search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி தற்கொலை"

    • வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

    வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தானம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று காலை மது குடித்துவிட்டு வந்த சந்தனத்துடன் தகராறு செய்த வேண்டா ஆவேசத்துடன் அங்கு இருந்த அம்மிக்கலை தூக்கி சந்தனத்தின் தலையில் போட்டார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்தார். இதில் சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.
    • கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெலுகுப்பா, ஜி.டி பள்ளியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் டி.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் தாடி பத்திரி, போக சமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரி (வயது 30) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சோமேஷ் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்தது. மகேஸ்வரி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் நாகேந்திரா மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது. கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார். வெளியே சென்ற மனைவி மற்றும் மகன் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்திட நாகேந்திரா நேற்று முன்தினம் ஸ்ரீ ரங்கராஜபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாகாலா அடுத்த நேத்திர குண்டா பகுதியில் உள்ள ஏரியில் மகேஸ்வரி தனது மகனை உடலில் கட்டியபடி பிணமாக மிதந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி நரசப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மகன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகனை உடலில் கட்டிக் கொண்டு குளத்தில் குதித்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிஷோர்-கோமதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி கோமதி (வயது19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கோமதி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கிஷோர் மனைவி கோமதியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து கர்ப்பிணியான கோமதியை அடித்து துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

    • கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
    • வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கோமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவர் அதே பகுதியை சேர்ந்த கோமதி (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கோமதி 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கிஷோர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மது போதையில் தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

    கடந்த 17-ந் தேதி மீண்டும் கிஷோர் மது போதையில் வீட்டுக்கு வந்து தன் மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

    வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    • பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (60). இவரது மகள் சத்யா (25). பட்டதாரியான இவருக்கும், சிவகிரி அருகே உள்ள சுள்ளிபரப்பை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் சஞ்சய் அருள் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். சஞ்சய் அருள் அவ்வப்போது தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை பார்த்து வந்துள்ளார். சத்யா பிரசவத்துக்கு இன்னும் 7 நாட்களே இருந்தது.

    இந்நிலையில் சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும், அதற்காக கார் எடுத்து கொண்டு வருமாறும் சத்யாவின் தந்தை மருமகன் சஞ்சய் அருளுக்கு நேற்று போன் செய்துள்ளார். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் நாளை மருத்துவமனைக்கு செல்லலாம் என்றும் சஞ்சய் அருள் கூறியுள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த சத்யா வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார். கோபம் ஏற்படும் போதெல்லாம் சத்யா இதுபோல் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவராகவே வெளியில் வந்து விடுவது வழக்கம்.

    அதனால் இப்போதும் சத்யா அவ்வாறு ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்துவிடுவார் என நினைத்து அவரது பெற்றோர்கள் தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் வெகு நேரமாகியும் சத்யா வெளியே வராததால் அவரது தாயார் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

    அப்போது மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சத்யா தொங்கியுள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சத்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சத்யா வயிற்றில் இருந்த குழந்தையை பரிசோதித்த போது குழந்தையும் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    பிரசவத்துக்கு 7 நாட்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 5 மாத கர்ப்பிணி அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஆட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுமுருகன். இவர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி(32). இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ராஜலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்ததும் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    2 பெண்குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×