எந்தவித தகவலும் இல்லை. இதற்கிடையே அங்குளள் பெரியகண்மாயில் கங்கம்மாள் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமியை இழுத்து சென்று கோவிலில் கட்டாய திருமணம்
    • பலாத்காரம் செய்ததால் 6 மாதம் கர்ப்பமானாள்

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து பிரகாஷ் சிறுமியை அழைத்து சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 23 -ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்ததும் அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார். அங்கு வைத்து பிரகாஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதனை நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 30-ந்தேதி சிறுமிக்கு சாத்தூர் சுப்பி ரமணியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவ ருக்கு சிறுமியை, அவரது சித்தி மாரீஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத் துள்ளார்.

    அதன் பிறகு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி முருகன் அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனின் பெற்றோர் சிறுமியை தகாத வார்த்தை களால் திட்டி கொடுமைப் படுத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து சிறுமி உதவி மையத்தை தொடர்பு கொண்டார். அவர்களது ஏற்பாட்டில் சிறுமி குழந்தை காப்பகத்தில் சேர்க்கப் பட்டார். மேலும் இதுகுறித்து சின்ன காமன்பட்டி சமூக நலத் துறை மகளிர் ஊர்நல அலுவலர் மாரியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் காப்பகத்திற்கு சென்று சிறுமியிடம் விசா ரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சிறுமி அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரி யம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் கணவர் முருகன், சித்தி மாரீஸ்வரி, கணவரின் தந்தை பெருமாள், தாய் சரோஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர். கடந்த தீபாவளி அன்று இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பாடகர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதை தொடர்ந்து அவரை தாக்கியதாக 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி(பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில அவதூறாக பேசுவது), 324 (ஆயுதத்தால் தாக்குவது), 341(வழிமறித்து தடுப்பது) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ×