search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forced marriage"

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சமூக விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி. குழந்தை திருமணம் தொடர் பாக இவருக்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.அப்போது விருதுநகர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த சிறுமிக்கும், செங்கமலப்பட்டியை சேர்ந்த முனியசாமி என்பவ ருக்கும் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உறவினர் முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்ட விரோதமாக திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதற்கு முனியசாமியின் பெற்றோர் கருப்பசாமி, செல்லத்தாய், உறவினர் மற்றொரு கருப்பசாமி ஆகி யோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதுகுறித்து சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி முனியசாமி உள்பட 4 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 30-ந்தேதி சிறுமிக்கு சாத்தூர் சுப்பி ரமணியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவ ருக்கு சிறுமியை, அவரது சித்தி மாரீஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத் துள்ளார்.

    அதன் பிறகு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி முருகன் அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனின் பெற்றோர் சிறுமியை தகாத வார்த்தை களால் திட்டி கொடுமைப் படுத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து சிறுமி உதவி மையத்தை தொடர்பு கொண்டார். அவர்களது ஏற்பாட்டில் சிறுமி குழந்தை காப்பகத்தில் சேர்க்கப் பட்டார். மேலும் இதுகுறித்து சின்ன காமன்பட்டி சமூக நலத் துறை மகளிர் ஊர்நல அலுவலர் மாரியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் காப்பகத்திற்கு சென்று சிறுமியிடம் விசா ரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சிறுமி அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரி யம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் கணவர் முருகன், சித்தி மாரீஸ்வரி, கணவரின் தந்தை பெருமாள், தாய் சரோஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் போக்சோவில் கைது
    • 3 வருடங்களாக காதலித்து வந்தார்

    செய்யாறு:

    செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய இளம்பெண். இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ஜீவா (20). இவர் செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். ஜீவா கல்லூரி மாணவியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜீவா வற்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாணவி கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஜீவா மாணவியை ஆபாசமாக பேசி தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் போக்சோவில் வழக்கு பதிவு செய்தார்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் நேற்று ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
    • வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது

    ஆரணி:

    வேலூர் மாவட்டம் அடுக்கம் பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகள் 21 வயது இளம்பெண். இவர், கல்லூரி முடித்து விட்டு போலீஸ் வேலைக் காக படித்து வருகிறார்.

    ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்த மாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம் பெண்ணுடன் ஆகா ஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இதனால், இளம்பெண்ணை திரும ணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவருடன் ஆகாஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், இளம்பெண் கர்ப்பமானார். ஆகாஷ் தனது வீட் டிற்கு தெரிந்தால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அதனால், உடனடியாக கருவை கலைத்துவிட லாம். பின்னர் பெற்றோரிடம் கூறி அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து மாணவியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்துள்ளார்.

    மேலும், சில மாதங் களுக்கு முன்பு அந்தபெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். பல காரணங்கள் கூறி திருமணம் செய்து " கொள்ளாமல் ஆகாஷ் அலைக்கழித்துள்ளார்".

    ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஆரணியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் ஆகாஷுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற் பட்டு அவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முதல் காதலி பிளஸ் 2 மாணவியை தொடர்பு கொண்டு, ஆகாஷ் அவரை ஏமாற்றியது குறித்து தெரி வித்துள்ளார்.

    இதனால், அந்த மாணவி ஆகாஷின் முதல் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவருடன் இருந்த பழக்கத்தை நிறுத் திக் கொண்டார். இதனால், ஆகாஷ் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது, தன்னை காத லிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி பள்ளிக்கு சென் றபோது, ஆகாஷ் மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல், ஆரணி, கண்ணமங்கலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாண வியும், இளம்பெண்ணும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை மகளிர் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியதுடன் பள்ளி மாணவியிடமும் அத்துமீ றியது தெரியவந்தது.

    இதையடுத்து மகளிர் போலீசார் ஆகாஷை போக்சோ சட் டத்தில் கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 17 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
    • சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே யுள்ள எஸ். கொடிக்குளத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு அவரது தாயார் பாண்டி யம்மாள் மற்றும் உறவி னர்கள் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    பின்னர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி யின் எதிர்ப்பையும் மீறி ஆனந்த் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் ஆனந்த் வெளியே சென்றிருந்த போது, சிறுமி தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ஊருக்கு வந்துள்ளார். ஆனால் ஆனந்த் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்ததால் திருமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றார்.

    அங்கும் அவர்கள் தேடி வந்துள்ள னர். அங்கிருந்து தப்பிய சிறுமி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    அதன் பேரில் கூமாபட்டி போலீசார் ஆனந்த், அவரது தாயார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.பி. ஆபீசில் புகார்
    • நடவடிக்கை எடுக்க தாய் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது:-

    ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை என் மகன் காதலித்து வந்துள்ளார்.

    அப்போது காதலுக்காக 15 வயது சிறுமி எனது மகனின் காதலுக்கு தூது சென்றார்.

    இந்த நிலையில் 15 வயது சிறுமியின் தாயார் அந்த வாலிபர் சென்று எனது மகளை திருமணம் செய்துகொள் வாழ்க்கை சிறப்பாக அமையும், அதற்கு நான் வழிவகை செய்து தருகின்றேன் என 15 வயது சிறுமியின் தாயார் எனது மகனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    திருமணம் செய்துகொள் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எனது சிறுமியை எனது மகன் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என புகார் மனு கொடுத்தார்.

    விசாரணையின் போது போலீஸ் நிலையம் வெளியே வந்து எனது மகனை மிரட்டி கட்டாய தாலிகட்டுமாறு கூறியுள்ளனர். அதனை மறுத்து அவர் உன் மகளுக்கு 15 வயது தான் ஆகின்றது.

    நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் தற்போது சும்மா கட்டு 18 வயது ஆனதும் என் மகளை உங்க வீட்டுக்கு அழைத்து போ என கூறி அவரை மிரட்டி அங்கே கையில் தயார் நிலையில் வைத்து இருந்த மஞ்சல் கயிற்றை கட்ட வைத்துள்ளனர். இதனையடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

    எனது மகனை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.

    இருப்பினும் எனது மகன் ஏதேனும் தவறு செய்து இருந்தால் விசாரித்து உரிய பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கலாம், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எவ்வித தடங்களும் இல்லை எனது மகனை காப்பாற்றி முழுமையாக என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கட்டாய திருமணம் நடத்தியதாக திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    அவர் இதுதொடர்பாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது 9-ம் வகுப்பு மாணவியை சட்டவிரோத மாக கீழக்குயில்குடியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் (23) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரி முத்துலட்சுமி, திருப்ப ரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 

    • இந்த திருமணங்களை ‘ஜாப்ரிய விவாஹா’ என கூறுகின்றனர்.
    • பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவராக பணிபுரியும் சத்யம் குமார் ஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் சிலர் கட்டயா தாலி கட்ட வைத்துள்ளனர்.

    இதுகுறித்து மணமகனின் தந்தை போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இதனை 'ஜாப்ரிய விவாஹா' என கூறுகின்றனர்.

    பொதுவாக அதிக ஊதியம், சொத்து, சமூக அந்தஸ்து வைத்திருக்கும் மணமாகாத ஆண்கள், மணமகளின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த வீடியோக்களும் சமூக வலைதங்களில் பிரபலமாக பகிரப்படு வருகின்றன.

    பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்தநிலையில் அந்த மாணவன் வீடியோவை தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக மாணவர்களுக்கு உற்சாகமாக அனுப்பியுள்ளனர். இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவன், மாணவி மற்றும் வாட்ஸ்அப்பில் பரவ விட்ட மாணவன் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிரடியாக 3 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கூடம் திறந்ததால் ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்து சக மாணவிக்கு விளையாட்டாக தாலி கட்டியதாகவும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை விட்டு விடுங்கள், இனிமேல் இதுபோன்றதொரு தவறு நடக்காது என அந்த மாணவன், போலீசாரிடம் கெஞ்சினான்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் இந்த விஷயத்தை இதற்குமேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பும்படியும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசாரும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



    பீகார் மாநிலத்தில் கட்டாய திருமணத்துக்காக என்ஜினீயர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் பிடாபூர் மாவட்டம் வைசாலி பகுதியை சேர்ந்தவர் சரண்.

    என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.

    இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியங்கா குமாரியை திருமணம் செய்ய சரண் மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக சரணை கடத்தினர். சரணும், அவரது நண்பர் சவுரவ்சும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பிரியங்காவின் உறவினர் துப்பாக்கி முனையில் அவரை காரில் கடத்தி சென்றனர். 12 முதல் 15 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    சரண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது தாயார் வீனா தேவி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சரணை மீட்டனர். கடத்தல் தொடர்பாக பிரியங்கா தந்தை அரவிந்த்ராய் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×