search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறுமை"

    • தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது.
    • கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.

    2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்கள், 'குடிசை இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

    பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.

    புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

    கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

    சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

    பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.

    ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது
    • ராமர் கோயில் காட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது?

    ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்று சந்தோஷ் லாட் குற்றம் சாட்டியுள்ளார்.

    "ராமர் கோயில் கட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது? இதன் மூலம் விவசாயிகள் பயன் பெற்றார்களா? அவர்கள் பயன் பெற்றிருந்தால் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? எதற்காக விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர்ப் புகை பயன்படுத்தப்படுகிறது" என அடுக்கடுக்கான கேள்விகளை சந்தோஷ் லாட் எழுப்பியுள்ளார்.

    கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்துக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பா பட்டியை சேர்ந்தவர் நீலாமணி (வயது 50). இவருடைய கணவர் ராஜேந்திரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். இவரது மகள் ராஜேஸ்வரி (31), பேரன் சதாசிவத்துடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயுடன் வசித்து வந்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நீலாமணி கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வருமானம் இல்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவழித்து கொண்டே இருந்ததால் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
    • 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும், கோதண்டபாணி (42) என்ற மகனும் இருந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் குடும்பத்தை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோதண்டபாணியும், உமாதேவியும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். அவர்களுடன் தாய் வாசுகியும் வசித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. இதற்கிடையே இன்று காலை வாசுகி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.

    இறந்த 3 பேரும் வறுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியாக குறைந்திருக்கிறது.
    • 25 நாடுகள் 15 வருட காலக்கெடுவுக்குள் வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன.

    ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்தியாவில், 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம் பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். 2005/2006-ல் 55.1 சதவீதமாக இருந்த வறுமை 2019/2021-ல் 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வறுமையை குறைத்துள்ளது.

    2005/2006ல், இந்தியாவில் சுமார் 64.5 கோடி பேர் வறுமையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2015/2016இல் சுமார் 37 கோடியாகவும், 2019/2021இல் 23 கோடியாகவும் கணிசமாக குறைந்திருக்கிறது.

    இந்தியா உட்பட 25 நாடுகள், இந்த 15 வருட காலக்கெடுவுக்குள் உலகளாவிய வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன. இது விரைவான முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை விளக்குகிறது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த சாதனையை எட்டி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
    • கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார்.

    பெங்களூரு :

    பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

    மேலும் கோவில், அதை சுற்றி இருக்கும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் சிக்கிய காட்சிகள் மூலமாக ஒரு நபரை வி.வி.புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

    அந்த நபர் பெயர் ரவி ஆகும். இவர், எய்ட்ஸ் (எச்.ஐ.வி) நோய்க்கு எதிராக மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஆவார். அதாவது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை கர்நாடகம் உள்பட 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். 6 ஆண்டுகளில் 33 மாநிலங்களுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால், ரவியின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

    எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ரவிக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மோட்டார் சைக்கிளை பரிசாகவும் வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். அந்த வறுமை தான் அவரை திருடனாகவும் மாற்றி இருக்கிறது. இதனால் அவர், வி.வி.புரத்தில் உள்ள வாசவி அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது. அந்த சாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர். கைதான ரவி மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வறுமையை வெல்ல படிப்புதான் பேராயுதம் என பொன்.மாணிக்கவேல் பேசினார்.
    • நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும்.

    மதுரை

    மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி பொன். மாணிக்க வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும். கல்லூரி பருவம் என்பது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து வைக்கும் முக்கியமான முதல் படி.

    வறுமையை வெல்லும் வகையில் உங்களின் கற்றல் திறன் அமைய வேண்டும். அதற்கு படிப்புதான் பேராயுதம். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலையைப் பெற்றுக் கொண்டு அதில் திறமை களை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னே றுங்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாக ரத்தினம், செயலாளர் ஜெக தீசன், முதல்வர் ராஜேஷ் குமார், துணை முதல்வர் சித்ராதேவி மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முருகானந்தம் அக்கம் பக்கத்தினர் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார்.
    • அறியாமை மற்றும் வறுமையால் நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களின் உள்ளங்களையும் உருக்குலைய செய்திருக்கிறது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கவே அவரை மகன் முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்துள்ளார்.

    இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே வீட்டில் வைத்து தாயை கவனித்து வந்த முருகானந்தம் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். தாயை கவனிப்பதற்காக பெரும்பாலான நாட்கள் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வறுமை அவரை வாட்டியது.

    இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி இன்று அதிகாலை இறந்து விட்டார். வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முருகானந்தம் அக்கம் பக்கத்தினர் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார்.

    அதற்காக தன் தாயின் உடலை ஒரு வீல் சேரில் அமர்ந்திருப்பது போல் வைத்து உடலை சுற்றி துணியால் கட்டினார். பின்னர் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் உள்ள மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு எடுத்து சென்றார். பொழுது விடிவதற்குள் உடலை எடுத்து சென்ற முருகானந்தம் தகனம் செய்திட எரிவாயு தகன மேடை பராமரிப்பாளரான ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்தார்.

    இதற்கிடையே சுடுகாட்டின் அருகே உள்ளவர்கள் பார்த்த போது இறந்த மூதாட்டியின் உடல் வீல் சேரில் எடுத்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சுடுகாட்டிற்கு வந்த பராமரிப்பாளர் பார்த்து அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இது போன்று வீல் சேரில் உடலை கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார்.

    அப்போது தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என்று கூறினார். பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக்கொண்டு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தார். அறியாமை மற்றும் வறுமையால் நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களின் உள்ளங்களையும் உருக்குலைய செய்திருக்கிறது.

    • குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • குட்டி ராணியின் மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்சிகாபுரம் அரண்மனைக்காரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவரது மனைவி குட்டிராணி (45). இவர்களுக்கு கலைவாணி (22) உள்பட 3 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகராஜ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் மனமுடைந்த குட்டிராணி 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றினர்.

    குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அறிந்த அவரது மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 21-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கலைவாணி நேற்று பரிதாபமாக இறந்தார். குட்டி ராணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து குட்டி ராணியின் தாய் மாமா செந்தில்குமார் என்பவர் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டியில் கொரோனாவில் தாயை இழந்து பெண்ணுக்கு ஊரார் திருமணம் நடத்தி வைத்தனர்.
    • தொழிலதிபர் பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா, இவர்,கொரோனாவுக்கு தாயை இழந்தார். பின்னர் பாட்டி வளர்ப்பில்வளர்ந்து வந்த அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. வறுமை மற்றும்போதிய பணவசதி இல்லாததால் இவரது திருமணம் தள்ளிபோனது. அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசிரியர் செந்தமிழ்செல்வன் ஊர்மக்கள் உதவியுடன் திருமணநடத்த ஏற்பாடு செய்தார்.

    அதே பகுதியை சேர்ந்த தொழிலதி பர்பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். அருகில் இருந்தவர்களும் அவரவர் பங்குக்கு ஒவ்வொரு செலவை ஏற்றுக் கொண்டனர். நேற்று இவருக்கு உறவினர்களால் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் அதே பகுதி உள்ள அரசியம்மன்கோவிலில் பாக்கியராஜ், புகழேந்தி மற்றும்ஊரார்மு ன்னிலையில் திருமணம் நடந்தது

    ×