search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலையில் கணவர் கைது
    X

    திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தற்கொலையில் கணவர் கைது

    • கிஷோர்-கோமதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி கோமதி (வயது19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கோமதி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கிஷோர் மனைவி கோமதியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து கர்ப்பிணியான கோமதியை அடித்து துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×