search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை கொடுமை"

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
    • சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை.

    மனித வாழ்க்கையானது இளமைப்பருவம், முதுமைப்பருவம் என இருப்பருவங்களாக வகுக்கப்படுகின்றன. அதில் ஆணும் சரி, பெண்ணும் சரி வாழ்வின் பெரும்பகுதியினை இல்லற வாழ்க்கைக்கே செலவு செய்கின்றனர். துணைவியாக வரும் பெண் தன் துணைவனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்டதொரு பகுதி செல்வத்தை கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் வரதட்சணை என்கிறோம்.

    வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளை குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்து வாழ வேண்டும். இதனை வியாபாரத்தின் நோக்கில் கொண்டு சென்று வரதட்சணை என்னும் பெயரில் பல கொடுமைகள் அரங்கேறுகின்றன.

    மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல ஏழை எளிய பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வரதட்சணை கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    குடும்பத்தில் அன்றாட நடக்கும் வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணையின் காரணமாக மரணமடைகிறாள். தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணை குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பல சட்டம் பேசும் சமுதாயத்துடன் இணைந்து வாழ பெண்கள் முடிவெடுத்தாலும் சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை. பெண்கள் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் தங்கள் தோளில் சுமந்துகொண்டு நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகிறாள். ஒவ்வொரு நிமிடமும் இவர்கள் செய்யும் பணிகள் ஏராளம். பெண்கள் தங்களது வாழ்வில் தனக்கென இல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள்.

    பெண் சிசுக்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணமாக உள்ளது. பெண் குழந்தை பிறந்து ஆளானால் பல்லாயிரக்கணக்கான சீர் வரிசைகளுடன் கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயக் கடமை பெற்றோருக்கு இருக்கின்றது. பிற்காலத்தில் தங்கள் மகளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற அச்சத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பிறந்தவுடனேயே பெண் குழந்தைகளை கொன்று விடுகிறார்கள். இவ்வாறு ஈவு இரக்கமின்றிய செயல்களுக்கு வித்திடுவதாய் வரதட்சணை கொடுமை அமைந்துள்ளது.

    வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளைகளை மணமுடிக்க முடிந்தாலும் பல பெண்கள் ஆண்களுக்கு உரிமையுடன் வாழ முடியவில்லை. வீட்டில் கொத்தடிமையாகவே நடத்தப்படுகிறார்கள். கூலியின்றி வாழ்நாள் முழுவதும் வேலை செய்யும் ஒரு பெண்ணாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களின் இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வேதனைக்குரியது.

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய கொடுமை, வரதட்சணை மற்றும் ஏழ்மையை கருத்தில் கொண்டு இளம் பெண்கள் வயது முதிர்ந்த பல ஆண்களுக்கு மனைவியாகவும் மற்றும் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கையை நடத்தும் கொடுமைகள் உருவாகின்றன. வரதட்சணை கொடுமை சமுதாயத்தில் பெரும் ஆலமரவேர் போல பரவி பல்வேறுபட்ட தீமைகளுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. இதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் சமுதாயமே இக்கொடுமைகளை போக்க வேண்டும்.

    'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றும், 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என்றும் பெண்ணாகிய தாயை போற்றும் சமுதாயம் ஒரு விஷமுடைய காயையும் விட கேவலமாக பெண்களை நடத்துகின்றது. இது மாற்றமடைய வேண்டும். சமுதாயத்தில் உள்ள ஆண்கள், பெண்களை மதிக்கவும், ஒரு நல்ல தோழனாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு துயரம் கொடுக்கக்கூடாது. ஒரு நல்ல ஆண்மகனின் அடையாளம் பெண்மையை கலங்காது இறுதிவரை பாதுகாப்பதே.

    வரதட்சணை கொடுமையை அகற்றுவோம்!

    பெண்களை மதிப்போம்!

    சமுதாயத்தை உயர்த்துவோம்!

    • திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது.
    • மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் புகாரின் பேரில் ஆசிரியர் உள்பட அவரது குடும்பத்தினரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டியன். இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் பூச்சக்காடு கருவம்பாளையத்தை சேர்ந்த பிரியா(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 20 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் வெள்ளைப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியாவிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும், நகையையும் வாங்கி வைத்து கொண்டதாகவும் போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் தன்னிடம் கூடுதலாக நகைகள் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு அடித்து துன்புறுத்தியாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோர்ட்டு உத்தரவுப்படி போடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வெள்ளைப்பாண்டியன் அவரது தந்தை ரவி, தாய் ெபாம்மி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.
    • கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெலுகுப்பா, ஜி.டி பள்ளியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் டி.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் தாடி பத்திரி, போக சமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரி (வயது 30) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சோமேஷ் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்தது. மகேஸ்வரி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் நாகேந்திரா மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது. கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார். வெளியே சென்ற மனைவி மற்றும் மகன் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்திட நாகேந்திரா நேற்று முன்தினம் ஸ்ரீ ரங்கராஜபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாகாலா அடுத்த நேத்திர குண்டா பகுதியில் உள்ள ஏரியில் மகேஸ்வரி தனது மகனை உடலில் கட்டியபடி பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி நரசப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மகன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகனை உடலில் கட்டிக் கொண்டு குளத்தில் குதித்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதால் திருமண வாழ்க்கை கசந்தது.
    • பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கலிங்கப்பட்டி கீரணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருக்கும் மருங்காபுரி சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் ஜீவானந்தத்துக்கு நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து தம்பதியினர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். திடீரென்று கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதால் திருமண வாழ்க்கை கசந்தது.

    இந்த நிலையில் கணவர் ஜீவானந்தம், மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சின்னையன், குமார், மகாலட்சுமி, கவிதா, கோமதி, பாலசுப்பிரமணியன் வடிவேல், கலையரசி ஆகிய 10 பேரும் சேர்ந்து முத்துலட்சுமியிடம் கூடுதலாக 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர், இந்த அளவுக்கு மீண்டும் நகை, பணம் எனது பெற்றோரால் தர இயலாது. அந்த அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என எடுத்து கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரைத் தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஜீவானந்தம் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கட்டத்தில் தந்தையாக நினைத்த மாமனார் அவரது கொடூர முகத்தை காட்ட தொடங்கினார்.
    • கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மதுராபுரி 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் இன்பராஜ் (வயது 32).

    இவருக்கும் முசிறி சிந்தாமணி தெருவைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட வரதட்சணை வழங்கப்பட்டது.

    இதையடுத்து புதுமண தம்பதியினர் கூட்டு குடித்தனம் நடத்தி வந்தனர். மாமனார், மாமியார், கொழுந்தனார், நாத்தனார் என அனைவரிடமும் அன்பாக பழகிய புதுப்பெண் அனைவரையும் அனுசரித்து நடந்துகொண்ட போதிலும், ஒரு சில மாதங்களில் அவரது வாழ்க்கை கசக்க தொடங்கியது.

    திடீரென்று கணவர் இன்பராஜ், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் மற்றும் 10 பவுன் நகை வாங்கி வருமாறு வற்புறுத்த தொடங்கினார். தனது திருமணத்திற்கே தந்தை கடன்பட்ட நிலையில் அவ்வளவு நகை, பணத்துக்கு எங்கே போவேன் என்று தனது பெற்றோர் நிலையை கணவரிடம் பக்குவமாக எடுத்துக்கூறினார்.

    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத கணவர் மனைவி என்றும் பாராமல் அவரை துன்புறுத்த தொடங்கினார். தினமும் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு வீட்டில் இருந்த அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    நடந்த விபரங்களை பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று நினைத்து கொடுமைகளையும், சித்ரவதைகளையும் பொறுத்துக் கொண்டு கணவருடன் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    ஒரு கட்டத்தில் தந்தையாக நினைத்த மாமனார் அவரது கொடூர முகத்தை காட்ட தொடங்கினார். கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத புதுப்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். கணவரிடம் கூற பயந்து விலகிச்சென்ற அவரை மாமனார் தொடர்ந்து துரத்தினார். இதனால் வீட்டில் இருக்கும்போதெல்லாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தினார். கணவர், மாமனாரின் தாக்குதல்களை தாங்கிக்கொள்ள முடியாத அவர் தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அறிந்தனர். பின்னர் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் இன்பராஜ், பாலியல் தொல்லை அளித்த மாமனார் மோகன்ராஜ், மாமியார் ராஜேஸ்வரி, கொழுந்தனார் மகேஷ், நாத்தனார் பிரேமலதா ஆகிய 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கூட்டு குடும்பத்தில் குதூகலமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் திருமணம் செய்துகொண்டு குடித்தனம் வந்த புதுப்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்
    • கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    உளுந்தூர்பேட்டை அருகே கிரிமேடு கிராமத்தில் வசிப்பவர் சந்திரலேகா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப டுத்தியதால் அவருடன் வாழாமல் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014-ல் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்தார். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி வெங்கடேஷ்குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தி ரலேகாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்திய கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து கோ பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது.
    • மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி மாலதி(20). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் மாலதியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
    • போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26 -ம் தேதி வசுமதி, தனது பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்டு திருமணமாகி வந்த நாளில் இருந்து தன்னிடம், கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி கொடுமை செய்து வருகிறார்கள். என்னை பற்றியும் தவறாக பேசுகிறார்கள். தினமும் டார்ச்சர் செய்வதால் என்னால் இங்கு வாழ முடியாது. என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி கதறி அழுதார்.

    இதனால் அத்தியப்பன் நல்லிபாளையம் சென்று தனது மகள் வசுமதியை அழைத்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு வந்தார். இந்த நிலையில் மன வேதனையில் இருந்த வசுமதி கடந்த 30 -தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வசுமதி பரிதாபமாக உயிரிழந்தார் .

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.

    இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் கைது செய்தால் தான் வசுமதி, உடலை வாங்குவோம் என கூறி உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வசுமதியின் கணவர் வினோத் உள்பட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இன்று 3-வது நாளாக வசுமதியின் பெற்றோர் தனது மகள் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை மகளின் உடலை பெறமாட்டோம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் 3-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் 4 பேரையும் பிடிக்க தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
    • கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஜாமீனில் வந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
    • விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்ட க்குடி கடைவீதி தெரு வைச் சேர்ந்தவர் ராம லிங்கம் (வயது48). இவருக்கும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமண மானது. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரேணுகா இறந்தார். அவரது இறப்பு வரதட்சணை கொடுமை காரணமாக இறந்து விட்டார் என கூறி அவரது சகோதரர் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

    அதன்பேரில் இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர். பின் ஜாமீனில் வெளிவந்த ராம லிங்கம் தொடர்ந்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். தலைமறைவான ராம லிங்கம் நேற்று மீண்டும் தமிழகம் திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது நேற்று சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்ற போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.

    • திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடைபெறவில்லை.
    • தொடர்ந்து என்னை கொடுமைபடுத்தியதால் மீண்டும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி கொடுத்தேன்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை லோகமானியா வீதி மேற்கு பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்.ஆராக வேலை செய்து வருகிறார்.

    இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவுசிக் கொமரலுஹர்சா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது எனது தந்தை ரூ.75 லட்சம் மதிப்பில் தங்க நகை, ரூ.10 லட்சம் வைர நகை, ரூ.10 லட்சத்தில் வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.10 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்தார்.

    இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடைபெறவில்லை. இதுகுறித்து கேட்டபோது ரூ.10 லட்சம் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்றார். நான் அதையும் பெற்று கொடுத்தேன். சிறிது நாட்கள் கழித்து எனது கணவர் என்னை கொடுமைபடுத்த தொடங்கினார்.

    அப்போது மேலும் ரூ.25 லட்சம் வரதட்சணை வேண்டும் என்றார். அதையும் நான் எனது பெற்றோரிடம் இருந்து வாங்கி கொடுத்தேன். இதை வைத்து எனது கணவர் தொழில் தொடங்கினார். ஆனால் அது நஷ்டம் அடைந்தது. பின்னர் மீண்டும் என்னிடம் பணம் கேட்டார். நான் தர மறுத்துவிட்டேன்.

    தொடர்ந்து என்னை கொடுமைபடுத்தியதால் மீண்டும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் வாங்கி கொடுத்தேன். நாட்கள் கடந்தும் எங்களுக்குள் எந்த தாம்பத்ய உறவு நடக்கவில்லை. இதனால் நான் மனவேதனை அடைந்து வந்தேன்.

    சம்பவத்தன்று நான் எனது பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு கேட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் என்னை கொடுமை படுத்தி துன்புறுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பெண்ணின் கணவர் கவுசிக் கொமரலு ஹர்சா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×