search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 years imprisonment"

    • அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
    • வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நடுவர் மனோகரன் தீர்ப்பினை வாசித்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 3 வருடம் சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செஞ்சியை அடுத்த ஊரணி்த்தாங்கலை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுந்தரவடிவேல் விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர்கள் சின்னகுழந்தை மகன் அருணகிரி (வயது 43). சாமிக்கண்ணு மகன் பாலச்சந்திரன் (53). இவர்கள் சுந்தரவடிவேலுவின் அண்ணன் அருணகிரியிடம் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2013-ம் வருடம் நவம்பர் 11-ந்தேதி அருணகிரியும், பாலச்சந்திரனும் சேர்ந்து சுந்தரவடிவேலை ஆபாச மாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த சுந்தரவடிவேல் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக சக்திவேல் ஆஜரானார். அனைத்து கட்ட விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நடுவர் மனோகரன் தீர்ப்பினை வாசித்தார். இந்த வழக்கில் அருணகிரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும், பாலச்சந்திரனுக்கு 2 பிரிவுகளில் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பினால் செஞ்சி நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

    • சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்
    • கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    உளுந்தூர்பேட்டை அருகே கிரிமேடு கிராமத்தில் வசிப்பவர் சந்திரலேகா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப டுத்தியதால் அவருடன் வாழாமல் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014-ல் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்தார். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி வெங்கடேஷ்குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தி ரலேகாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்திய கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து கோ பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர்.
    • விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர்.

    கரூர்

    கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த வர் செல்வகனி, (வயது42)லாரி டிரைவர். கடந்த, 2011 மே மாதம் கரூரில் மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடந்தது.

    அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வ கனி ஓட்டி சென்ற லாரி, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. விபத்தில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி(57) கரூர் ராயனுாரை சேர்ந்த கந்தசாமி (58), ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் லாரி டிரைவர் செல்வகனியை கைது செய்து கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    அதில், லாரி டிரைவர் செல்வ கனிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 31 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து, நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு அளித்தார். லாரி டிரைவர் செல்வகனி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி வடவயல் பகுதியில் கடந்த 21.6.2000 அன்று விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கூடலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 64), பிரபாகரன் (65), ஹரிதாஸ் (62) ஆகிய 3 விவசாயிகளை கைது செய்து, கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சிறை தண்டனை இந்த நிலையில் நேற்று கூடலூர் குற்றவியல் நீதிபதி சசின்குமார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஹரிதாஸ் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • லோகநாதன் குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    • திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையில் உள்ள மணியக்காரர் காம்பவுண்ட்டில் வசிக்கும் தனபால் மகன் லோகநாதன் என தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள மந்திரிபாளையம் கிராமத்தில் கல்லாங்காடு தோட்டத்தில் வசித்து வந்த முத்துசாமி மனைவி பாலாமணி(57). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 26 ந்தேதி குடிக்க தண்ணீர் வாங்க தனது தோட்டத்தில் இருந்து பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது பாலாமணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்ற மர்ம நபர் தப்பியோடினார். அவர் அடுத்த சில நாட்களில் கேத்தனூர் வாகன தணிக்கையின் போது பிடிப்பட்டார். அவர் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையில் உள்ள மணியக்காரர் காம்பவுண்ட்டில் வசிக்கும் தனபால் மகன் லோகநாதன்(27) என தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாலாமணியிடம் தங்க செயினை பறித்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை பல்லடம் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் லோகநாதன் குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    ×