search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்
    X

    9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம்

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கட்டாய திருமணம் நடத்தியதாக திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    அவர் இதுதொடர்பாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது 9-ம் வகுப்பு மாணவியை சட்டவிரோத மாக கீழக்குயில்குடியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் (23) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரி முத்துலட்சுமி, திருப்ப ரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார்

    Next Story
    ×