search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையம்"

    • சிவகங்கை ரெயில் நிலையத்தில் புதிய கட்டமைப்பு பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கடந்த செப்.23-ந் தேதி 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தரக் கோரி நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி நகர்மன்ற தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று மத்திய இணை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சிவகங்கை ரெயில் நிலை யத்தில் நடைபாதை லிப்ட் வசதி, டிஜிட்டல் போர்டு, கழிப்பறை வேலைகள் நடை பெற்று வருகின்றன. இதனை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், அயூப்கான், ராமதாஸ், சரவணன், விஜயகுமார், சண்முக ராஜன், மகேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப க்கழகம் மூலமாக 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு க்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளரிடம் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொது ச்செயலாளர் இளவரி தெரிவித்ததாவது:-

    சரக்கு கொட்டகை பயன்பாட்டிற்கு வருவதற்கு பெரிதும் துணை நின்ற ரெயில்வே அதிகாரி ஹரிக்குமார், அவர்களுக்கும் திருச்சி கோட்ட மேலாளருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் திருத்துறைப்பூண்டியில் ரயில் தலைப்பு (வேகன்) கொண்டு வர பெரு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    வேகன் இயக்கம் மூலம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும், கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் சார்பில் சில நியாயமான கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கை அரசின் கவனத்திற்கு சார்பில் கொண்டு செல்லப்படும் என்றார்.

    • ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
    • முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே தஞ்சாவூர், திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இன்று, நாளை என 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06039) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக நாளை (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்று அடையும்.

    இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண்.06040) நாளை (திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் சென்று 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இந்த ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதியுடன் 2 அடுக்கு ஏசி 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏசி 10 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டி, முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
    • ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 4791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் மற்றும் இதற்கான இடம் தேர்வு மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசின் நிர்வாக அனுமதி இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நிலம் கையகப்படுத்துதல், எல்லைகள் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

    பரந்தூர் புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரெயில் பாதையில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.

    இதைத்தொடர்ந்து ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது. பரந்தூரில் புதிய ரெயில் நிலையம் அமையும்போது ரெயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும். இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரெயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.

    ரெயில்வே வாரியம் ஏற்கனவே மாநிலத்தில் 390 கி.மீட்டர் தூரத்துக்கு 7 வழித்தடங்களில் புதிய ரெயில்வே பாதை அமைக்க அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தனித்தனியே அமர்ந்து வந்தனர். இந்த ரெயிலை வரவேற்க விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ெரயில் நிலை யத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் ஒரே நேரத்தில் குவிந்ததால், திண்டிவனம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீ சார் சுமார் 100-க்கும் மேற் பட்டோர் குவிக்கப்பட்டனர்.

    இதில் விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,பா.ஜ.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி தரம் குழுமம் சின்ராஜ், பா.ஜ.க. நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள்,மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், மாநில நிர்வாகி வக்கீல் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பா.ஜ.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். மேலும் ராகபைரவி கலைக் கூடத்தின் கலை நிகழ்ச்சியும் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரெயில் முன் நின்று பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ெரயில்வே நிலையம் மாவட்டத்தில் மிக முக்கிய மான ெரயில்வே சந்திப்பு நிலையம் ஆகும். அருகில் இருக்கும் நெய்வேலி, பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விருத்தாசலம் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் விழுப்புரம் -திருச்சி இடையே கார்டு லைனில் ஓடும் அனைத்து ெரயில்களும் நின்று செல்லும் முக்கியமான நிலையமாக விருத்தாசலம் உள்ளது.சென்னை -மதுரை இடையே ஓடும் தேஜஸ் விரைவு ெரயிலை தவிர அனைத்து விரைவு மற்றும் அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி- சென்னை இடையே புதிய வந்தே பாரத் ெரயிலை தொடங்கி வைத்தார். இந்த ெரயிலின் கால அட்டவணையில் விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வண்டி நிற்காது என்ற அறிவிப்பு விருத்தாசலம் பயணிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடலூர் மற்றும் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்த நிலையத்திலும் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் -திருச்சி இடையே உள்ள சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த நிலையத்திலும் நிற்காது என்ற அறிவிப்பும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சர், இந்திய ெரயி ல்வே, தென்னக ெரயில்வே மற்றும் ெரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு விருத்தாச்ச லம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு பகலாக பணிகள் தீவிரம்
    • இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. நாகர் நகரில் இருந்து இந்த கேட் வழியாக ஊட்டு வாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்ற னர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பல தேவைகளுக்காக ரெயில்வே கேட்டை கடந்து தான் நாகர்கோவில் செல்ல வேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தின் அருகே கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக தினமும் 40 முறைக்கும் மேல் கேட் அடைத்து திறக்கப்படுகிறது. இதனால் 13 மணி நேரம் வரை கேட் மூடப்பட்டே இருக்கும்.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள், கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளி- கல்லூ ரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அவதிக் குள்ளாகி வருகின்ற னர். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. 8 மீட்டர் அகலத்திலும், 80 மீட்டர் நீளத்திலும், 4½ மீட்டர் உயரத்திலும் சுரங் கப்பாதை அமைக்க திட்ட மிடப்பட்டு பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

    இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது.4 மா தங்கள் வரை கேட் மூடப்ப டும் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஊட்டுவாழ்மடம் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனை தொ டர்ந்து தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் தொடங்கின. ரூ.4½ கோடி மதிப்பிலான இந்த பணிகள் இரவு-பகலாக முழு வேகத்தில் நடந்து வருகிறது. முதலில் சுரங்கப்பாதை அமைய உள்ள பகுதியில் ரெயில்வே தண்டவாளங்களின் கீழ் கர்டர் பாலம் அமைக்க ப்பட்டது. தொடர்ந்து தண்டவா ளத்தின் கீழ் பகுதியில் சுரங்கம் அமைப்ப தற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. ராட்சத எந்திரங்கள் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழையின் காரணமாக சில நாட்கள் பணிகள் பாதிக்கப்பட்டன.

    தோண்டப்பட்ட பள்ளத் தில் மழை நீர் தேங்கியது. அதனை ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளி யேற்றினர். அதன்பிறகு பணிகள் தொடர்ந்து நடை பெற்றன. இதன் காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் பணி முடிவு பெற்று சிமெண்ட் காங்கிரீட் பூச்சு பணி தொடங்கப்பட் டுள்ளது. அடுத்த கட்டமாக மற்றொரு பகுதியிலும் முழுமையாக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்ட் காங்கிரீட் அமைக்கப்படும். அதன்பிறகு சுரங்கப்பாதை யின் இருபுறமும் சுவர் அமைக்கப்பட்டு, மேல் தளமும் பூசப்படும்.

    இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக பணிகள் நடந்து வருவதால் விரைவில் சுரங்கப்பாதை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரட்டை ரெயில் பாதை பணிகள் நாகர்கோ வில்-ஆரல்வாய்மொழி இடையே முடியும் தருவா யில் உள்ளது. தண்டவாள பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், சிக்னல் கம்பங்கள் உள்ளிட்ட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இரட்டை ரெயில் பாதையில் விரைவில் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இயக்கப்பட்டால் பயண நேரம் வெகுவாக குறையும்.

    • மண் பரிசோதனை முடிந்து புனரமைப்பு பணி தொடங்கியது
    • ரெயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ரெயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்ப ரியத்தை பறைசாற்றும் விதமாக நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் கட்ட மாக 50 ரெயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வ ரம், காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதில் கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.49.36 கோடி செலவில் நவீன மயமாக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம் போலும், உள்பகுதி விமான நிலையம் போன்றும் வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படுகிறது.

    மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. விசாலமான கார் பார்க்கிங் வசதி, நவீன பூங்கா, கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், பயணிகள் காத்திருக்கும் ஓய்வு அறைகள், தங்கும் விடுதி கள், கழிவறைகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மண் ஆய்வு பணி முடிவடைந்து உள்ளது. தற்போது உள்கட்ட மைப்புக்கான புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை மேம்படுத்து வதற்கான பசுமை தர பதிவு பணிகள், ஆய்வக பணிகள், தற்காலிக கழிவறையை மாற்றும் பணி, சரக்கு அணுகு சாலையை மாற்றும் பணி போன்றவை நடைபெற்று வருகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. மாஸ்டர் பிளான் மறு சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருக்கிறது. மேப்பின் மற்றும் டோபோ கிராபிகல் சர்வே, ட்ரோன் சர்வே மரம் அகற்றுதல் போன்ற ஆரம்ப கட்ட பணிகள் முடிந்துள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் கம்யூனிஸ்டு சார்பில் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.

    மதுரை மாவட்ட செய லாளர் கணேசன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் விஜய ராஜன் கலந்து கொண்டார். பெரியார் நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

    பெட்ரோல், டீசல். சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தள்ளுபடி ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடந்தது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் குமரவேல், ஜென்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

    பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    மதுராந்தகம்:

    புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு பயணிகள் விரைவு ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வேலை பார்த்து வரும் மதுராந்தகம், செய்யூர், சூனாம் பேடு, பவுஞ்சூர், கூவத்தூர், தச்சூர், பெரும்பாக்கம், எண்டத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினந்தோறும் பயணம் செய்வது வழக்கம்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து காலையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகம் இருக்கும்போது பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துவந்தனர்.

    இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 7.20 மணிக்கு வழக்கம்போல் புதுச்சேரி-சென்னை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்ததால் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் அதில் ஏறமுடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏற முயன்றனர். ஆனால் அதில் ஏற்கனவே இருந்த பயணிகள் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி இருந்ததாக தெரிகிறது. இதனால் பயணிகளால் ரெயிலில் ஏறமுடியாத சூழல் ஏற்பட்டது. ரெயிலும் புறப்பட தயாரானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் மற்றும் சிக்னல் இயக்கும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பின்னால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மேல்மருவத்தூர், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் சமாதானம் பேசி அதில் பயணிகளை ஏற அனுமதித்தனர். பயணிகள் அனைவரும் ரெயிலில் ஏறியதும் சுமார் 30 நிமிடம் தாமதமாக சென்னை நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரெயில் நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது.
    • ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள், கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள், இங்கிருந்து புறப்படும் ரெயில்கள் போன்றவற்றால், பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    அந்த நேரத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். காலையிலேயே பணிகளை தொடங்கும் அவர்கள், தங்களது பணிக்கான உபகரணங்கள் மற்றும் பிளிச்சிங் பவுடர், ஆசிட் போன்றவற்றை ரெயில் நிலையத்தில் படிக்கட்டின் கீழ் உள்ள அறையில் வைத்துள்ளனர்.

    காலையில் பணிக்கு வந்ததும், அந்த அறை கதவை திறந்து பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். பின்னர் மாலையில் அதனை அறையில் வைத்துச் செல்வார்கள்.

    இந்நிலையில் இன்று காலை 6.50 மணியளவில் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நேரத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புகை மூட்டம் வந்ததை பார்த்த பயணிகள் பலரும் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் துப்புரவு பணியாளர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

    தொடர்ந்து அந்த அறையின் பூட்டை திறந்தனர். அப்போது உள்ளே பொருட்கள் தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் மேலும் தீ பரவாமல் நடவடிக்கை எடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அறையில் ஒரு சுவிட்ச் மட்டுமே உள்ளது. அந்த அறை எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். காலையில் துப்புரவு பணிக்கான பொருட்கள் எடுக்கப்பட்ட பிறகு அறையை பூட்டி விடுவார்கள்.

    இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்து அறையை திறப்பதற்கு முன்பே, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×